search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழு"

    மலையாளபட்டியில் உழவர் உற்பத்தியாளர் குழு அமைப்பு

    பெரம்பலூர், 

    பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியில் வருகிற 25-ந்தேதி ப்ளஸ்மேக்ஸ் உழவர் உற்பத்தியாளர் நிறுவன தினசரி காய்கறி சந்தை திறக்கப்பட உள்ளது.

    தலைவாசல், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ளது போல் பிரம்மாண்டமாக காய்கறிசந்தை திறக்கப்பட்டு இங்கிருந்து கோயம்பேடு மார்க்கெட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 30 ஆயிரம் விவசாய குடும்பங்கள் பயன் பெற போகின்றனர். நமது மாவட்ட விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவேண்டும் என்ற உயரிய நோக்கோடு டத்தோ பிரகதீஸ்குமார் இதனை முன்னெடுத்து வருகிறார்.

    இதனால் ஒவ்வொரு கிராம பகுதி விவசாயிகளும் இந்த குழுவில் தன்னெழுச்சியாக இணைந்து வருகின்றனர்.அதன்படி மலையாளபட்டியில் பகுதியில் 5 பிளஸ்மேக்ஸ் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைத்து பெயர்ப்பலகை திறக்கப்பட்டது. டத்தோ பிரகதீஸ்குமார் பெயர்ப்பலகையை திறந்துவைத்து விவசாயிகள் மத்தியில் பேசினார்.அப்போது அவர்,விவசாயத்தில் முன்பு போல் லாபம் என்பது இல்லை. உங்களது பிள்ளைகளை சொந்தமாக தொழில் தொடங்க ஊக்கப்படுத்துங்கள். நான் மட்டும் உயர்ந்த இடத்திற்கு வந்தால் போதாது.

    நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் என்பதால் விவசாயிகள் படும் கஷ்டம் எனக்கு நன்றாக தெரியும்.எனவே நம்பகுதி விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது.அதனால் காய்கறிசந்தை திறப்பு விழாவிற்கு குடும்பத்துடன் வரவேண்டும்.இவ்வாறு டத்தோ பிரகதீஸ்குமார் பேசினார்.முன்னதாக அங்குள்ள கோவிலில் டத்தோ பிரகதீஸ்குமார் உள்ளிட்டோர் வழிபாடு செய்தனர்.இந்த நிகழ்வில் மலையாளபட்டி பகுதி விவசாயிகள் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்

    • ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு கணினி வழங்கிய பள்ளி மேலாண்மை குழு
    • கணிப்பொறியை பெற்றுக் கொண்ட ஆசிரிய பெருமக்கள்

    கந்தர்வகோட்டை,  

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை ப்பள்ளி அக்கச்சி ப்பட்டிக்கு பள்ளி மேலா ண்மை குழு மூலம் கணி ப்பொறி வழங்கினர்.

    பள்ளிமே லாண்மைக்குழு விற்கு கணிப்பொறி தேவை என்று தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி கோரிக்கை வைத்தார். அப்போது பள்ளி மேலாண்மைகுழு மூலம் கணிப்பொறி வழங்கு வதாக உறுதியளி த்தனர்.

    அதன்படி தற்போது பள்ளி மேலாண்மை குழு மூலம் கணிப்பொறியை பள்ளி மேலாண்மை குழு மூலமாக கல்வியாளர் மருத்துவர் சுவாமிநாதன், ஊராட்சி மன்ற தலைவர் கங்காதரன், பள்ளி மேலாண்மை குழு தலைவி இலக்கியா, உறுப்பினர்கள் உள்ளிடோர் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பெருமக்களிடம் வழங்கி னார். கணிப்பொறியை பெற்றுக் கொண்ட ஆசிரிய பெருமக்கள் பள்ளி மேலாண்மை குழுவினருக்கு நன்றி தெரிவித்தனர்.

    • பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் எச்சரிக்கை:விஜயின் “லியோ” திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளை கண்காணிக்க
    • குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

    பெரம்பலூர், 

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

    நடிகர் விஜய் நடித்த 'லியோ' தமிழ் திரைப்படம் திரையரங்குகளில் திரையிடுவது தொடர்பாக தமிழக அரசு கடந்த 13-ந் தேதி அன்று சிலகட்டுப்பாடுகளுடன் அரசாணை பிறப்பித்துள்ளது.

    அதன்படி வருகிற 19-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை திரையரங்குகளில் சிறப்புகாட்சி உட்பட தினசரி 5 காட்சிகள் 'லியோ' படத்தை திரையிடவும், காலை 9 மணிக்கு தொடங்கி அதிகாலை 1.30 மணிக்குள் 5 காட்சிகளை முடிக்க வேண்டும் எனவும் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

    மேலும் திரைப்படத்தை திரையிடும் திரையரங்கு உரிமையாளர்கள், திரைப்படம் காணவரும் பொதுக்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் போக்குவரத்து சீராக செல்ல ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும், அதிக கட்டணத்துக்கு டிக்கெட்டுகள் விற்பனை செய்யக்கூடாது எனவும், கட்டுப்பாடுகள் விதித்து ள்ளது.

    மேலும் இந்த அரசு ஆணை தொடர்பாக கண்காணிக்க சிறப்புகுழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    அதன் பேரில் பெரம்பலூர் மாவட்டத்தில் வருகிற 19ம் முதல் 24ம் தேதி வரையில் 'லியோ' திரைப்படம் திரையிடப்படும் திரையரங்கு உரிமையா ளர்கள் மற்றும் நிர்வாகிகள் அரசு வகுத்துள்ள கட்டுப்பா டுகளை கடைபிடிக்க வேண்டும் எனவும், திரையரங்கிற்கு வரும் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடங்கள் சிறந்தமுறையில் அமைத்திட வேண்டும் எனவும், திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள் நடத்தப்படும் நேர்வில் சுகாதார குறைபாடு கள் மற்றும் கூட்ட நெரிசல் ஏதும் ஏற்படாவண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும், திரையரங்கு களை சுகாதாரமாக பராமரிக்க போதுமானகால இடைவெளியுடன் உரிய பாதுகாப்பு நடைமுறை களுடன் சிறப்புகாட்சி நடத்தப்பட வேண்டும் எனவும், மேலும் அரசு அனுமதி அளித்துள்ள காலை 9 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1.30 மணிக்குள் திரைப்படத்தை முடித்துக் கொள்ள வேண்டும் எனவும், அதிககட்ட ணத்துக்கு டிக்கெட்டுகளை விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், திரையரங்க உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

    இதற்காக பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு கண்காணிப்புகுழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க பெரம்பலூர் வட்டாட்சியர் 9445000610, வேப்பந்தட்டை வட்டாட்சியர் 9445000611 மற்றும் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் 9445000458 என்ற எண்களில் புகார் தெரிவிக்க லாம். அரசு விதித்துள்ள மேற்கூறிய கட்டுப்பாடுகளை மீறி செயல்படும் திரையரங்குகள், அதன் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் திரையரங்கு களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை செய்யப்படு கிறது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

    • தஞ்சாவூரில் சரபோஜி மன்னர் கட்டிடம் ரூ. 9.12 கோடி மதிப்பிட்டில் கட்டப்பட்டது.
    • தற்போது நடப்பது முடியாட்சி அல்ல குடியாட்சி.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அரண்மனை வளாகம் சார்ஜா மாடி கட்டிடம் புதுப்பித்தல் மற்றும் மறு சீரமைக்கும் பணிகள், தர்பார் மண்டபம் புதுப்பிக்கும் பணிகள் மற்றும் பலவேறு இடங்களில் தமிழ்நாடு சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் குழுவினர் ஆய்வு செய்தனர்.

    பின்னர் குழு தலைவர் செல்வப் பெருந்தகை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூரில் சரபோஜி மன்னர் கட்டிடம் ரூ. 9.12 கோடி மதிப்பிட்டில், பதினெட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

    இந்த கட்டிடம் புணரமைப்பு கவர்னர் அறிவிப்பின்படி என எழுதியுள்ளனர்.

    பலகை வைக்கப்பட்டுள்ளது. கவர்னர் அறிவிக்கவில்லை,தமிழக முதல்வர் தான் அறிவித்தார். அதை மாற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளோம்.

