search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறை கேட்பு"

    • ஈரோடு அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குறை கேட்பு கூட்டம் நடக்க உள்ளது.
    • ‘குறை கேட்பு நாள் மனு’ என குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

    ஈரோடு, 

    ஈரோடு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கருணாகரபாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஈரோடு அஞ்சல் கோட்டத்தில் அஞ்சல் துறை சேவைகள் குறித்த குறைகள் இருப்பின், பொதுமக்களிடம் இருந்து அவற்றை கேட்டறிந்து, தீர்வு காணும் வகையில் வரும் 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு ஈரோடு அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குறை கேட்பு கூட்டம் நடக்க உள்ளது.

    பொதுமக்கள், அஞ்சல் துறை குறித்த தங்கள் குறைகளை தபால் மூலம் வரும் 19-ந் தேதிக்குள் கிடைக்கும்படி 'அஞ்சல் கண்காணிப்பாளர், ஈரோடு கோட்டம், ஈரோடு – 638001' என்ற முகவரிக்கு, 'குறை கேட்பு நாள் மனு' என குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

    தவிர 19 வரை அலுவலக வேலை நாட்களில் காலை, 10 மணி முதல் மாலை 5 மணி வரை கோரிக்கை மனுவை நேரிலும் சமர்பிக்கலாம் என்று அதில் கூறியுள்ளார்.

    ×