search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குமரி கடல்"

    • காயத்துடன் மீட்கப்பட்ட மீனவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி
    • குளச்சல் மரைன் போலீசார் தீவிர விசாரணை

    கன்னியாகுமரி:

    குளச்சல் துறைமுகத் தெருவை சேர்ந்தவர் பொனிப்பாஸ்.இவரது மகன் ஆன்றனி சபில் ராஜ் (வயது 33).

    இவர் சொந்தமாக விசைப்படகு வைத்து மீன்பிடித்தொழில் செய்து வருகிறார். கடந்த 10-ந் தேதி குளச்சல் துறை முகத்திலிருந்து இவரது படகு மீன் பிடிக்க சென்றது. கலஸ்டின் (44) என்பவர் படகை ஓட்டினார்.

    படகில் வடமாநில தொழி லாளர்கள் 6 பேரும், குமரி மாவட்ட தொழிலாளர்கள் 7 பேரும் இருந்தனர். நேற்று அதிகாலை 3 மணியளவில் இவர்களது விசைப்படகு முட்டம் கடலில் 34 நாட்டிங் கல் மைல் தூரத்தில் மீன் பிடித்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக சென்ற கெமிக்கல் டேங்கர் கப்பல், எதிர்பாராத வித மாக படகு மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படகின் முன்பகுதி சேதமடைந்தது.

    மேலும் படகில் இருந்த மேற்கு வங்காளம் மீனவர் வினோத் புதிர் (46), வாணியக்குடியை சேர்ந்த ஆரோக்கிய ராஜ் (36), பூத்துறையை சேர்ந்த கில்பர்ட் (51) ஆகியோர் கடலில் தூக்கி வீசப்பட்டனர். அவர்களை சக மீனவர்கள் மீட்டு படகில் ஏற்றினர். இருப்பினும் மீனவர்களுக்கு காயம் ஏற்பட்டது.

    அவர்கள் நேற்று மாலை குளச்சல் துறைமுகம் வந்தனர். உடனடியாக 4 பேரும் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட னர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    படகு மீது கப்பல் மோதியது குறித்து மீனவர்கள் புகார் செய்ததன் பேரில் குளச்சல் மரைன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் விசாரணை நடத்தி வருகிறார். மோதிவிட்டு சென்ற வெளி நாட்டு கப்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த மாதம் குமரி கடலில் லைபீரியா நாட்டு எண்ணை கப்பல் விசைப் படகு மீது மோதிச் சென்ற நிலை யில் தற்போது மீண்டும் மற்றொரு படகு மீது கப்பல் மோதிய சம்பவம் மீனவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • தி.மு.க. மீனவர் அணி செயலாளர் முயற்சியால் இழப்பீடு வழங்கிய வெளிநாட்டு நிறுவனம்
    • விசைப்படகுக்கு இழப் பீடாக ரூ.32 லட்சம், தொழிலாளர்களுக்கு நிவாரணமாக தலா ரூ.57 ஆயிரம் வழங்கப்பட்டது.

    கன்னியாகுமரி 

    குளச்சல் மரமடித் தெருவை சேர்ந்தவர் ரெஸ்லின் டானி (வயது 38).இவர் அதே பகுதியை சேர்ந்த 4 பேருடன் பங்குதா ரராக சேர்ந்து விசைப்படகு வைத்து மீன்பிடித்தொழில் செய்து வருகிறார்.

    கடந்த மாதம் 12-ந் தேதி குளச்சல் துறைமுகத்தில் இருந்து இவரது படகு ஆழ் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றது. 14-ந் தேதி மதியம் கன்னியாகுமரி கடல் பகுதி யில் 69 நாட்டிங்கல் கடல் மைல் தூரத்தில் இவர்களது படகு நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டிருந்தது.

    அப்போது அந்த வழியாக சென்ற லைபீரியா நாட்டை சேர்ந்த போஸ்டன் என்ற எண்ணை கப்பல் எதிர்பாராமல் விசைப்படகு மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் படகிலிருந்த 14 மீனவர்களும் தூக்கி வீசப்பட்டனர்.கப்பல் மோதியதில் படகில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு விரிசல் விழுந்தது.

