என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வனப்பகுதியில் குப்பை கழிவுகளை கொட்டுவதை தடுக்க வேண்டும்
- தொழிற் சாலைகளிலிருந்து, குப்பை கழிவுகளை கொண்டு வந்து வனப்பகுதியில் கொட்டி, இரவோடு இரவாக தீ வைத்து விட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
- வனப்பகுதி அழிவது மட்டுமின்றி, அங்கு வாழும் உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்படுகிறது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் வனக்கோட்டத்தின் மொத்த பரப்பளவு 1501 சதுர கி.மீ., ஆகும். இங்கு 468 வகையான தாவர இனங்களும், 36 வகையான பாலூட்டிகளும், 272 வகையான பறவை இனங்களும் காணப்படுகி ன்றன.
மேலும், அதிக எண்ணிக்கையிலான தேக்கு, ஈட்டி, சந்தனம், ஜாலாரி, உசில், ஆச்சான் மற்றும் பொருசு மர வகைகளும், யானைகள், காட்டு மாடுகள், புள்ளிமான்கள், கடமான்கள், கரடிகள், எறும்புத் திண்ணி, சிறுத்தைகள் மற்றும் மயில்கள் போன்ற வன உயிரினங்களும், அரியவகை விலங்குகளான சாம்பல்நிற அணில்கள், எகிப்திய கழுகு போன்ற வன உயிரினங்களும் காணப்படுகின்றன.
இந்த வனப்பகுதி வழியாக ஓசூரில் இருந்து தருமபுரிக்கும், அஞ்செட்டி வழியாக தருமபுரிக்கும் பிரதான சாலை செல்கிறது. அதேபோல், மலை கிராமங்களுக்கும், வனப்பகுதியில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சாலையில் செல்லும் சிலர், சிகரெட் புகைத்து விட்டு அணைக்காமல் வீசி செல்வதால், அடிக்கடி தீப்பற்றி எரிவது வாடிக்கையாக உள்ளது.
மேலும், ஒரு சில தனியார் தொழிற்சாலைகளிலிருந்து, குப்பை கழிவுகளை கொண்டு வந்து வனப்பகுதியில் கொட்டி, இரவோடு இரவாக தீ வைத்து விட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதனால், வனப்பகுதி அழிவது மட்டுமின்றி, அங்கு வாழும் உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்படுகிறது. எனவே, அவற்றை பாதுகாக்க குப்பை கழிவுகளை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்