search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குளச்சல் அரசு மருத்துவமனை"

    • குளச்சல் அரசு மருத்துவமனை வரும் நோயாளிகள் அலைக்கழிக்கப்படும் நிலையை உடனே சீர் செய்ய வேண்டும்.
    • குளச்சல் பகுதியில் சுனாமி குடியிருப்புகளுக்கு உடனடியாக பட்டா வழங்கப்பட வேண்டும்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் நகர அ.தி.மு.க.செயலாளர் ஆண்ட்ரோஸ் மற்றும் தொகுதி முன்னாள் செயலாளர் ஆறுமுகராஜா ஆகியோர் மாவட்ட கலெக்டரை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    குளச்சல் அரசு மருத்துவமனை வரும் நோயாளிகளுக்கு காய்ச்சல், பிரஷர் போன்ற நோய்களுக்கு மாத்திரைகள், ஊசிகள் இல்லாத நிலை உள்ளது. இதனால் நோயாளிகள் தினம் தினம் அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையை உடனே சீர் செய்ய மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறோம்.மேலும் குளச்சல் பகுதியில் சுனாமி பேரலையால் பாதிக்க ப்பட்ட குடும்பங்க ளுக்கு அன்றைய அ.தி.மு.க. வின் ஆட்சியில் வீடு கட்டி கொடுக்கப்பட்டது. அந்த குடியிருப்புகளுக்கு உடனடியாக பட்டா வழங்கப்பட வேண்டும்.

    மேலும் குறிப்பிட்ட. பிரச்சி னைகளுக்கு உட னடியாக தீர்வு காண வில்லை என்றால் மக்களை திரட்டி குளச்சல் நகர அ.இ.அ.தி.மு.க.வினர் மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×