search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குமரி மாவட்ட காவல்துறை"

    • 20-ந் தேதிக்குள் மாணவர்களின் படைப்புகளை பள்ளி, கல்லூரிகள் சேகரித்து அறிமுக கடிதத்துடன் அனுப்பி வைக்கவேண்டும்
    • தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் படைப்புகள் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் பிற அலுவலக வளாகங்களில் காட்சிப்ப டுத்தப்படும்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட காவல் துறை சார்பில் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இடையே ஓவிய போட்டி நடத்தப்பட்டவுள்ளது. இது குறித்து எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் காவல்துறை சார்பில் கடந்த வருடம் 4 தலைப்புகளில் ஓவிய போட்டிகள் நடத்தப்பட் டது. மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி கல்லூ ரிகளில் இருந்து சுமார் 3 ஆயிரம் ஒவியங்கள் வந்தன. இந்த ஓவியங்கள் மாவட்ட ஆயுதப்படை முகாம் மண்டபத்தில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு சிறப்பான முறையில் ஓவியம் வரைந்தவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    மாணவர்களிடையே பங்கேற்பு கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில், இந்த வருடமும் ஓவியம், சுவரொட்டி போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளோம். போதை பொருட்கள் நமக்கு வேண்டாம், பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகள், மூத்த குடிமகன்-நமது பொக்கி ஷம் மற்றும் நமது பெருமை, சைபர் கிரைம் குற்றங்களில் கவனமாகவும் பாதுகாப் பாகவும் இருங்கள், காவல் துறை வழங்கும் சேவைகள் பற்றிய எனது பார்வை ஆகிய தலைப்புகளில் போட்டி நடக்கிறது.

    1 வகுப்பு முதல் 7-ம் வகுப்பு வரை ஒரு பிரி வாகவும், 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், அனைத்து கல்லூரி மாணவர்கள் ஒரு பிரிவாகவும் ஒரு மாணவருக்கு அதிகபட்சம் 3 தலைப்புகளில் மாணவர்கள் அவரவர் விருப்பப்படி ஒன்றுக்கு மேற்பட்ட கருப்பொருட்களில் பங்கேற்கலாம். மாண வர்களின் படைப்புகளைப் வருகிற 20-ந்தேதிக்குள் அனுப்பி வைக்கவேண்டும்.

    மாணவர்களின் படைப்பு களை ஒவ்வொரு கல்லூரியும், பள்ளியும் சேகரித்து அதனை ஒரு அறிமுக கடி தத்துடன் காவல் கண் காணிப்பாளர், மாவட்ட போலீஸ் அலுவலகம், நாகர்கோவில்-629001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். நேரடியாகவும் கொடுக்கலாம். 3 உறுப்பினர்களைக் கொண்ட குழு மாணவர்களின் படைப்புகளை ஆய்வு செய்து, தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த படைப்புகளுக்கு வெகுமதிகள் வழங்கப்படும். முடிவுகள் வருகிற 25-ந் தேதி அறிவிக்கப்படும்.

    மேலும் சிறந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் படைப்புகள் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் பிற அலுவலக வளாகங்களில் காட்சிப்ப டுத்தப்படும். மேலும் சந்தேகங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 9498103903 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

    ×