search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தை தொழிலாளர்களை"

    • குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினர்களை பணிக்கு அமர்த்துவது குற்றமாகும்.
    • அவ்வாறு பணிக்கு ஈடுபடுத்துவது கண்டறியப்பட்டால் அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்கப்படும்.

    ஈரோடு:

    குழந்தை தொழிலாளர் மற்றும் வளர் இளம் பருவத் தொழிலாளர்கள் சட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் இதர தொழில் நிறுவனங்களில் குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்கள் பணிய மர்த்தப்பட்டுள்ளனாரா? என்பது குறித்து மாவட்ட தடுப்பு படையினர் மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்துடன் இணைந்து மொத்தம் 175 நிறுவன ங்களில் கூட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

    இதேப்போல் கொத்தடிமை தொழிலாளர் ஒழித்தல் சட்டத்தின் கீழ் கால்நடை மேய்க்கும் பணிகளில் கொத்த டிமைகள் உள்ளனரா என்பது குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் யாரும் கண்டறியப் படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இது குறித்து ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் திருஞான சம்பந்தம் கூறியதாவது:

    14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 16 முதல் 18 வயதிற்குட்பட்ட வளரிளம் பருவத்தினர்களை பணிக்கு அமர்த்துவது குற்றமாகும்.

    அவ்வாறு பணிக்கு ஈடுபடுத்துவது கண்டறியப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப் பட்டு சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர் மீது ரூ.20 ஆயிதம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து தண்ட னையாக விதிக்கப்படும்.

    மேலும் குழந்தை தொழிலாளர் பணிபுரிவது கண்டறிந்தால் பொதுமக்கள் 1098 மற்றும் 155214 என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வளரிளம் பருவத்தினரை பணிக்கு அமர்த்துவது குற்றம்.
    • குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியது கண்டறிந்தால் தண்டனை விதிக்க நேரிடும்.

    ஈரோடு:

    ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருஞானசம்பந்தம் தலைமையில், துணை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் குறைந்த பட்ச ஊதிய சட்டம், கொத்தடிமை முறை, குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டத்தின் கீழ் இம்மாதம் சிறப்பாய்வு மேற்கொண்டனர்.

    குறைந்த பட்ச ஊதிய சட்டத்தில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் என 25 நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 4 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டது.

    அரசு நிர்ணயித்த குறைந்த பட்ச ஊதியத்தை தொழிலாளர்களுக்கு வழங்காத நிறுவனங்கள் மீது மேல் நடவடிக்கைக்கு இணை ஆணையரிடம் கேட்பு மனு தாக்கல் செய்தனர்.

    கொத்தடிமை தொழிலாளர் தடுப்பு சட்டத்தின் கீழ், 16 செங்கல் சூளைகளிலும், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு பணியாக, 31 மோட்டார் வாகன பழுது பார்க்கும் தொழிற்கூடங்களில் கூட்டாய்வு செய்தனர்.

    இதுகுறித்து தொழிலாளர் உதவி ஆணையர் திருஞானசம்பந்தம் கூறியதாவது:

    கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்புக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 16 முதல் 18 வயதுக்கு உட்பட்ட வளரிளம் பருவத்தினரை பணிக்கு அமர்த்துவது குற்றம்.

    அவ்வாறு பணிக்கு அமர்த்தியது கண்டறிந்தால், நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நிறுவன உரிமையாளர் மீது 20,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை அபராதம் அல்லது 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 2-ம் சேர்த்து தண்டனையாக விதிக்க நேரிடும்.

    குழந்தை தொழிலாளர் பணி புரிவது கண்டறிந்தால் பொதுமக்கள் 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×