search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளைஞர் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்றவர்களுக்கு பணி ஆணை
    X

    பயிற்சி பெற்றவர்களுக்கு பணி ஆணை.

    இளைஞர் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்றவர்களுக்கு பணி ஆணை

    • மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில் இளைஞர் திறன் மேம்பாட்டு பயிற்சி தொடக்க விழா.
    • 36 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் சி.க.சு. அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில் இளைஞர் திறன் மேம்பாட்டு பயிற்சி தொடக்க விழாவும், பயிற்சி பெற்றவர்களுக்கு பணி ஆணை மற்றும் சுய உதவி குழுக்களுக்கு உதவித்தொகை வழங்கும் விழா மாவட்ட கூடுதல் கலெக்டர் பிரித்விராஜ் தலைமையில் நடைபெற்றது.

    வேதாரண்யம் நகராட்சி தலைவர் புகழேந்தி முன்னிலை வகித்தார். விழாவில் இளைஞர் திறன் மேம்பாட்டு பயிற்சியில் கோயம்புத்தூர், நாகை, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த 11 நிறுவனங்கள் 421 பேரை நேர்காணல் செய்து 171 பேருக்கு பணி ஆணையையும், வேதாரண்யம் ஒன்றியத்தில் உள்ள 36 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி மற்றும் வாழ்வாதார தொகுப்பு நிதி வங்கி கடன் மூலம் ரூ. 36 லட்சத்துக்கான காசோலையையும் கூடுதல் கலெக்டர் பிரித்விராஜ், நகராட்சி தலைவர் புகழேந்தி ஆகியோர் வழங்கினர்.

    விழாவில் திறன் வளர்ப்பு உதவி இயக்குனர் செந்தில்குமாரி உள்பட ஒருங்கிணைப்பாளர்களும், பல்வேறு நிறுவனங்களின் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

    அனைவரையும் மகளிர் திட்ட உதவி அலுவலர் முருகேசன் வரவேற்றார். முடிவில் உதவி திட்ட அலுவலர் பாலன் நன்றி கூறினார்.

    Next Story
    ×