search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறுமிளகு"

    • ஒன்றரை வயது குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
    • குழந்தைக்கு சி.டி., ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் அடுத்த சின்னக் கரையை சேர்ந்த ஒருவரின் ஒன்றரை வயது குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக குழந்தையை திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர் /அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை துறையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு சி.டி., ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இதில் குழந்தையின் மூச்சுக்குழாயில் குறுமிளகு சிக்கி இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து டாக்டர்கள் குழுவினர் பிரான்ஸ்கோபி மூலம் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையில் மூச்சுக்குழாயில் சிக்கியிருந்த குறுமிளகு அகற்றப்பட்டது. மேற்கொண்ட சிகிச்சைக்கு பின் குழந்தை இயல்பு நிலைக்கு திரும்பியது.

    • குறுமிளகு செடிகளை வாங்குவதற்காக பல பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்த வண்ணம் உள்ளனர்
    • கோத்தகிரி பகுதிகளில் தற்போது குறுமிளகு விளைச்சல் அதிகரித்து காணப்படுகிறது

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்று வட்டார பகுதிகளான சோலூர் மட்டம், கடசோ லை, குஞ்சப்பனை, செமனாரை, கோழிக்கரை, மேல்கூப்பு, கீழ்கூப்பு, கரிக்கையூர், குள்ளங்கரை உள்ளிட்ட பகுதிகளில் கருப்பு தங்கம் எனப்படும் குறுமிளகு அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. கோத்தகிரி பகுதிகளில் தற்போது குறுமிளகு விளைச்சல் அதிகரித்து காணப்படுகிறது.

    இந்த குறுமிளகு செடிகளை அங்கு சைபர் மரம், பலாமரம் போன்ற மரங்களில் கொடிகளாக ஏற்றிவிட்டு இதனை வளர்த்து வருவார்கள். மேலும் தேயிலை செடிகளின் இடையே ஊடுபயிராகவும் குறுமிளகு பயிரிட்டுள்ளனர்.

    இதனை வாங்குவதற்காக பல பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்த வண்ணம் உள்ளனர். வியாபாரிகள் நேரடியாக வந்தும் வாங்கி செல்கிறார்கள்.

    ×