search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொண்டாட்டம்"

    • எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது
    • ஆரல்வாய் மொழி பேரூராட்சி மன்ற தலைவருமான முத்துக்கமார் தலைமை தாங்கினார்.

    ஆரல்வாய்மொழி,

    அ.தி.மு.க. தொடக்க விழாவை முன்னிட்டு தோவாளை தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பாக ஆரல் வாய்மொழியில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. தோவாளை தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளரும், ஆரல்வாய் மொழி பேரூராட்சி மன்ற தலைவருமான முத்துக்கமார் தலைமை தாங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற துணை தலைவர் சுதா பாலகி ருஷ்ணன், ஒன்றிய ஜெய லலிதா பேரவை துணை செயலாளர் மணிகண்டன், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் வக்கீல் பரமேஸ்வரன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி நிர்வாகி செல்வன், பொதுக்குழு உறுப்பினர் மகாராஜன், தாழக்குடி நகர செயலாளர் பிரம்ம நாயகம், தாழக்குடி பேரூராட்சி மன்ற கவுன்சிலர் ரோகிணி அய்யப்பன், கிளை செயலாளர் அய்யப்பன், கச்சேரி நாகராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • இளைஞர் அணி அமைப்பாளர் சாமிநாதன் இனிப்பு வழங்கினார்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி பகுதியில் பெரியாரின் 145-வதுபிறந்த நாள் விழா கொண்டா டப்பட்டது. குட்லாடம்பட்டி பெரியார் நினைவு சமத்துவ புரம், சந்தை வாசல், தமிழன் லாரி எடை நிலையம் ஆகிய இடங்களில் திராவிட கழகம் சார்பாக நடந்த விழாவிற்கு மாவட்ட காப்பாளர் சு.தனபாலன் தலைமை தாங்கி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து புத்தகங்கள் மற்றும் மதிய உணவு வழங்கினார்.

    உசிலை மாவட்டத் தலைவர் எரிமலை, மேலூர் மாவட்ட செயலாளர் ஜெ.பாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞரணி செயலாளர் தமிழ்மணி வரவேற்றார். மகளிர் அணி மாவட்ட தலைவர் பாக்கியலட்சுமி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். இளைஞர் அணி அமைப்பாளர் சாமிநாதன் இனிப்பு வழங்கினார்.

    இதில் தங்கராஜ், அர்ச்சுதன், கண்ணன், சௌந்தரபாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பகுத்தறி வாளர் கழகம் மாவட்ட துணை தலைவர் கவிஞர் பொன். கலை தாசன் நன்றி கூறினார்.

    அ.தி.மு.க சார்பாக பேரூர் செயலாளர் டாக்டர் அசோக்குமார் பெரியார் சிலைக்கு மாலை அணி வித்தார். தி.மு.க. சார்பாக போடி நாயக்கன்பட்டி குப்புசாமி பெரியார் சிலைக்கு மாலை அணி வித்தார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக வழக்கறிஞர் சந்திரசேகரன் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தார். ஆதித்தமிழர் பேரவை சார்பாக நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார்.

    மாவட்டச் செயலாளர் தமிழ் குமரன் முன்னிலை வகித்தார். தொழிலாளர் அணி மாவட்ட துணைச் செயலாளர் அதியர்பிரிய ன் வரவேற்றார். கலை இலக்கிய பிரிவு மாநிலச் செயலாளர் செல்வ ம் மாலை அணிவித்தார். இதில் முரளி, வீரன், அகத்தியன், முத்து சிவா, ஸ்ரீராம், சிவகுமார், சந்தன மாரி, பழனியம் மாள், பாண்டியம் மாள், கிருஷ்ணா மாள் உட்பட பலர் கலந்து கொண்ட னர். முடிவில் சரவணன் நன்றி கூறினார்.

    • பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • அகில இந்திய சமாதானம் ஒருமைப்பாட்டு கழக மாவட்ட செயலாளர் ஜீவானந்தம், மாவட்ட துணை தலைவர் காசிமாயன், திருப்பதி ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி யினர் மரியாதை செலுத்தப் பட்டது. ம.தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் ஜெய ராமன் தலைமையில் அவைத்தலைவர் சக்திவேல், மாவட்ட துணை செயலாளர் அறிவழகன், ஒன்றிய செய லாளர் பெரியபாண்டி செல்லராஜ், ராமகிருஷ் ணன், நகர் செயலாளர் குமார், பொதுக்குழு உறுப்பி னர்கள் புலிப்பாண்டி, மகேந்திரன், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் உதய ராஜன், எழுமலை காளிதாஸ், டி.கல்லுப்பட்டி பேரூர் செயலாளர் கார்த்திக், இளைஞர் அணி ஜெய பாலன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

    திராவிட கழகம் சார்பில் பொதுக்குழு உறுப்பினர் மன்னர் மன்னன், நகர தலைவர் பவுன்ராஜ், சேடப்பட்டி ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை, மாவட்ட துணை தலைவர் சிங்கராஜ், ஆசிரியர் அணி சுந்தரராஜன் ஆகியோர் மரியாதை செலுத்தினர். விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் விவசாய அணி மாநில துணைச் செயலாளர் தென்னரசு, ஒன்றிய செய லாளர் பழனிச்சாமி, நகர செயலாளர் மாரி, மாவட்ட அமைப்பாளர் கருப்பையா, பண்ணை பாண்டி, மகளிர் அணி பாண்டீஸ்வரி ஆகி யோர் மரியாதை செலுத்தினர்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய சமாதானம் ஒருமைப்பாட்டு கழக மாவட்ட செயலாளர் ஜீவானந்தம், மாவட்ட துணை தலைவர் காசிமா யன், திருப்பதி ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

    • பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
    • அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    திருமங்கலம்

    அ.தி.மு.க பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் திருமங்கலம் தேவர் திடலில் அ.தி.மு.க.வினர் பட்டாசுகளை வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

    மாவட்ட துணைச் செயலாளர் வக்கீல் தமிழ்ச்செல்வம், ஒன்றிய செயலாளர் வக்கீல் அன்பழகன், நகர செயலாளர் விஜயன், மாவட்ட பேரவைச் செயலாளர் சாத்தங்குடி தமிழழகன், மாவட்ட மீனவரணி செயலாளர் சவுடார்பட்டி சரவணபாண்டி, வர்த்தகர் பிரிவு செயலாளர் சதீஸ் சண்முகம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர், ஒன்றிய கவுன்சிலர் கரடிக்கல் ஆண்டிச்சாமி, மாவட்ட ஐ.டி. விங் செயலாளர் சிங்கராஜ் பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் உச்சப்பட்டி செல்வம்.பொதுக்குழு உறுப்பினர் சுமதி சாமிநாதன், மாவட்ட மாணவரணி இணை செயலாளர் வாகைகுளம் சிவசக்தி, பேரவை பாண்டி, வழக்கறிஞர்கள் முத்துராஜா, வெங்கடேசுவரன், காளி, நிர்வாகிகள் சாமிநாதன் கோடீஸ்வரன் செக்கானூரணி சிவன்காளை, காசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
    • அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    மேலூர்

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் செல்லும் என சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

    இதைத்தொடர்ந்து மேலூர் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தமிழரசன் தலைமையில் மேலூர் தெற்கு ஒன்றிய செயலாளரும், மேலூர் யூனியன் சேர்மனுமான பொன்னுச்சாமி கட்சி தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று மேலூர் செக்கடி கக்கன் சிலை முன்பு பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    இதில் மேலூர் நகர்மன்ற உறுப்பினர் திவாகர் தமிழரசன், நகர் பொருளாளர் கந்தசாமி, கிடாரிப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ், தலைமைக் கழக பேச்சாளர் மலைச்சாமி, பேரவை இணைச் செயலாளர் உதயசங்கர், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அரிசி கண்ணன், முன்னாள் நகர செயலாளர் நாகசுப்பிரமணியன், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் ஷாஜஹான், காதர்மைதீன், சக்கரவர்த்தி, பாலகிருஷ்ணன், ராமலிங்கம் மற்றும் நிர்வாகிகள் சீனிவாசன், தவபாண்டி, வழக்கறிஞர்கள் பாண்டிச்செல்வம், கண்ணன், திருமேனி, அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் அர்ச்சுனன், கிடாரிப்பட்டி கூட்டுறவு சங்க தலைவர் ராமகிருஷ்ணன், வட்ட செயலாளர்கள் பாண்டித்துரை, சரவணன், திருநாவுக்கரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×