என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குமரி கடலில் விசைப்படகு மீது மீண்டும் கப்பல் மோதியது
- காயத்துடன் மீட்கப்பட்ட மீனவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி
- குளச்சல் மரைன் போலீசார் தீவிர விசாரணை
கன்னியாகுமரி:
குளச்சல் துறைமுகத் தெருவை சேர்ந்தவர் பொனிப்பாஸ்.இவரது மகன் ஆன்றனி சபில் ராஜ் (வயது 33).
இவர் சொந்தமாக விசைப்படகு வைத்து மீன்பிடித்தொழில் செய்து வருகிறார். கடந்த 10-ந் தேதி குளச்சல் துறை முகத்திலிருந்து இவரது படகு மீன் பிடிக்க சென்றது. கலஸ்டின் (44) என்பவர் படகை ஓட்டினார்.
படகில் வடமாநில தொழி லாளர்கள் 6 பேரும், குமரி மாவட்ட தொழிலாளர்கள் 7 பேரும் இருந்தனர். நேற்று அதிகாலை 3 மணியளவில் இவர்களது விசைப்படகு முட்டம் கடலில் 34 நாட்டிங் கல் மைல் தூரத்தில் மீன் பிடித்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக சென்ற கெமிக்கல் டேங்கர் கப்பல், எதிர்பாராத வித மாக படகு மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படகின் முன்பகுதி சேதமடைந்தது.
மேலும் படகில் இருந்த மேற்கு வங்காளம் மீனவர் வினோத் புதிர் (46), வாணியக்குடியை சேர்ந்த ஆரோக்கிய ராஜ் (36), பூத்துறையை சேர்ந்த கில்பர்ட் (51) ஆகியோர் கடலில் தூக்கி வீசப்பட்டனர். அவர்களை சக மீனவர்கள் மீட்டு படகில் ஏற்றினர். இருப்பினும் மீனவர்களுக்கு காயம் ஏற்பட்டது.
அவர்கள் நேற்று மாலை குளச்சல் துறைமுகம் வந்தனர். உடனடியாக 4 பேரும் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட னர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
படகு மீது கப்பல் மோதியது குறித்து மீனவர்கள் புகார் செய்ததன் பேரில் குளச்சல் மரைன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் விசாரணை நடத்தி வருகிறார். மோதிவிட்டு சென்ற வெளி நாட்டு கப்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் குமரி கடலில் லைபீரியா நாட்டு எண்ணை கப்பல் விசைப் படகு மீது மோதிச் சென்ற நிலை யில் தற்போது மீண்டும் மற்றொரு படகு மீது கப்பல் மோதிய சம்பவம் மீனவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்