search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூட்டுறவு கடன் சங்கம்"

    • கூட்டுறவு கடன் சங்கங்களில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.
    • மேலும் விபரங்களை விருதுநகர் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய இணைய தளத்தில் (vnrtrb.net) தெரிந்து கொள்ளலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர், விருதுநகர் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய தலைவர் வெளியுட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்ப தாவது:

    கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட் டி ன்கீழ் இயங்கும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர வங்கிகள், நகர கடன் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட ஏதுவாக விருதுநகர் மாவட்ட ஆ ள் சேர்ப்பு நிலையத்தால் கடந்த 10-ந் தேதி அறிவிக்கை வெளியிடப் பட்டுள்ளது.

    தேர்வுக்கு தகுதிபெற்ற விண்ணப்ப தாரர்களிடமிருந்து vnrtrb.net என்ற இணையதளம் வழியாக மட்டுமே வருகிற டிச.1-ந் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். இதற்கான எழுத்துத் தேர்வு டிச.24-ந் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை விருதுநகர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் நடத்தப்படவுள்ளது.

    வைகுந்த் மேத்தா தேசிய கூட்டுறவு நிறுவனம் புனே வழங்கும் முதுநிலை வாணிப மேலாண்மை கூட்டுறவு பட்டம், பல்கலை கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலை கழகத்தால் வழங்கப்படும் கூட்டுறவில் முதுநிலை பட்டப்படிப்பு படித்த வர்களும், கூட்டுறவு மேலாண்மை பயிற்சி முடித்து தேர்வு முடிவுகள் நிலுவையில் இருப்ப வர்களும் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்க ளில் 2023-24-ம் ஆண்டு நேரடி பயிற்சி அஞ்சல்வழி பகுதிநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு சேர்ந்துள்ள வர்களும் இப்பணிக்கு சான்று கட்டணம் செலுத்தியதற்கான ரசீதினை விருதுநகர் மாவட்ட ஆள்சேர்ப்பு இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம்.

    முற்பட்ட வகுப்பினருக் கான வயது வரம்பு 32 ஆகும். ஏனைய அனைத்து பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை. எழுத்து தேர்வு, பட்டப் படிப்பு நிலையிலான தரத்துடனும், கூட்டுறவு மேலாண்மை, கூட்டுறவு நிதி மற்றும் வங்கியியல், கணக்கியல், கணினி அறிவு, தமிழ் போன்ற பாடங்களை உள்ளடக்கியதாகவும் இருக்கும். எழுத்து தேர்வு கொள்குறி வகையில் 200 வினாக்களுடன் 170 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.

    எழுத்து தேர்வு மதிப்பெண் மற்றும் நேர்முக தேர்வுக்கான மதிப்பெண் 85:15 என்ற விகிதத்தில் இருக்கும். ஒட்டுமொத்த மதிப்பெண், இட ஒதுக்கீடு, இன சுழற்சி முறை, முன்னுரிமை விருப்ப சங்கம் ஆகியவற்றின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு உரிய சங்கத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படுவார்கள். மேலும் விபரங்களை விருதுநகர் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய இணைய தளத்தில் (vnrtrb.net) தெரிந்து கொள்ளலாம்.   

    • தமிழ்நாட்டில் பொங்கல் தொகுப்பு முதல் நாள் அன்று 24 சதவீதம் வழங்கப்பட்டுவிட்டது.
    • குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் தொகுப்புகள் முறையாக வழங்கப்படுகிறதா.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா மருதூர் தெற்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்சங்கத்தில் தமிழ்நாடு கூட்டுறவுசங்களின் கூடுதல் பதிவாளர் குமார் ஆய்வு செய்தார் ஆய்வின்போது குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கபடும் பொங்கல் தொகுப்புகள் முறையாக வழங்கப்படுகிறதா எனவும் அரிசி, சீனி, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அளவு சரியாக உள்ளதா எனவும் பொதுமக்களிடம் கேட்டறிந்தார் பின்பு கூட்டுறவு சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுசெய்து கிராமபு ரத்தில் 4 கோடி ருபாய் டெபாசிட் வைத்து சிறப்பாக பொதுமக்களக்கு சேவையாற்றும் மருதூர் தெற்கு கூட்டுறவு சங்க அதிகாரிகளைபாராட்டினர்

    பின்பு கடந்த ஆண்டு நவம்பர் 12ந் தேதிஇந்த வங்கியில் நடைபெற்ற வங்கி கொள்ள முயற்சி குறித்து கேட்டறிந்தார் பின்பு தற்போது வங்கிக்குகூடுதல் பாதுகாப்பு காவலர் அறை ஆகியவற்றை பார்வை யிட்டார் ஆய்வின்ன்போது மண்டல இணை பதிவாளார் அருள் அரசு, கூட்டுறவு சார்பதிவாளர் சண்முகபிரியா கூட்டுறவு சங்க தலைவர

