search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குரங்கு அம்மை நோய்"

    • இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 50 நாடுகளில் குரங்கு அம்மை பாதித்துள்ளது.
    • உலக அளவில் 3,417க்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.

    ஜெனீவா:

    உலகம் முழுவதும் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. இதுவரை 58 நாடுகளில் இந்த நோய் தாக்கியுள்ளது. உலகளவில், 3,417க்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.

    இந்நிலையில், குரங்கு அம்மை நோய் தொற்று பரவல் தொடர்பாக அவசரக் கூட்டத்தை நடத்த உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருந்தது. குரங்கு அம்மை நோய் தொற்றானது, சர்வதேச அளவில், கொரோனா போன்று பொது சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட வேண்டுமா என்பதை ஆராய்ந்து முடிவெடுக்க இந்தக் கூட்டம் நடைபெற்றது.

    இதுதொடர்பாக, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், குரங்கு அம்மை நோய் பரவுவது அசாதாரணமானது மற்றும் கவலைக்குரியது என தெரிவித்தார்.

    இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

    குரங்கு அம்மை நோய் பாதிப்பை சர்வதேச அளவில் பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவிக்கிறது. இதைத் தொடர்ந்து, இந்த தொற்றுநோய் குறிப்பிட்ட ஒரு நாடு அல்லது பிராந்தியத்திற்கு மட்டும் பரவக்கூடியதல்ல என்பது தெளிவாகிறது.

    சமூகப் பரவல் எங்கு நடந்தாலும் உடனடி நடவடிக்கைகளால் கவனிக்கப்பட வேண்டும். இந்த நோயால் சிறிய பாதிப்பு ஏற்படுவதை உலகம் உறுதி செய்வதற்காகவே அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடுமையான வலி, பயம், கண் பார்வை இழப்பு மற்றும் உயிரிழப்பு ஆகிய பாதிப்புகள் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் காணப்படுகின்றன.

    தற்போதைய சூழலில் சமூக பரவலாக நோய் தொற்றின் வேகம் விரிவடைவதால் இதுவரை காப்பாற்றப்பட்ட குழந்தைகளுக்கு கூட தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. வளர்ப்பு பிராணிகள் உள்பட வனவிலங்குகளுக்கு பரவும் ஆபத்தும் உள்ளது. இது உலகம் முழுவதும் விரிவடையும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

    • முதலில் காய்ச்சல் தொடங்கிய மூன்று நாட்களுக்குள் சொறி பிரச்சினை தோன்றும்.
    • குரங்கு காய்ச்சலை பரப்பும் வைரஸ் உமிழ்நீர் மூலம் பரவுகிறது.

    கொரோனா வைரஸ் பல்வேறு மாறுபாடுகளுடன் அச்சுறுத்திக்கொண்டிருக்கும் நிலையில் குரங்கு காய்ச்சல் 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்த நோய் பற்றிய விரிவான விவரங்களை காண்போம்.

    'மங்கி பாக்ஸ்' எனப்படும் இது ஒரு வகை வைரஸ் ஜூனோடிக் நோயாகும். அதாவது இது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடியது. மனிதர்களுக்கு இடையேயும் பரவலாம்.

    மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள வெப்பமண்டல மழைக் காடுகள் மற்றும் அங்கு வாழும் விலங்குகள் மூலம் இந்த வைரஸ் பரவக்கூடியது. அந்த பகுதியில் இருந்து பிற நாடுகளுக்கு பயணிப்பவர்கள் குரங்கு காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகுவதும் கண்டறியப்பட்டுள்ளது.

    காய்ச்சல், கடுமையான தலைவலி, தசை வலி, முதுகுவலி, உடலில் ஸ்டெமினா (ஆற்றல்) குறைவது, நிண நீர் சுரப்பிகளில் வீக்கம், சருமத்தில் வெடிப்பு, காயம், கொப்புளம் ஏற்படுவது குரங்கு காய்ச்சலின் பொதுவான அறிகுறிகளாகும். முதலில் காய்ச்சல் தொடங்கிய மூன்று நாட்களுக்குள் சொறி பிரச்சினை தோன்றும். பின்பு புண்கள், கொப்புளங்கள் உருவாகும். அவை மஞ்சள் நிற திரவத்தால் சூழப்பட்டதாகவோ இருக்கலாம்.

    அந்த சமயத்தில் உடலில் புள்ளி, புள்ளியாக கொப்புளங்கள் நெருக்கமாக உருவாகிக்கொண்டிருக்கும். முகம், உள்ளங்கை, கால்களில் சொறி உணர்வு ஏற்படும். இந்த அறிகுறிகள் நான்கு வாரங்கள் கூட நீடிக்கலாம். இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவ ஆலோசனை பெற்று அதன்படி செயல்படுவது அவசியமானது.

    பெரும்பாலான சந்தர்ப்பங்களில், குரங்கு காய்ச்சல் அறிகுறிகள் சில வாரங்களுக்குள் தானாகவே மறைந்து விடும். பச்சிளம் குழந்தைகள், சிறுவர்-சிறுமியர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உடையவர்கள், குரங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் கொண்டவர்கள் முறையாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் உயிரிழக்க நேரிடும். குரங்கு காய்ச்சல் பாதிப்பால் ஏற்படும் சரும நோய்த்தொற்றுகள், நிமோனியா, கண்களில் ஏற்படும் நோய்த்தொற்றுகள் ஆகியவை பார்வை இழப்புக்கு வழிவகுக்கும். குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 3 முதல் 6 சதவீதம் பேர் மரணத்தை தழுவி இருக்கிறார்கள். குரங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வும், கண்காணிப்பும் குறைவாக இருப்பதும் இறப்பு அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கிறது.

    குரங்கு காய்ச்சல் அறிகுறிகளை கொண்டிருப்பவர்கள், காய்ச்சல் பாதிப்பு ஆளானவர்கள் (இரண்டு முதல் நான்கு வாரங்களுக்குள்) ஆகியோருடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருப்பவர்கள் நோய்வாய்ப்படக்கூடும். குரங்கு காய்ச்சல் பாதிப்புக்கு ஆளானவர்களின் உடலில் ஏற்படும் புண்களில் இருந்து வழியும் சீழ், ரத்தம் போன்றவை மூலம் நோய்த்தொற்று பரவக்கூடும்.

    அவர்கள் பயன்படுத்தும் உடைகள், படுக்கை அறை, துண்டுகள், உண்ணும் பாத்திரங்கள், உணவுகள் போன்ற பொருட்களை பயன்படுத்துவதன் மூலமும் பரவக்கூடும். நோய் பாதிப்புக்குள்ளான நபரின் வாயில் இருக்கும் புண்கள் கூட தொற்று நோயை பரப்பலாம். அதாவது குரங்கு காய்ச்சலை பரப்பும் வைரஸ் உமிழ்நீர் மூலம் பரவுகிறது. அதனால் தொற்று பாதிப்புக்குள்ளான நபர்களுடன் நெருங்கி பழகுபவர்கள் எளிதில் பாதிப்புக்கு ஆளாவார்கள். கர்ப்பமாக இருக்கும் பெண்ணின் நஞ்சுக்கொடி மூலம் கருவில் வளரும் குழந்தைக்கும் பரவக்கூடும். குழந்தையை பெற்றெடுத்த பிறகு சரும தொடர்பு மூலமும் பரவும்.

    1958-ம் ஆண்டு ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த குரங்குகளிடம் முதன்முதலில் கண்டறியப்பட்டதால், இந்த நோய் மங்கி பாக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. பின்னர் இது 1970-ல் மனிதர்களிடம் கண்டறியப்பட்டது.

    ×