search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குட்டிகளுடன்"

    • பண்ணாரி அருகே குட்டிகளுடன் வந்த யானைகள் பஸ்சை வழி மறித்து நின்றது.
    • இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் அணி வகுத்து நின்றன.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தி யமங்கலம் அருகே தாள வாடி, ஆசனூர், பண்ணாரி வனப்பகுதி உள்ளது. மேலும் இந்த பகுதியில் புலிகள் காப்பகமும் அமைந்துள்ளது.

    இந்த வனப்பகுதிகளில் யானைகள், சிறுத்தை, புலி, மான் மற்றும் கரடிகள் உள்பட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகி றது.

    இந்த வனப் பகுதி வழியாக திண்டுக்கல்- மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளதால் தினமும் பஸ், கார், இரு சக்கர வாக னங்கள், லாரி மற்றும் சரக்கு வாகனங்கள் என பல்வேறு வாகனங்கள் கர்நாடகாவுக்கும், அங்கு இருந்து தமிழகத்துக்கும் வந்து சென்றது.

    இந்த பகுதிகளில் இருந்து தண்ணீர் மற்றும் உணவு தேடி யானைகள் உள்பட வன வன விலங்குகள் அடி க்கடி வெளியேறி ரோட்டில் உலா வந்து கடந்து செல்கி றது.

    அப்படி வெளியேறும் யானைகள் அந்த வழியாக வரும் லாரிகளை வழி மறித்து அதில் இருந்து கரும்புகளை பறித்து திண்பது தொடர்ந்து நடந்து வருகிறது.

    மேலும் உணவுக்காக யானைகள் அந்த வழியாக வரும் வாகனங்களை வழி மறிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகிறது. அதே போல் அந்த வழியாக செல்லும் பஸ்களின் கண்ணாடிகளை யானைகள் ஒரு சில நேரங்களில் உடை த்தும் வருகிறது.

    இந்த நிலையில் சத்திய மங்கலம் அடுத்த பண்ணாரி கோவில் அருகே உணவு தேடி யானைகள் குட்டி களுடன் கூட்டமாக வனப்பகு தியை விட்டு வெளியேறி ரோட்டுக்கு வந்து உலாவி கொண்டு இருந்தது.

    அப்போது அந்த வழியாக ஒரு அரசு பஸ் வந்தது. அந்த பஸ் பண்ணாரி அருகே வந்த போது திடீரென குட்டிகளுடன் வந்த யானைகள் அந்த பஸ்சை வழி மறித்து நின்றது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் பஸ்சை நிறுத்தினார். மேலும் பஸ்சில் வந்தவர்கள் அதிர்ச்சியில் செய்வது அறியாமல் யானைகளை விரட்ட சத்தம் போட்டனர். ஆனால் யானைகள் செல்லாமல் அங்கேயே நின்றது.

    இதை யடுத்து அந்த வழியாக வந்த வாகனங்கள் ரோட்டோரம் நிறுத்த ப்பட்டன. இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் அணி வகுத்து நின்றன.

    இதை தொடர்ந்து சிறிது நேரம் அங்கே சுற்றி திரிந்த யானைகள் அதன் பிறகு தானாகவே வனப்பகுதி க்குள் சென்றது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பான நிலை நிலவியது.

    தாளவாடி, மற்றும் பண்ணாரி வனப்பகுதி களில் இருந்து யானைகள் அடி க்கடி வெளியேறி வருகிறது. எனவே வாகன ஓட்டிகள் ஜாக்கிரதையு டனும், எச்சரி க்கையுடனும் செல்ல வேண்டும் என வனத்துறை யினர் கேட்டு கொண்டனர்.

    • காரப்பள்ளம் அருகே கரடி தனது குட்டிகளுடன் ரோட்டை கடப்பதற்காக வெகு நேரமாக நின்று கொண்டிருந்தது.
    • வாகன ஓட்டிகள் தங்களின் செல்போனில் படம் பிடிக்க தொடங்கினர்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் இன்று அதிகாலை சத்தியமங்கலத்தை அடுத்துள்ள காரப்பள்ளம் அருகே கரடி தனது குட்டிகளுடன் ரோட்டை கடப்பதற்காக வெகு நேரமாக நின்று கொண்டிருந்தது.

    இதனை பார்த்து வாகன ஓட்டிகள் தங்களின் செல்போனில் படம் பிடிக்க தொடங்கினர். நேரம் ஆக ஆக கரடியினால் ரோட்டை கடக்க முடியாததால் பயங்கரமாக சத்தமிட்டது.

    இதனைப்பார்த்து வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வாகனங்களை வேகமாக எடுக்க சென்றனர். பிறகு சிறிது நேரம் கழித்து வாகனங்கள் சாலையில் இல்லாததை பார்த்து தனது குட்டிகளுடன் கரடி ரோட்டை கடந்து சென்றது.

    இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், சில நாட்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கரடிகள் ரோட்டை கடந்து சென்று ஆற்றுக்கு அடிக்கடி சென்று வருகின்றனர்.

    இதனால் வாகன ஓட்டிகள் ஆங்காங்கே நிற்பதும், வன விலங்குகளை கண்டதும் செல்ேபானில் படம் எடுப்பதும் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ×