search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழு"

    • புகளூர் சர்க்கரை ஆலையில் அதிகாரிகள் குழு நேரில் ஆய்வு செய்தனர்.
    • விரைந்து சரி செய்து தருவதாக நிர்வாகம் உறுதி

    கரூர்:

    கரூர் மாவட்டம், புகளூரில் ஈ.ஐ.டி பாரி சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் புகளூர் வாய்க்காலில் கலப்பதால் தொற்று நோய் பரவும் அபாயமும், விவசாயமும் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆலையில் இருந்து வெளியேறும் கரி துகள்களால் மாசு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 7-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து நேற்று புகளூர் தாசில்தார் மோகன்ராஜ், புகளூர் நகராட்சி தலைவர் நொய்யல் சேகர் என்கிற குணசேகரன், துணைத் தலைவர் பிரதாபன், நகராட்சி ஆணையர் கனிராஜ், காவல் ஆய்வாளர் வினோதினி மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் சர்க்கரை ஆலைக்குள் அதிரடியாக சென்று ஆய்வு செய்தனர்.

    அப்போது ஆலையில் இருந்து கரி துகள்கள், கரும்பு சக்கை துகள்கள் வெளியேறுவதையும், ஆலையின் கழிவு நீர் புகளூர் வாய்க்காலில் கலக்கப்படுவதையும் பார்வையிட்டனர். அப்போது ஆலை நிர்வாக நிர்வாகிகள் அனைத்தையும் விரைந்து சரி செய்து தருவதாக உறுதி அளித்தனர். பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை பாதிக்காதவாறு விரைந்து சரி செய்து கொடுக்குமாறு ஆலை நிர்வாகத்திடம் வலியுறுத்தினர்.

    சேலத்தில் 2-வது நாளாக தமிழக சட்டப்பேரவை மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு நடத்தினர்.

    சேலம்:

    தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு தலைவர் டி.ஆர்.பி ராஜா எம்.எல்.ஏ தலைமையில் மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அருள், அன்பழகன், ஈஸ்வரன், எழிலரசன், செந்தில்குமார், பாலசுப்ரமணியம், முகமது ஷாநவாஸ், செல்லூர் ராஜூ ஆகியோர் சேலம் மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

    பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இன்று 2-வது நாளாக சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுவினர் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் நடைபெற்று வரும் பணிகளையும், உயிரினங்களையும் பார்வை–யிட்டனர்.

    பின்பு வன குடியிருப்பாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.அதனைத் தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சேலம் பழைய பேருந்து நிலையம் கட்டிடம் மற்றும் வணிக வளாகம், கார் பார்க்கிங் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    எருமாபாளையத்தில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கையும் பார்வையிட்டனர். சேலம் மாநகராட்சியில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை பார்வையிட்டு பின்னர் கலெக்டர் அலுவ–லகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினர்.

    இந்த ஆய்வின்போது கலெக்டர் கார்மேகம், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ, சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன், துணைச் செயலாளர் சிவகுமரன் மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா, மண்டல குழு தலைவர்கள் கலையமுதன், உமாராணி, அசோக் டெக்ஸ் அசோகன், தனசேகர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    ×