search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குற்றவியல் நடவடிக்கை"

    • இத்திட்டத்திற்கான யு.பி.எஸ் உள்ளிட்ட உபகரண ங்கள், ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் உள்ள கிராம ஊராட்சி சேவை மையம் அல்லது அரசு கட்டிடத்தில் நிறுவப்பட்டு வருகிறது.
    • இத்திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் போது, ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் வசிக்கும் மக்கள் அனைவரும் இணையதள வசதிகளை பெற முடியும்.

    தேனி:

    தேனி மாவட்டத்திலுள்ள 130 கிராம ஊராட்சிகளிலும், இணையதள வசதி வழங்கும் பாரத் நெட் திட்டமானது, தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலம் தற்போது முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இணையதள இணைப்பு வழங்கும் பணியானது வருகிற செப்டம்பர் மாதம் முதல் தொடங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கண்ணாடி இழை இணை ப்பானது, 85% மின்க ம்பங்கள் மூலமாகவும், 15% தரை வழியாகவும் இணைத்திட நட வடிக்கை மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்திற்கான யு.பி.எஸ் உள்ளிட்ட உபகரண ங்கள், ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் உள்ள கிராம ஊராட்சி சேவை மையம் அல்லது அரசு கட்டிடத்தில் நிறுவப்பட்டு வருகிறது. இந்த உபகரணங்கள் பொருத்த ப்பட்டுள்ள அறையானது சம்பந்த ப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவரால் தூய்மையாக பராமரிக்க ப்பட்டு வரு கிறது.

    இத்திட்ட த்திற்கான உபகரணங்களை பாதுகா த்திடவும். தடை யில்லா மின் வசதி உள்ளதை உறுதி செய்தி டவும், பி.ஒ.பி பொறுத்த ப்பட்டுள்ள அறையில் வேறு தேவையற்ற பொருட்கள் வைக்கப்படாமல் இருப்பதை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகள் சம்பந்த ப்பட்ட கிராம ஊராட்சி செயலா ளர்களால் கண்காணிக்கப்பட உள்ளது.

    இத்திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் போது, ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் வசிக்கும் மக்கள் அனைவரும் இணையதள வசதிகளை பெற முடியும். ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் பி.ஒ.பி மையங்களில் பொருத்தப்பட்டுள்ள மின்கலம், யு.பி.எஸ் மற்றும் கண்ணாடி இழை உள்ளிட்ட உபகரணங்கள் யாவும் அரசின் உடைமைகள்.

    எனவே உபகரணங்களை சேதப்படுத்தும் அல்லது திருடும் நபர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் காவல் துறையினர் மூலம் கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவி த்துள்ளார்.

    • நீலகிரி கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • தோ்வில் 1,472 போ் பங்கேற்க விண்ணப்பித்துள்ளனா்.

    ஊட்டி,

    குரூப் 1 தோ்வில் ஆள்மாறாட்டம் செய்தால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியா் அம்ரித் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு (தொகுதி 1) பதவிக்கான நேரடி நியமன எழுத்துத் தோ்வு நாளை மறுநாள் (19-ந் தேதி) நடைபெறவுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் 3 மையங்கள், புனித சூசையப்பா் மேல்நிலைப் பள்ளி, சி.எஸ்.ஐ. சி.எம்.எம். மேல்நிலைப் பள்ளி, பெத்லேகம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி என 6 மையங்களில் தோ்வு நடைபெறுகிறது.

    இத் தோ்வில் 1,472 போ் பங்கேற்க விண்ணப்பித்துள்ளனா். தோ்வைக் கண்காணிக்க துணை கலெக்டர் நிலையில் பறக்கும் படை அலுவலராக மாவட்ட வழங்கல் அலுவலா் நியமிக்கப்பட்டுள்ளாா். தோ்வுக் கூடங்களுக்கு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை கொண்டு செல்ல துணை தாசில்தார் நிலையில் 3 நடமாடும் குழு, தோ்வுக் கூடங்களில் தோ்வைக் கண்காணிக்க சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியா்கள் தலைமையில் கண்காணிப்பாளா்கள் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளா் நிலையில் 6 மேற்பாா்வை அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

    மேலும், தோ்வு எழுத வரும் மாற்றுத் திறனாளிகள் எவரேனும் இருப்பின் அவா்களுக்கு கீழ் தளத்தில் தோ்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தோ்வு எழுத வரும் பாா்வையற்றோா் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே ஒரு அறை ஒவ்வொரு மையத்திலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாா்வையற்றோா் தோ்வு எழுத வேண்டி உடன் வரும் எழுத்தாளா் அனுமதிக்க ப்பட்டுள்ளனா். பாா்வையற்றோருக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்படும்.

    தோ்வு எழுத வரும் எவரேனும் ஆள்மாறாட்டம் செய்யப்படுவது கண்டறியப்பட்டால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தோ்வுக் கூடங்களுக்குள் கைப்பேசி, கால்குலேட்டா், எலக்ட்ரானிக் கை கடிகாரம் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை எடுத்து செல்ல அனுமதி இல்லை என மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளார்.

    ×