என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » குடிக்க பணம் தர மறுப்பு
நீங்கள் தேடியது "குடிக்க பணம் தர மறுப்பு"
மத்தூர் அருகே மகன்கள் குடிக்க பணம் தராததால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஊத்தங்கரை:
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரை அடுத்துள்ள குல்லம்பட்டி பகுதியை சேர்ந்தவர் காசியப்பன் (வயது70). விவசாயியான இவருக்கு குடிபழக்கம் இருந்து வந்தது. இதனால் தனது மகன்களிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று காசியப்பன் தனது மகன்களிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்த காசியப்பன் கடந்த 19-ந்தேதி அன்று வீட்டில் வயலுக்கு அடிக்க பயன்படுத்தும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்ற அவரை பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக காசியப்பன் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்த மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X