search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குமரிமுனை திருப்பதி ஆலயம்"

    • குமரிமுனை ஏழுமலையான் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்கிறார்.
    • குமரிமுனை திருப்பதி ஆலயத்தில் சுற்றுலா பயணிகளுக்காக தனி இடவசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    1. குமரிமுனை திருப்பதி வெங்கடாசலபதி ஆலயத்தின் பல்வேறு சன்னதிகள் கருங்கற்கள் கொண்டு கட்டப்பட்டுள்ளன. இதற்கான கற்கள் அனைத்தும் திருச்சி மாவட்டம் நாகலாபுரத்தில் இருந்து பிரத்யேகமாக கொண்டு வரப்பட்டது ஆகும்.

    2. இத்தலத்தின் கொடி மரம் 40 உயரத்தில் மிக பிரமாண்டமான அம்சம் கொண்டது. இந்த கொடி மரத்தை சிங்கப்பூர் நாட்டில் உள்ள வனப்பகுதியில் இருந்து கொண்டு வந்துள்ளனர். இந்த கொடி மரத்தை சுற்றி செம்பு தகடு பதித்துள்ளனர்.

    3. குமரிமுனை திருப்பதியில் உள்ள பலிபீடமும் திருப்பதியில் உள்ள பலிபீடமும் ஒரே மாதிரி தாமரை இலை வடிவில் உள்ளன. ஆனால் திருப்பதியில் உள்ள பலிபீடத்தை விட குமரிமுனை ஆலயத்தில் மிக சிறியதாக பலிபீடம் அமைக்கப்பட்டுள்ளது.

    4. குமரிமுனை ஆலயத்தின் முன்பகுதி மண்டபத்தின் மேல் பகுதியில் தசாவதார காட்சிகள் ஓவியங்களாக செதுக்கி வைக்கப்பட்டுள்ளன.

    5. இத்தலத்தின் மேல்பகுதிக்கு ஏறி செல்ல 45 படிகள் கொண்ட அமைப்பு கட்டப்பட்டுள்ளது. வயதான பக்தர்கள் இத்தனை படிகள் ஏற முடியாது என்பதால் மேல் தலத்துக்கு சென்று ஏழுமலையானை வழிபாடு செய்வதற்கு லிப்ட் வசதி செய்துள்ளனர்.

    6. இத்தலத்தில் பத்மாவதி தாயாருக்கும், ஆண்டாளுக்கும் தனித்தனி சன்னதிகள் கட்டப்பட்டுள்ளன. தெற்கு பகுதியில் பத்மாவதியும், வடக்கு பகுதியில் ஆண்டாளும் கிழக்கு முகமாக உள்ளனர்.

    7. இத்தலத்தில் இருந்து பார்த்தால் விவேகானந்தர் மண்டபமும், பிரமாண்டமான திருவள்ளுவர் சிலையும் மிக அழகாக தெரிகிறது.

    கண்ணுக்கு குளிர்ச்சியாக இதமாக அந்த காட்சி அமைவது குறிப்பிடத்தக்கது.

    8. கடற்கரையோரத்தில் இந்த தலம் அமைந்து இருப்பதால் இடைவிடாமல் எப்போதும் குளிர்ந்த காற்று வீசிக்கொண்டே இருக்கிறது.

    மேலும் கடல் அலைகள் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. இரவு நேரங்களில் அலைகள் சத்தம் அதிகமாக எழும்புவது கேட்கலாம்.

    9. எதிர்காலத்தில் இத்தலத்துக்கு என தங்கத்தேர் உருவாக்க திட்டமிட்டுள்ளனர். அதற்கேற்க பிரகார வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    10. குமரிமுனை ஏழுமலையான் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்கிறார்.

    11. குமரிமுனையில் வங்க கடல், அரபிக் கடல், இந்திய பெருங்கடல் ஆகிய 3 கடல்களும் சங்கமிக்கும் பகுதி அருகே இந்த ஆலயம் எழுந்துள்ளது. இந்த 3 கடல்களில் வங்க கடலோரப் பகுதியில் இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது.

