search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிருஷ்ணா தண்ணீர்"

    • புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்தும் குறைந்த அளவு உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
    • செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 23 அடியை நெருங்கி உள்ளது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம் பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளில் மொத்தம் 11. 757 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

    இதில் பூண்டி ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீர் சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

    கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி நவம்பர் 28-ந் தேதி முதல் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்து வந்தது. இதனிடையே வடகிழக்கு பருவமழை மற்றும் மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பலத்த மழை கொட்டியது. இதனால் குடிநீர் வழங்கும் 5 ஏரிகளிலும் நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்தது. தொடர்ந்து பலத்த மழை கொட்டியதால் பூண்டி ஏரியில் இருந்து அதிகபட்சமாக வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வரை உபரி நீர் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்பட்டது.

    இதேபோல் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்தும் குறைந்த அளவு உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

    தற்போது மழை இல்லாததால் புழல், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. கிருஷ்ணா தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டு இருப்பதால் பூண்டி ஏரி அதன் முழு கொள்ளவான 35 அடி முழுவதும் நிரம்பி உள்ளது.

    ஏரியில் முழுகொள்ளளவான 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு கிருஷ்ணா நீர் வினாடிக்கு 480 கன அடி வந்து கொண்டு இருக்கிறது. பூண்டி ஏரியில் மேலும் தண்ணீரை சேமித்து வைக்க முடியாது என்பதால் ஏரியில் இருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு வினாடிக்கு 550 கன அடி வீதம், மதகுகள் வழியாகவும், கொசஸ்தலை ஆற்றில் உபரி நீராக வினாடிக்கு 200 கன அடியும் தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 23 அடியை நெருங்கி உள்ளது. மொத்த உயரமான 24 அடியில் தற்போது 22.80 அடிக்கு தண்ணீர் நிரம்பி இருக்கிறது.

    இதேபோல் புழல் ஏரியின் நீர்மட்டமும் மொத்த உயரமான 21 அடியில் 19.80 அடிக்கு தண்ணீர் உள்ளது. இதனால் செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளிலும் வரும் நாட்களில் பூண்டி ஏரியில் இருந்து அனுப்பப்படும் தண்ணீரை சேமித்து வைக்கமுடியாத நிலை உள்ளது. இதையடுத்து கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறக்கப்பட்டு உள்ள கிருஷ்ணா தண்ணீரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திரா அரசுக்கு கடிதம் எழுதி உள்ளனர். எனவே பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பு விரைவில் நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட 5 ஏரிகளிலும் தற்போது மொத்த கொள்ளளவில் 92 சதவீதத்துக்கு மேல் தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த ஆண்டு சென்னையில் தட்டுப்பாடின்றி குடிநீர் சப்ளை செய்யமுடியும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் ஏற்பட்ட மாண்டாஸ் புயல் காரணமாக பலத்த மழை பெய்ததால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு 1,400 கன அடியாக குறைக்கப்பட்டது.
    • கடந்த 3 நாட்களாக ஆந்திராவில் பலத்த மழை பெய்து வருவதால் அங்குள்ள விவசாயிகள் கிருஷ்ணா நீரை பயன்படுத்தவில்லை.

    ஊத்துக்கோட்டை:

    கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திரா அரசு வருடம் தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரை நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும்.

    கடந்த நவம்பர் 28-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து முதலில் 2 ஆயிரத்து 100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

    வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் ஏற்பட்ட மாண்டாஸ் புயல் காரணமாக பலத்த மழை பெய்ததால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு 1,400 கன அடியாக குறைக்கப்பட்டது.

    வழக்கமாக ஆந்திரா விவசாயிகள் கிருஷ்ணா கால்வாய் நீரை பயன்படுத்துவார்கள். இதன் காரணமாக பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 300 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    கடந்த 3 நாட்களாக ஆந்திராவில் பலத்த மழை பெய்து வருவதால் அங்குள்ள விவசாயிகள் கிருஷ்ணா நீரை பயன்படுத்தவில்லை. இதனால் பூண்டிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை வினாடிக்கு 533 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 34.49 அடியாகவும் தண்ணீர் இருப்பு 2.979 டி.எம்.சி.யாகவும் உள்ளது. ஏரிக்கு மழை நீர் மற்றும் கிருஷ்ணா நீர்வரத்து 1,235 கன அடியாக இருந்தது.

    பூண்டி ஏரியில் இருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு இணைப்பு கால்வாய் வழியாக 650 கன அடியும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக 38 கன அடியும் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    • சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13.222 டி.எம்.சி. ஆகும்.
    • வருகிற பிப்ரவரி மாதம் கண்டலேறு அணையை புதுப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை நேரத்தின் போதும், வடகிழக்கு பருவமழை தொடக்கத்தின் போதும் நல்ல மழை பெய்ததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் அதிக அளவு தண்ணீர் இருப்பு உள்ளது.