    அதிகாரிகள் இனிவரும் காலங்களில் இது போன்ற தவறுகளை செய்யக்கூடாது என அறியுறுத்தியுள்ளோம்.

    கவர்னர் தமிழக அமைச்சரவை எழுதிக் கொடுப்பதை படிப்பவர்தான்.

    அவர் சட்டம் தீட்ட முடியாது. அவர் என்றும் தனி தர்பார் நடத்த முடியாது.

    தர்பார் நடத்தியவர்கள் எல்லாம் இன்று இல்லை .மராட்டியர்கள், நாயக்கரகள், கிருஷ்ணதேவராயர், சத்ரபதி சிவாஜி போன்றவர்கள் படையெடுத்தனர்.

    இப்போது யாரும் படையெடுக்க முடியாது.

    தற்போது நடப்பது முடியாட்சி அல்ல குடியாட்சி.எனவே இங்கு மக்களாட்சி நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

    எனவே அதில் கவர்னர் பெயரை அகற்ற சொல்லியுள்ளோம்..

    பொது தணிக்கை குழு, வழங்கிய பட்டியலின் அடிப்படையில், கடந்த காலங்களில் எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது.

    விரைய செலவு,காலதாமதத்தை தவிர்க்க வேண்டும்.

    உலக வங்கிகளில் வட்டிக்கு தான் கடன் வாங்கிறோம்.

    திட்டத்திற்கான பணத்தை எடுத்து செலவு செய்யாமல் இருப்பதை தவிர்க்க ஆய்வு செய்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து சட்டப்பேரவை பொது கணக்கு குழுவினர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை உள்பட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர்.

    • சிவகங்கை மாவட்டத்திற்கு சட்ட பேரவை உறுதிமொழிக்குழு நாளை வருகை தருகிறது.
    • அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெறும்.

    சிவகங்கை

    தமிழ்நாடு சட்ட பேரவையின் 2023-24-ம் ஆண்டிற்கான அரசு உறுதிமொழி குழுத்தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் தலைமையில், குழு உறுப்பினர்களான எம்.எல்.ஏ.க்கள் அண்ணாதுரை, அருள், கருணாநிதி, சக்கரபாணி , பழனியாண்டி , மணி , மனோகரன், மோகன் , ராமலிங்கம், வில்வநாதன், ஜெயக்குமார் ஆகியோருடன் வருகிற நாளை (22-ந்தேதி) சிவகங்கை மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் கீழ் நிறைவேற்றப்பட்டுள்ள மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து, ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

    அதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், அனைத்துத்துறை அரசு முதல்நிலை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டமும் நடைபெறும். இந்த தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.

    • வைகாசி பிர மோற்சவ விழா நடைபெற்று வருகிறது.
    • சிறப்பு அலங்காரத்தில் சுவாமி- அம்பாள் தேரில் எழுந்தருளினர்.

    நீடாமங்கலம், கும்பகோணம் அருகே வலங்கைமானில் தையல்நாயகி அம்பாள் சமேத வைத்தீ ஸ்வரர் கோவில் (செவ்வாய் பரிகார தலம்) உள்ளது.

    இக்கோவில் வைகாசி பிர மோற்சவ விழா நடைபெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

    முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் சுவாமி- அம்பாள் தேரில் எழுந்தருளினர். அதனைத் தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தேரானது முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவிலை வந்தடைந்தது.

    விழாவில் அறங்காவலர் குழு தலைவர் சிவராமகிருஷ்ணன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் குணசேகரன் மற்றும் பாலகிருஷ்ணன், ராஜராஜசோழன், கரிகால சோழன், எடை மெஷின் பாலு, தவில் மாரிசாமி, வைத்தீஸ்வரர் நற்பணி மன்ற மகேஷ், பாலாஜி மற்றும் குழுவினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கடந்த 34 ஆண்டுகளாக இந்த கோவிலில் திருவிழா நடைபெறவில்லை.
    • இருதரப்பினரும் தலா 6 பேர் கொண்ட பட்டியல் வழங்கி உள்ளனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கள்ளிப்பாளையம் கிராமத்தில் தர்மராஜா திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. சுமார் 300ஆண்டுகள் பழமையான இந்த கோவில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலில் கள்ளிப்பாளையம், வலையபாளையம், துத்தேரிபாளையம். உள்ளிட்ட கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர். கடந்த 34 ஆண்டுகளாக இந்த கோவிலில் திருவிழா நடைபெறவில்லை.