    12. குமரிமுனை திருப்பதி ஆலயத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கியதுமே பக்தர்கள் அன்றுமுதலே இந்த தலத்துக்கு வந்து பார்த்து செல்ல தொடங்கி விட்டனர். கட்டுமானப் பணிகள் முடிந்த பிறகு குமரிமுனைக்கு சுற்றுலா பயணிகளின் பெரும்பாலானவர்கள் இந்த ஆலயத்தை பார்க்க வர தவறவில்லை.

    13. ஆலயத்தின் முன் பகுதியில் பிரமாண்டமான நுழைவு அலங்கார வளைவு ஒன்று அமைத்து உள்ளனர். அந்த வளைவில் மேலும் சிற்பங்கள் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    14. திருப்பதி ஆலயத்தில் கழிவறை வசதிகள் மிக அதிகளவில் செய்யப்பட்டு இருக்கும். அதே போன்று இந்த ஆலயத்தின் அருகில் தனியாக ஒரு இடத்தில் பக்தர்களுக்கு கழிவறைகள் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    15. திருப்பதியில் ஆலயத்தின் அருகிலேயே அர்ச்சகர்களுக்கு தனி குடியிருப்பு உள்ளது. அதே போன்று இங்கும் குடியிருப்பு கட்ட திட்டமிட்டுள்ளனர்.

    16. ஏழுமலையான் ஆலயம் கட்டப்பட்டுள்ளதை தொடர்ந்து அதன் அருகிலேயே திருமண மண்டபம் ஒன்றை விவேகானந்தா கேந்திரம் கட்டி வருகிறது.

    17. குமரிமுனை திருப்பதி ஆலயத்துக்கு செல்ல விவேகானந்தர் கேந்திரம் வழியாகவும் செல்லலாம். ஆனால் தனியாகவும் ஒரு பாதை உருவாக்கப்பட்டுள்ளது.

    18. குமரிமுனை திருப்பதி ஆலய கும்பாபிஷேகத்திற்காக திருமலையில் இருந்து அர்ச்சகர்கள் பிரத்யேகமாக வர உள்ளனர்.

    19. குமரிமுனை திருப்பதி ஆலயத்தில் நடைபெறும் தினசரி பூஜைகள் அனைத்தும் திருமலையில் நடப்பது போல நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    20. குமரிமுனை திருப்பதி ஆலயத்தில் சுற்றுலா பயணிகளுக்காக தனி இடவசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    21. திருப்பதியில் எத்தகைய ஆகம விதிகளின் பூஜைகள் நடக்கிறதோ அதே ஆகம விதிகளை பின்பற்றிதான் குமரிமுனை திருப்பதி ஆலயத்திலும் பூஜைகள் நடைபெற உள்ளன.

    22. குமரிமுனை திருப்பதி ஆலயத்திலும் தினமும் மாடவீதி உலா உண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    24. குமரிமுனை திருப்பதி வெங்கடாஜலபதிக்கு முதலில் சிறிதளவுதான் நகைகள் அணிவிக்கப்பட உள்ளது. பக்தர்கள் அளிக்கும் காணிக்கை நகைகள் வந்த பிறகு நகை அலங்காரங்கள் அதிகரிக்கும்.

    25. குமரிமுனை திருப்பதி வெங்கடாஜலபதிக்கு வரும் நகைகளை வைப்பதற்கு என்றே பலத்த பாதுகாப்புடன் பிரத்யேக அறை கட்டப்பட்டுள்ளது.

    • திருப்பதியில் நடக்கும் உற்சவங்களில் சீனிவாச கல்யாணம் உற்சவம் மிகவும் தனித்துவம் கொண்டது.
    • இந்த உற்சவம் பக்தர்களுக்கு பலன்களை வாரி வழங்கும் முக்கியத்துவம் கொண்டது.