    சோமசுந்தரம் இயக்குனர் உதயம் முருகையன் செயலாளர்கள் அசோகன்' வீரமணி உள்ளிட்ட கூட்டுறவு துறை அதிகாரிகள் கலந்துகொண்டார் இதே போல் வாய்மேடு, தகட்டூர், ஆயக்காரன்புலம், ஆதனூர், வேதாரண்யம்-தேத்தாகுடி தெற்கு உள்ளிட்ட கூட்டுறவு கடன் சங்கத்திலும் ஆய்வு மேற்கொண்டர் பின்பு செய்தியாளர்களிடம் கூட்டுறவு சங்கத்தின் கூடுதல் பதிவாளர் குமார் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் பொங்கல் தொகுப்பு முதல் நாள் அன்று 24 சதவிதம் வழங்கப்பட்டுவிட்டது நேற்று வரை 70 சதவீதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கபட்டுவிடும் என்றார்

    • கடலாடி ஒன்றியத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
    • கடந்தாண்டு எந்தவித தட்டுப்பாடின்றி உரங்கள் வழங்கியும் விவசாயிகளுக்கு முழு கடன் தொகையும் வழங்கி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டன.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியத்தில் கடலாடி சாயல்குடி நரைப்பையூர், எஸ்.தரைக்குடி, டி.எம்.கோட்டை, பிள்ளையார் குளம், மேலக்கிடாரம், சிக்கல், ஏ. புனவாசல், பூக்குளம், ஆப்பனூர், உச்சிநத்தம், உள்ளிட்ட கிராமங்களில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

    கடலாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு இச்சங்கங்கள் பயிர் கடன் வழங்கி வருகின்றன. ஆனால் தற்போது குறிப்பிட்ட விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டதாகவும், அவர்களுக்கு தர வேண்டிய உரங்களை வழங்கவில்லை எனவும் இந்தப்பகுதி விவசாயிகள் வேதனையோடு தெரிவித்து வருகின்றனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடலாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் விவசாயிகள் விதைத்து பயிர்கள் நன்றாக முளைத்து வந்துள்ளன. இப்பகுதியில் உள்ள கண்மாய்களில் தண்ணீர் இல்லை என்றாலும் வயல்களில் தண்ணீர் அதிகமாக உள்ளது. தற்போது வயல்களில் உள்ள நெல் பயிருக்கு யூரியா மற்றும் அடி உரமாக டி.ஏ.பி. போட்டால் பயிர்கள் நன்றாக வளர்ந்து மகசூல் தரும்.

    தனியார்கள் உரங்களை அதிகமாக விற்பனை செய்வதால் விவசாயிகள் இந்தப்பகுதியில் அதிகமா னோர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் பெற்று விவசாயம் செய்து வருகின்றனர். கூட்டுறவு கடன் சங்கங்களில் உரம் மற்றும் டி.ஏ.பி. வழங்கியும் மீதமுள்ள கடன் தொகை விவசாயிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்படுவது வழக்கம்.

    கடந்தாண்டு எந்தவித தட்டுப்பாடின்றி உரங்கள் வழங்கியும் விவசாயிகளுக்கு முழு கடன் தொகையும் வழங்கி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டன.

    ஆனால் இந்த ஆண்டு இப்பகுதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கள அலுவலர்களால் முறையாக மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து இப்பகுதி விவசாயிகளுக்கு முறையாக உரங்கள் வழங்காமல் கடன் தொகை முழுவதும் விவசாயிகளுக்கு வழங்கா மலும் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் விவசாயம் பாதிக்கும் நிலை உருவாகி வருகிறது.

    நல்ல மழை பெய்து கொண்டிருக்கும் போது வயல்களில் தண்ணீர் இருக்கும்போது உரிய நேரத்தில் உரங்கள் இடவில்லை என்றால் பயிர்கள் வளர்ச்சி குன்றி மகசூல் தராது. பயிர்க்கடன் மேளாவை நடத்தினால் மட்டும் போதாது. உரிய நேரத்தில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் முழுவதையும் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் வழங்கினால் மட்டுமே விவசாயிகள் பயன்பெறுவர். விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் வழங்கினால் அவர்கள் உரிய நேரத்தில் கடன்களை கூட்டுறவு கடன் சங்கங்களில் திருப்பி செலுத்துவதற்கு ஏதுவாக இருக்கும். விவசாயிகள் பணம் செலுத்தினால் மட்டுமே கூட்டுறவு கடன் சங்கங்கள் வளர்ச்சி அடையும்.

    எனவே மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் உரத்தட்டுப்பாட்டை போக்கி விவசாயிகளுக்கு கடன் தொகை முழுவதையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×