search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குப்பை கழிவு"

    • குப்பை கழிவு மறுசுழற்சி பயன்பாட்டு மையம் தொடங்கி வைக்கப்பட்டது.
    • செயல் அலுவலர் சகாய அந்தோணியூஜின் பேசினார். துப்புரவு ஆய்வாளர் முருகானந்தம் நன்றி கூறினார்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் குப்பை கழிவுகளுக்கான மறுசுழற்சி பயன்பாட்டு மையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எதிர்புறம் உள்ள நாடக மேடையில் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த மையத்தை பேரூராட்சி தலைவர்ஜெயராமன் தொடங்கி வைத்தார். மேலும் அவர், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட தேவையற்ற பொருட்களை தேவைப்படுவோர்களுக்கு வழங்கினார்.

    சோழவந்தான் பேரூராட்சி பகுதியில் வசிக்கும் மக்கள் இந்த மையத்தை தொடர்ந்து பயன்படுத்தி தேவையற்ற பொருட்களை இங்கே ஒப்படைத்து தேவைப்படுவோர்களுக்கு வழங்குவதன் மூலம் பெரும்பாலான கழிவுகளை மறுசுழற்சி செய்வதால் சுற்றுச்சூழல் மாசு குறையும். பொதுமக்கள் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து கழிவுகளை தரம் பிரித்து வழங்கியும், பயன்படாத பொருட்களை இந்த மையத்தில் கொடுத்தும் தூய்மையான நகரமாக பேரூராட்சியை மாற்ற உதவ வேண்டும் என்று செயல் அலுவலர் சகாய அந்தோணியூஜின் பேசினார். துப்புரவு ஆய்வாளர் முருகானந்தம் நன்றி கூறினார்.

    • தொழிற் சாலைகளிலிருந்து, குப்பை கழிவுகளை கொண்டு வந்து வனப்பகுதியில் கொட்டி, இரவோடு இரவாக தீ வைத்து விட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
    • வனப்பகுதி அழிவது மட்டுமின்றி, அங்கு வாழும் உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்படுகிறது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் வனக்கோட்டத்தின் மொத்த பரப்பளவு 1501 சதுர கி.மீ., ஆகும். இங்கு 468 வகையான தாவர இனங்களும், 36 வகையான பாலூட்டிகளும், 272 வகையான பறவை இனங்களும் காணப்படுகி ன்றன.

    மேலும், அதிக எண்ணிக்கையிலான தேக்கு, ஈட்டி, சந்தனம், ஜாலாரி, உசில், ஆச்சான் மற்றும் பொருசு மர வகைகளும், யானைகள், காட்டு மாடுகள், புள்ளிமான்கள், கடமான்கள், கரடிகள், எறும்புத் திண்ணி, சிறுத்தைகள் மற்றும் மயில்கள் போன்ற வன உயிரினங்களும், அரியவகை விலங்குகளான சாம்பல்நிற அணில்கள், எகிப்திய கழுகு போன்ற வன உயிரினங்களும் காணப்படுகின்றன.

    இந்த வனப்பகுதி வழியாக ஓசூரில் இருந்து தருமபுரிக்கும், அஞ்செட்டி வழியாக தருமபுரிக்கும் பிரதான சாலை செல்கிறது. அதேபோல், மலை கிராமங்களுக்கும், வனப்பகுதியில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், சாலையில் செல்லும் சிலர், சிகரெட் புகைத்து விட்டு அணைக்காமல் வீசி செல்வதால், அடிக்கடி தீப்பற்றி எரிவது வாடிக்கையாக உள்ளது.

    மேலும், ஒரு சில தனியார் தொழிற்சாலைகளிலிருந்து, குப்பை கழிவுகளை கொண்டு வந்து வனப்பகுதியில் கொட்டி, இரவோடு இரவாக தீ வைத்து விட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இதனால், வனப்பகுதி அழிவது மட்டுமின்றி, அங்கு வாழும் உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்படுகிறது. எனவே, அவற்றை பாதுகாக்க குப்பை கழிவுகளை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×