    திருப்பதியில் நடக்கும் உற்சவங்களில் சீனிவாச கல்யாணம் உற்சவம் மிகவும் தனித்துவம் கொண்டது.

    இந்த உற்சவம் பக்தர்களுக்கு பலன்களை வாரி வழங்கும் முக்கியத்துவம் கொண்டது.

    இதனால்தான் சீனிவாச கல்யாண உற்சவத்தில் பங்கேற்க ஒவ்வொரு பக்தரும் ஆசைப்படுவார்கள்.

    ஆனால் அந்த ஆசை அவ்வளவு எளிதில் நிறைவேறுவதில்லை.

    பக்தர்களின் பொருளாதார வசதி, பயண தூரம் மற்றும் பல காரணங்களால் பல லட்சம் பக்தர்கள் சீனிவாச கல்யாணத்தை நேரில் பார்க்க முடியாத நிலையில் உள்ளனர்.

    அத்தகைய பக்தர்களின் மனக்குறையை தீர்க்கும் வகையில் திருப்பதி-திருமலை தேவஸ்தானம் அடிக்கடி வெளியூர்களில் சீனிவாசன் கல்யாணத்தை சிறப்பாக நடத்தி வருகிறது.

    அந்த வகையில் கன்னியாகுமரியில் கடந்த 2010-ம் ஆண்டு சீனிவாச திருக்கல்யாணம் நடந்தது.

    இந்த நிகழ்ச்சிதான் கன்னியாகுமரியில் திருப்பதி வெங்கடாஜலபதி ஆலயம் உருவாவதற்கு அடித்தளம் அமைத்து கொடுத்தது.

    • அங்கு ஒரே நேரத்தில் 1,200 பேர் அமர்ந்து சாப்பிடலாம். மற்றொரு பகுதியில் தியான கூடம் உள்ளது.
    • கீழ் தளத்தில் கல்யாண உற்சவம் நடத்த தனி அரங்கு உள்ளது.

    திருமலையில் அருள்பாலிக்கும் ஏழுமலையான் ஆலயத்துக்கும், குமரிமுனை திருப்பதி ஆலயத்துக்கு மிகுந்த வேற்றுமை உள்ளது.

    திருமலையில் உள்ள ஆலயம் பல நூறு ஆண்டுகளாக பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டு இன்று பிரமாண்டமான வளர்ச்சியை எட்டி உள்ளது.

    அதன் உட்பிரகாரங்கள் அனைத்தும் கருங்கற்களால் கட்டப்பட்டவை ஆகும்.

    பல்வேறு மன்னர்கள் அந்த ஆலயத்தை கட்டி சிறப்பித்துள்ளனர்.

    மலை மீது உள்ளதால் அதற்கேற்ப ஆலயத்தின் மற்ற பகுதிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    ஆனால் குமரிமுனை திருப்பதி ஆலயம் விவேகானந்தா கேந்திரம் உள்ளே சிறிய இடத்தில் உருவாகி உள்ளது.

    விவேகானந்தா கேந்திரம் சார்பில் வழங்கப்பட்டுள்ள 5 ஏக்கர் நிலத்தில்தான் இந்த ஆலயம் எழுந்துள்ளது.

    தானமாக பெற்ற அந்த 5 ஏக்கரில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் ஆலயம் உருவாகி உள்ளது.

    மீதமுள்ள 1 ஏக்கர் இடம் கோவில், தீர்த்தம் மற்றும் வசதிகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது.

    இந்த ஆலயத்தின் கட்டிட அமைப்பும் வித்தியாசமானது ஆகும்.

    இந்த ஆலயம் கீழ்தளம்-மேல் தளம் என அடுக்குடன் கூடிய அமைப்பில் உருவாக்கப்பட்டு உள்ளது.