    இந்தநிலையில் தற்போது மீண்டும் விழா நடத்த மேற்படி 3 கிராமத்தை சேர்ந்த மக்கள் தீர்மானித்தனர்.இந்த நிலையில் ஒரு தரப்பினர் எங்களை கலந்து ஆலோசிக்கவில்லை எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று முன்தினம் பல்லடம் தாலுக்கா அலுவலகத்தில், இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் இன்று (நேற்று) இருதரப்பினரும் குழு தேர்வு செய்து பட்டியல் வழங்குவதாக கூறிச் சென்றனர். இந்த நிலையில்,நேற்று பல்லடம் தாசில்தாரிடம் இரு தரப்பினரும் பட்டியல் வழங்கினர். இது குறித்து தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார் கூறியதாவது:-. இருதரப்பினரும் தலா 6 பேர் கொண்ட பட்டியல் வழங்கி உள்ளனர். இதனை சப்- கலெக்டருக்கு அனுப்பி வைத்து அவரது அறிவுறுத்தலின்படி விழா கமிட்டி தேர்வு செய்து, கோவில் விழா சிறப்பான முறையில் நடத்தப்படும் என்றார். இதற்கிடையே பல்லடம் இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில், கள்ளிப்பாளையத்தை சேர்ந்த ஒரு தரப்பினர் தங்களை விழாக்குழுவில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை மனு அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

    • பழைய நகைக்கு புதிய நகை மாற்றி தருவது போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை அறிவித்தது.
    • 10 பேர் கொண்ட குழுவினர் தஞ்சையில் உள்ள நகை கடைக்கு வந்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருக்காட்டுபள்ளி ஆகிய இடங்களில் பிரபல தனியார் நகைக்கடை செயல்பட்டு வந்தது.

    இந்த நகை கடையில் சிறுசேமிப்பு திட்டம், நகைகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும், வீட்டுமனை சிறுசேமிப்பு திட்டம், பழைய நகைக்கு புதிய நகை மாற்றி தருவது போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை அறிவித்தது.

    இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இங்கு முதலீடு செய்தனர்.

    இந்த நிலையில் ஒரத்தநாடு கிளையில் சிலர் அடமானம் வைத்த நகைகளை மீட்க சென்றனர்.

    அப்போது கடையில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் அனைத்தையும் கடை ஊழியர்கள் எடுத்து கொண்டு காலி செய்து விட்டதாக கூறப்படுகிறது.

    இந்த தகவல் அப்பகுதியில் பரவியதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் கடைகளின் முன் முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதேப்போல் பட்டுக்கோட்டை, தஞ்சை, திருக்காட்டுப்பள்ளியில் உள்ள நகைகடைகளும் பூட்டப்பட்டதால் அந்தந்த பகுதியில் உள்ள பொதுமக்களும் நகைக்கடை உரிமையாளர் மீது போலீஸ் நிலையங்களில் புகார் அளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கடையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் சிலரை கைது செய்தனர்.

    மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

    இதைத் தொடர்ந்து அந்த நான்கு நகைக் கடைகளும் பூட்டி சீல் வைக்கப்பட்டன.

    இந்த நிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்ட நகைக் கடைகளில் ஏதாவது நகைகள், ஆவணங்கள் உள்ளதா என்று சோதனை செய்ய பட்டுக்கோட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

    அதன் அடிப்படையில் இன்று தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அகிலாண்டேஸ்வரி தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் தஞ்சையில் உள்ள நகை கடைக்கு வந்தனர்.

    கடையின் உள்ளே நகைகள், ஆவணங்கள் ஏதும் உள்ளதா என சோதனை செய்து வருகின்றனர். மேலும் உரிமையாளர் ஏதாவது பொருளை மறைத்து வைத்துள்ளாரா எனவும் ஆய்வு செய்தனர்.

    மேலும் சோதனை நடைபெறும் போது உள்ளே யாரையும் அனுமதிக்கவில்லை.

    பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இந்த சோதனை முடிவடைந்த பின்னர் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள அந்த நகைக்கடையில் சோதனை செய்ய உள்ளனர்.

    • மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில் இளைஞர் திறன் மேம்பாட்டு பயிற்சி தொடக்க விழா.
    • 36 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் சி.க.சு. அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில் இளைஞர் திறன் மேம்பாட்டு பயிற்சி தொடக்க விழாவும், பயிற்சி பெற்றவர்களுக்கு பணி ஆணை மற்றும் சுய உதவி குழுக்களுக்கு உதவித்தொகை வழங்கும் விழா மாவட்ட கூடுதல் கலெக்டர் பிரித்விராஜ் தலைமையில் நடைபெற்றது.

    வேதாரண்யம் நகராட்சி தலைவர் புகழேந்தி முன்னிலை வகித்தார். விழாவில் இளைஞர் திறன் மேம்பாட்டு பயிற்சியில் கோயம்புத்தூர், நாகை, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த 11 நிறுவனங்கள் 421 பேரை நேர்காணல் செய்து 171 பேருக்கு பணி ஆணையையும், வேதாரண்யம் ஒன்றியத்தில் உள்ள 36 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி மற்றும் வாழ்வாதார தொகுப்பு நிதி வங்கி கடன் மூலம் ரூ. 36 லட்சத்துக்கான காசோலையையும் கூடுதல் கலெக்டர் பிரித்விராஜ், நகராட்சி தலைவர் புகழேந்தி ஆகியோர் வழங்கினர்.

    விழாவில் திறன் வளர்ப்பு உதவி இயக்குனர் செந்தில்குமாரி உள்பட ஒருங்கிணைப்பாளர்களும், பல்வேறு நிறுவனங்களின் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

    அனைவரையும் மகளிர் திட்ட உதவி அலுவலர் முருகேசன் வரவேற்றார். முடிவில் உதவி திட்ட அலுவலர் பாலன் நன்றி கூறினார்.

    • நீதிமன்ற உத்தரவையடுத்து கலெக்டர் நடவடிக்கை
    • மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அமைந்துள்ள இயற்கை அருவிகளின் நீர்ப் பாதையை மாற்றி செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்குவது முற்றிலும் சட்டவிரோதமான செயல்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையோ ரங்களில் இயற்கை நீரோட் டத்தை மாற்றிசெயற்கைநீர் வீழ்ச்சிகள் ஏற்படுத்தப்பட் டுள்ளதா என்பதை கண்ட றியவும், கண்காணி னிக்கவும் மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப் பட்டுள்ளது.

    சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளையில் தொடரப்பட்ட பொது நல வழக்கு ஒன்றில் வழங்கப் பட்ட தீர்ப்பில் தனியார் வசம் உள்ள எஸ்டேட் மற்றும் ரிசார்ட் போன்ற நிறுவனங்கள் தனிநபர்கள், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அமைந்துள்ள இயற்கை அருவிகளின் நீர்ப் பாதையை மாற்றிசெயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக் குவது முற்றிலும் சட்டவி ரோதம் ஆன செயல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இயற்கை நீரோட்டத்தை மாற்றி செயற்கை நீர்வீழ்ச்சிகளை ஏற்படுத்திய தனியார் எஸ்டேட் மற்றும் ரிசார்ட் உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மற்றும் சம்பந்தப்பட்ட செயற்கை நீர்வீழ்ச்சிகள் அமையப்பெற்றுள்ள இடங் களை கண்டறிந்து சீல்வைத் திடவும் நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில், கன்னியாகுமரி மாவட்டத் தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா தலைமையில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மாவட்ட வன அலுவலர் இளையராஜா, பத்மநாபபு ரம் சப்- கலெக்டர் கவுசிக், நாகர்கோவில் ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம், மாவட்ட சுற்றுலா அலுவலர் சதீஷ்கு மார், செயற்பொறியாளர் (நீர்வள ஆதார அமைப்பு) ராஜன் ஆகியோர்அடங் கிய 7 உறுப்பினர்களை கொண்ட கண்காணிப்பு மற்றும் நடவடிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி மாவட் டத்தில் உள்ள தனியார் எஸ்டேட் மற்றும் ரிசார்ட் போன்ற நிறுவனங்கள் லாப நோக்கத்திற்காகவும் மற்றும் சுற்றுலாபயணி களை கவரும் பொருட் டும் இயற்கையாக பாயும் நீரின் வழித்தடத்தினை சட்டவிரோதமாக செயற் கையான நீர்வீழ்ச்சிகளாக மாற்றி அமைக்கும் செயல் களுக்கு, அலுவலர்கள் எவரேனும் உடந்தையாக இருப்பது கண்டறியப்பட் டால், கண்காணிப்பு மற்றும் நடவடிக்கை குழுவின் அறிக் கையின் அடிப்படையில், கன்னியாகுமரி மாவட்ட கலெக்டரால் தொடர்பு டைய அலுவலர்கள் மீது துறைரீதியான மற்றும் குற்ற வியல் நடவடிக்கையானது மேற்கொள்ளப்படும். மேலும் பொதுமக்கள் இது தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். புகார் தொடர்பான பதிவுகள் மாவட்ட கலெக்டர் அலுவலக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை பிரிவில் தனியாக பதிவேடுகளில் பதிவுகள் செய்யப்பட்டு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிபபில் தெரிவித்துள்ளார்.

    • குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் கொட்டகம்பை ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
    • குழந்தைகள் பாதுகாப்பு குறித்து கூட்டத்தில் விளக்கமாக பேசப்பட்டது.

    அரவேணு

    நீலகிரி மாவட்ட சமூக நலத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மற்றும் குஞ்சப்பனை ஊராட்சி சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் கொட்டகம்பை ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் இம்மானுவேல் மணிகண்டன் தலைமை தாங்கினார். இதில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணியாளர் ரம்யா மற்றும் ஊராட்சி செயலர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உள்பட கல்வித்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட அளவிலான மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு குழு கூட்டம் நடந்தது
    • காவேரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்தின்கீழ்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் காவேரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்தின்கீழ் மாவட்ட அளவிலான மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு குழு கூட்டம் கலெக்டர் கவிதா ராமு தலைமையில், திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் முன்னிலையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் திருநாவுக்கரசர் தெரிவித்ததாவது:

    புதுக்கோட்டை தாலுகாக்களுக்குட்பட்ட 21 கிராமங்களில் 474.83 ஹெக்டேர் பட்டா நிலங்களை கையகப்படுத்தவும், 150.60 ஹெக்டேர் அரசு புறம்போக்கு நிலங்களை நிலமாற்றம் செய்யப்படவுள்ளது.

    இதில் 19 கிராமங்களில் நில அளவை பணிகள் முடிவுற்று முதல்நிலை அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் 2013 -ம் ஆண்டு சட்டத்தின்படி நிலம் கையகப்படுத்தப்படுகிறது.அதன்படி தனிநபர் பேச்சுவார்த்தை மூலம் குன்னத்தூர், புலியூர், வத்தனாகுறிச்சி, வாலியம்பட்டி, சீமானூர் மற்றும் பூங்குடி ஆகிய வருவாய் கிராமங்களில் இதுவரை 6 கட்டங்களாக 43.19 ஹெக்டேர் நிலங்கள் ரூ.44.15 கோடி மதிப்பிற்கு கைய கப்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக விராலிமலை தாலுகா, குன்னத்தூர் கிராமத்தில் நீர்வளத்துறை மூலம் கால்வாய் வெட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    விராலிமலை தாலுகா குன்னத்தூர், குளத்தூர் தாலுகா புலியூர் மற்றும் வத்தனாக்குறிச்சி கிராமங்களில் நிலமெடுப்பு செய்வதினால் பாதிக்கப்பட்டுள்ள 25 குடும்பங்களுக்கு மறு குடியமர்வுக்கு வழி செய்யும் வகையில், கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு, கோட்டாட்சியர் அறிக்கை பெறப்பட்டு மாநில மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு ஆணையர் மற்றும் நில நிர்வாக ஆணையருக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளது.

    மேலும் மேற்கண்ட காவேரி வைகை குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×