search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூலிதொழிலாளி சாவு"

    • பாண்டமங்கலத்தை சேர்ந்தவர் குணசேகரன் (55) கூலி தொழிலாளி. இவரது மனைவி ராதா. இவர்களுக்கு ஐயப்பன், விக்னேஸ்வரன் என்ற 2 மகன்கள் உள்ளனர்.
    • இந்த நிலையில் நேற்று முன்தினம் மது குடித்து விட்டு வீட்டிற்கு நடந்து சென்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்கலத்தை சேர்ந்தவர் குணசேகரன் (55) கூலி தொழிலாளி. இவரது மனைவி ராதா. இவர்களுக்கு ஐயப்பன், விக்னேஸ்வரன் என்ற 2 மகன்கள் உள்ளனர். குணசேகரன் அடிக்கடி மது குடித்து விட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மது குடித்து விட்டு வீட்டிற்கு நடந்து சென்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதை பார்த்த அவ்வழியாக வந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வர வழைக்கப்பட்டு அவரை காப்பாற்றி பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குணசேகரன் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எதிரே வந்த பைக் எதிர்பாராதவிதமாக அண்ணாத்துரை மீது மோதியது.
    • இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்துள்ள கெங்கபராம்பட்டு பகுதியை சேர்ந்தவர் அண்ணாத்துரை (வயது49). கூலி தொழிலாளியான இவர் நேற்று ஊத்தங்கரை-திருப்பத்தூர் சாலையில் ஒப்பாரப்பட்டி பள்ளி அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே வந்த பைக் எதிர்பாராதவிதமாக அண்ணாத்துரை மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

    இது குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அரசூர் கிராமத்தைச் சேர்ந்த பாபு என்கிற சிட்டிபாபு.
    • திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சா லையை கடக்க முயன்றார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அரசூர் கிராமத்தைச் சேர்ந்த பாபு என்கிற சிட்டிபாபு (38) கூலி தொழிலாளி. இவர் நேற்று இரவு கடைக்கு சென்று பொருட்கள் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வரும் போது திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சா லையை கடக்க முயன்றார். அப்போது காரைக்குடி யில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் சிட்டிபாபு மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சிட்டிபாபு உயிரிழந்தார். இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார், சப்-இன்ஸ்பெக்டர் பிரபு வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.

    ×