    கீழ்தளத்தை அலிபிரி என்று பெயர் சூட்டி உள்ளனர்.

    மேல் தளத்தை ஏழுமலையான் ஆலயம் என்று அழைக்கின்றனர்.

    திருமலை-திருப்பதியில் நடைபாதை தொடங்கும் அலிபிரி கீழே அமைந்துள்ளது.

    ஏழுமலையான் மேலே மலையில் அருள்பாலித்து வருகிறார்.

    இந்த மலை அமைப்பை பிரதிபலிக்கும் வகையில் குமரிமுனை ஆலயம் 2 அடுக்குடன் திகழ்கிறது.

    கீழ் தளத்தில் கல்யாண உற்சவம் நடத்த தனி அரங்கு உள்ளது.

    அங்குள்ள சுமார் ஆயிரம் பேர் அமர்ந்து கல்யாண உற்சவத்தில் பங்கேற்கலாம்.

    கீழ் தளத்தின் மற்றொரு பகுதியில் அன்னதான கூடம் அமைந்துள்ளது.

    அங்கு ஒரே நேரத்தில் 1,200 பேர் அமர்ந்து சாப்பிடலாம். மற்றொரு பகுதியில் தியான கூடம் உள்ளது.

    பக்தர்கள் தியானம் செய்வதற்கு ஏற்ப அமைதியான சூழ்நிலையை உருவாக்க அங்கு வசதி செய்துள்ளனர்.

    மேல் தளத்தில் ஏழுமலையான் கருவறை நடுநாயகமாக உள்ளது.

    ஒருபுறம் பத்மாவதி தாயாருக்கும், மற்றொருபுறம் ஆண்டாளுக்கும் தனித்தனி சன்னதி அமைத்துள்ளனர்.

    திருப்பதியில் உள்ளது போலவே ஏழுமலையானுக்கு நேர் எதிரில் கருடவாழ்வார் உள்ளார்.

    அவருக்கு அங்கு தனி சன்னதி கட்டப்பட்டுள்ளது. அவருக்கு பின்புறம் பலிபீடமும், கொடி மரமும் அமைக்கப்பட்டுள்ளது.

    மேல் தலத்தில் ஆலயத்தை சுற்றி வசதி செய்துள்ளனர்.

    கடற்கரை காற்றை அனுபவித்துக் கொண்டே ஆலயத்தை வலம் வருவது வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

    மேல் தலத்துக்கு செல்ல 45 படிகளுடன் நுழைவு வாயில் மேடை கட்டப்பட்டுள்ளது.

    திருப்பதி திருமலையில் ஏழுமலையான் ஆலயம் மலை மீது அமைந்துள்ளது.

    ஏழுமலைகள் மீது இருப்பதால்தான் அவருக்கு ஏழுமலையான் என்ற பெயர் உருவானது.

    ஆனால் குமரிமுனையில் ஏழுமலையான் கடலோரத்தில் கடல் அலைகள் தாலாட்டும் இடத்துக்கு மிக அருகில் எழுதருளி உள்ளார்.

    திருப்பதி ஆலயத்துக்குட்பட்ட கிளை ஆலயங்களில் கடலோரத்தில் அமைந்துள்ள ஒரே ஆலயம் என்ற சிறப்பை இந்த ஆலயம் பெற்று உள்ளது.

    குமரிமுனையில் ஏழுமலையானுக்கு ஒரு கிளை ஆலயம் உருவாக்கலாம் என்ற எண்ணம் தோன்றியபோது ஏழுமலையான் ஆலயத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    விவேகானந்தா கேந்திரத்தின் செயலாளராக இருக்கும் அனுமந்தராவ் தேவையான உதவிகளை செய்து கொடுத்தார்.

    இதனால் இன்று குமரிமுனை திருப்பதி ஆலயம் திட்டமிட்டப்படி கட்டப்பட்டு பக்தர்களின் வழிபாட்டுக்கு வந்துள்ளது.

    ×