    படகின் உள் அறை களிலும் பெரும் உடைப்பு ஏற்பட்டது. தொடர்ந்து படகை இயக்கினால் படகு க்குள் தண்ணீர் புகுந்து விடும் என்பதால் அருகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மற்றொரு படகிற்கு தகவல் தெரிவித்து உதவிக்கு அழைத்தனர். அவர்கள் விரைந்து வந்து 14 மீனவர்களையும், அவர்க ளது விசைப்படகையும் மீட்டு குளச்சல் மீன்பிடித் துறைமுகம் அழைத்து வந்தனர். இது குறித்து ரெஸ்லின் டானி, குளச்சல் மரைன் போலீசில் புகார் செய்தார்.

    இது தொடர்பாக போலீசார் போஸ்டன் கப்பல் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து தி.மு.க. மாநில மீனவர் அணி செயலாளர் ஜோசப் ஸ்டாலின், குளச்சல் நகர்மன்ற கவுன்சிலர் ஜாண்சன் ஆகியோர் மூலம் பேச்சு வார்த்தை நடத்த கப்பல் நிறுவனம் முன் வந்தது.

    தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சமரச முடிவு ஏற்பட்டது. இதை யடுத்து விசைப்படகுக்கு சேத இழப்பீடு மற்றும் மீன வர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி குளச்சல் விசைப்படகு மீன் பிடிப்ப வர் நல சங்க அலுவலகத்தில் நடந்தது.

    விசைப்படகுக்கு இழப் பீடாக ரூ.32 லட்சம், தொழிலாளர்களுக்கு நிவாரணமாக தலா ரூ.57 ஆயிரம் வழங்கப்பட்டது. தி.மு.க. மீனவர் அணி செய லாளர் ஜோசப் ஸ்டாலின் , கப்பல் நிறுவன பிரதிநிதி ஜாதோவிடம் இருந்து பெற்று மீன்பிடி தொழிலா ளர்களுக்கு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் விசைப்படகு சங்க தலைவர் வர்கீஸ், செய லாளர் பிராங்கிளின், பொரு ளாளர் அந்திரியாஸ் ஆகி யோர் கலந்து கொண்டனர். இதையடுத்து மீண்டும் தொழிலுக்கு செல்ல சேதம டைந்த விசைப்படகை சீரமைக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர்.கப்பல் மோதி சேதமடைந்த விசைப்படகுக்கு துரிதமாக இழப்பீடு கிடைக்க முயற்சி செய்த தி.மு.க. மாநில மீனவர் அணி செயலாளர் ஜோசப் ஸ்டாலின், கவுன்சிலர் ஜாண்சன் ஆகியோரை மீனவர்கள் பாராட்டினர்.

    • 19-ந் தேதி கரை திரும்பாதவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் மீனவர்களின் குடும்பத்தினர் பீதியடைந்தனர்.
    • அழிக்காலை சேர்ந்த ஒரு விசைப்படகு மாயமான மீனவர்களை மீட்டு கரை சேர்த்தது

    கன்னியாகுமரி:

    மணவாளக்குறிச்சி அருகே கீழ கடிய பட்டணத்தை சேர்ந்தவர் எட்வின் ஜெனில் (வயது 34). இவர் சொந்தமாக பைபர் வள்ளம் வைத்து கடலில் மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார்.

    கடந்த 18-ந் தேதி பிற்பகல் வழக்கம்போல் கடியபட்டணத்தை சேர்ந்த மீன் பிடித்தொழிலாளர்கள் சார்லஸ் எட்வின் (45), பிரான்சிஸ் (71), ஜோசப் (63), சகாய பெனின் (33) ஆகியோருடன் எட்வின் ஜெனில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றார். மறுநாள் 19-ந் தேதி கரை திரும்ப வேண்டும். ஆனால் கரை திரும்பவில்லை. அவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் மீனவர்களின் குடும்பத்தினர் பீதியடைந்தனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்து கரை திரும்பிய அழிக்காலை சேர்ந்த ஒரு விசைப்படகு மேற்கூறிய மீனவர்களையும் மீட்டு கரை சேர்த்தது.இரவு 5 மீனவர்களும் பத்திரமாக கரை சேர்ந்தனர்.

    கரை திரும்பிய மீன வர்களை தி.மு.க.மாநில மீனவர் அணி இணை செயலாளர் நசரேத் பசலியான், குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ் ஆகியோர் நேற்று கடியபட்டணம் சென்று சந்தித்து பொன்னாடை போர்த்தி ஆறுதல் கூறினர்.

    ×