search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    குமரிமுனை திருப்பதி ஆலய சிறப்புகள்-24
    X

    குமரிமுனை திருப்பதி ஆலய சிறப்புகள்-24

    • குமரிமுனை ஏழுமலையான் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்கிறார்.
    • குமரிமுனை திருப்பதி ஆலயத்தில் சுற்றுலா பயணிகளுக்காக தனி இடவசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    1. குமரிமுனை திருப்பதி வெங்கடாசலபதி ஆலயத்தின் பல்வேறு சன்னதிகள் கருங்கற்கள் கொண்டு கட்டப்பட்டுள்ளன. இதற்கான கற்கள் அனைத்தும் திருச்சி மாவட்டம் நாகலாபுரத்தில் இருந்து பிரத்யேகமாக கொண்டு வரப்பட்டது ஆகும்.

    2. இத்தலத்தின் கொடி மரம் 40 உயரத்தில் மிக பிரமாண்டமான அம்சம் கொண்டது. இந்த கொடி மரத்தை சிங்கப்பூர் நாட்டில் உள்ள வனப்பகுதியில் இருந்து கொண்டு வந்துள்ளனர். இந்த கொடி மரத்தை சுற்றி செம்பு தகடு பதித்துள்ளனர்.

    3. குமரிமுனை திருப்பதியில் உள்ள பலிபீடமும் திருப்பதியில் உள்ள பலிபீடமும் ஒரே மாதிரி தாமரை இலை வடிவில் உள்ளன. ஆனால் திருப்பதியில் உள்ள பலிபீடத்தை விட குமரிமுனை ஆலயத்தில் மிக சிறியதாக பலிபீடம் அமைக்கப்பட்டுள்ளது.

    4. குமரிமுனை ஆலயத்தின் முன்பகுதி மண்டபத்தின் மேல் பகுதியில் தசாவதார காட்சிகள் ஓவியங்களாக செதுக்கி வைக்கப்பட்டுள்ளன.

    5. இத்தலத்தின் மேல்பகுதிக்கு ஏறி செல்ல 45 படிகள் கொண்ட அமைப்பு கட்டப்பட்டுள்ளது. வயதான பக்தர்கள் இத்தனை படிகள் ஏற முடியாது என்பதால் மேல் தலத்துக்கு சென்று ஏழுமலையானை வழிபாடு செய்வதற்கு லிப்ட் வசதி செய்துள்ளனர்.

    6. இத்தலத்தில் பத்மாவதி தாயாருக்கும், ஆண்டாளுக்கும் தனித்தனி சன்னதிகள் கட்டப்பட்டுள்ளன. தெற்கு பகுதியில் பத்மாவதியும், வடக்கு பகுதியில் ஆண்டாளும் கிழக்கு முகமாக உள்ளனர்.

    7. இத்தலத்தில் இருந்து பார்த்தால் விவேகானந்தர் மண்டபமும், பிரமாண்டமான திருவள்ளுவர் சிலையும் மிக அழகாக தெரிகிறது.

    கண்ணுக்கு குளிர்ச்சியாக இதமாக அந்த காட்சி அமைவது குறிப்பிடத்தக்கது.

    8. கடற்கரையோரத்தில் இந்த தலம் அமைந்து இருப்பதால் இடைவிடாமல் எப்போதும் குளிர்ந்த காற்று வீசிக்கொண்டே இருக்கிறது.

    மேலும் கடல் அலைகள் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. இரவு நேரங்களில் அலைகள் சத்தம் அதிகமாக எழும்புவது கேட்கலாம்.

    9. எதிர்காலத்தில் இத்தலத்துக்கு என தங்கத்தேர் உருவாக்க திட்டமிட்டுள்ளனர். அதற்கேற்க பிரகார வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    10. குமரிமுனை ஏழுமலையான் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்கிறார்.

    11. குமரிமுனையில் வங்க கடல், அரபிக் கடல், இந்திய பெருங்கடல் ஆகிய 3 கடல்களும் சங்கமிக்கும் பகுதி அருகே இந்த ஆலயம் எழுந்துள்ளது. இந்த 3 கடல்களில் வங்க கடலோரப் பகுதியில் இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது.

    12. குமரிமுனை திருப்பதி ஆலயத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கியதுமே பக்தர்கள் அன்றுமுதலே இந்த தலத்துக்கு வந்து பார்த்து செல்ல தொடங்கி விட்டனர். கட்டுமானப் பணிகள் முடிந்த பிறகு குமரிமுனைக்கு சுற்றுலா பயணிகளின் பெரும்பாலானவர்கள் இந்த ஆலயத்தை பார்க்க வர தவறவில்லை.

    13. ஆலயத்தின் முன் பகுதியில் பிரமாண்டமான நுழைவு அலங்கார வளைவு ஒன்று அமைத்து உள்ளனர். அந்த வளைவில் மேலும் சிற்பங்கள் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    14. திருப்பதி ஆலயத்தில் கழிவறை வசதிகள் மிக அதிகளவில் செய்யப்பட்டு இருக்கும். அதே போன்று இந்த ஆலயத்தின் அருகில் தனியாக ஒரு இடத்தில் பக்தர்களுக்கு கழிவறைகள் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    15. திருப்பதியில் ஆலயத்தின் அருகிலேயே அர்ச்சகர்களுக்கு தனி குடியிருப்பு உள்ளது. அதே போன்று இங்கும் குடியிருப்பு கட்ட திட்டமிட்டுள்ளனர்.

    16. ஏழுமலையான் ஆலயம் கட்டப்பட்டுள்ளதை தொடர்ந்து அதன் அருகிலேயே திருமண மண்டபம் ஒன்றை விவேகானந்தா கேந்திரம் கட்டி வருகிறது.

    17. குமரிமுனை திருப்பதி ஆலயத்துக்கு செல்ல விவேகானந்தர் கேந்திரம் வழியாகவும் செல்லலாம். ஆனால் தனியாகவும் ஒரு பாதை உருவாக்கப்பட்டுள்ளது.

    18. குமரிமுனை திருப்பதி ஆலய கும்பாபிஷேகத்திற்காக திருமலையில் இருந்து அர்ச்சகர்கள் பிரத்யேகமாக வர உள்ளனர்.

    19. குமரிமுனை திருப்பதி ஆலயத்தில் நடைபெறும் தினசரி பூஜைகள் அனைத்தும் திருமலையில் நடப்பது போல நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    20. குமரிமுனை திருப்பதி ஆலயத்தில் சுற்றுலா பயணிகளுக்காக தனி இடவசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    21. திருப்பதியில் எத்தகைய ஆகம விதிகளின் பூஜைகள் நடக்கிறதோ அதே ஆகம விதிகளை பின்பற்றிதான் குமரிமுனை திருப்பதி ஆலயத்திலும் பூஜைகள் நடைபெற உள்ளன.

    22. குமரிமுனை திருப்பதி ஆலயத்திலும் தினமும் மாடவீதி உலா உண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    24. குமரிமுனை திருப்பதி வெங்கடாஜலபதிக்கு முதலில் சிறிதளவுதான் நகைகள் அணிவிக்கப்பட உள்ளது. பக்தர்கள் அளிக்கும் காணிக்கை நகைகள் வந்த பிறகு நகை அலங்காரங்கள் அதிகரிக்கும்.

    25. குமரிமுனை திருப்பதி வெங்கடாஜலபதிக்கு வரும் நகைகளை வைப்பதற்கு என்றே பலத்த பாதுகாப்புடன் பிரத்யேக அறை கட்டப்பட்டுள்ளது.

    Next Story
    ×