    மேலும் தமிழகம்-ஆந்திரா இடையேயான நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தின்படி ஒவ்வொரு ஆண்டும் ஆந்திராவில் இருந்து 12 டி.எம்.சி. தண்ணீர் 2 கட்டமாக தமிழகத்துக்கு திறந்து விடப்படுகிறது. சமீபத்தில் பெய்த மழை மற்றும் கிருஷ்ணா நீர்வரத்து காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பு இன்னும் சில நாட்களில் 10 டி.எம்.சி.யை எட்டிவிடும்.

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13.222 டி.எம்.சி. ஆகும். இதில் தற்போதைய நிலவரப்படி 9.459 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது.

    தமிழகத்துக்கு தற்போது வினாடிக்கு 557 கன அடி கிருஷ்ணா நீர் வந்து கொண்டிருக்கிறது. அதை வினாடிக்கு 1000 கனஅடியாக அதிகரிக்க கோரி ஆந்திர அரசிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு இதுவரை ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு 1.5 டி.எம்.சி. தண்ணீர் வந்துள்ளது. வருகிற பிப்ரவரி மாதம் கண்டலேறு அணையை புதுப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே ஜனவரிக்குள் மீதமுள்ள 6.5 டி.எம்.சி.யை பெறுமாறு நீர்வளத்துறையிடம் ஆந்திரா அரசு அறிவுறுத்தி உள்ளது.

    இதுகுறித்து தமிழக அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஆந்திர அரசு தரும் தண்ணீர் முழுவதையும் சேமித்து வைப்பது இயலாத காரியம் என்பதால் ஜனவரி மாதத்துக்குள் 4 டி.எம்.சி. தண்ணீரை பெற திட்டமிட்டுள்ளோம். இன்றைய நிலவரப்படி சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் இன்னும் 8 மாதங்களுக்கு போதுமான தண்ணீர் இருப்பு உள்ளது", என்றார்.

    • நீரியல் ஆய்வு கூடத்துக்கு ஏரியில் இருந்து தண்ணீர் செல்லும் கிணறு மதகு சேதமடைந்துள்ளது.
    • பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம்.

    ஊத்துக்கோட்டை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திரா மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

    கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த மே மாதம் 5-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. ஆரம்பத்தில் வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பின்னர் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு ஆயிரத்து 700 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

    இந்த நிலையில் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளும் முழுவதுமாக நிரம்பி விட்டதால் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தும்படி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அரசுக்கு கடிதம் எழுதினர்.

    அதன்படி கடந்த 1-ந் தேதியில் இருந்து கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்படுகிறது. பூண்டி ஏரி அருகே நீரியல் ஆய்வுகூடம் உள்ளது.

    இந்த நீரியல் ஆய்வு கூடத்துக்கு ஏரியில் இருந்து தண்ணீர் செல்லும் கிணறு மதகு சேதமடைந்துள்ளது.

    இந்த மதகு கிணற்றை அகற்றிவிட்டு புதிதாக 3 மதகு கிணறுகளை ரூ.10 கோடி செலவில் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    மேலும் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டிலிருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்துக்கு சேதமடைந்த கிருஷ்ணா நீர் கால்வாய் சீரமைப்பு பணிகளும் தொடங்கப்பட உள்ளன.

    இவற்றைக் கருத்தில் கொண்டு கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு முழுதுமாக நிறுத்தும்படி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு மீண்டும் கடிதம் எழுதி உள்ளனர்.

    பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 29.94 அடியாக பதிவாகியது. 1.725 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு விநாடிக்கு 400 கன அடி வீதமும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு விநாடிக்கு 13 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.

    • செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் போதுமான நீர் இருப்பதால் கூடுதல் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது.
    • கண்டலேறு அணையில் இருந்து வரும் கிருஷ்ணா தண்ணீர் முழுவதும் தற்போது பூண்டி ஏரியிலேயே சேமிக்கப்பட்டு வருகிறது.

    ஊத்துக்கோட்டை:

    கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திரா அரசு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீரை நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும்.

    தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஆந்திர அரசு கடந்த மாதம் 5-ந்தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்தது. இந்த தண்ணீர் கடந்த மாதம் 8-ந்தேதி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டுக்கு வந்தடைந்தது. அன்றிரவே பூண்டி ஏரிக்கு சென்றடைந்தது. தற்போதைய நிலவரப்படி பூண்டி ஏரிக்கு 550 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    சென்னை குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு பூண்டி ஏரிக்கு வரும் கிருஷ்ணா தண்ணீர் முழுவதும் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு அனுப்பப்பட்டு வந்தது. இதனால் இந்த 2 ஏரிகளிலும் நீர் இருப்பு அதிகரித்து. 90 சதவீதத்துக்கும் மேல் தண்ணீர் உள்ளது.

    இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழை காரணமாக செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    இதைத்தொடர்ந்து பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. எனினும் தொடர்ந்து 3 நாட்கள் பலத்த மழை கொட்டியதால் பாதுகாப்பு கருதி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீரை வீணாக வெளியேற்றவேண்டிய நிலை ஏற்பட்டது.

    மேலும் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் போதுமான நீர் இருப்பதால் கூடுதல் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது. இதைத்தொடர்ந்து கண்டலேறு அணையில் இருந்து வரும் கிருஷ்ணா தண்ணீர் முழுவதும் தற்போது பூண்டி ஏரியிலேயே சேமிக்கப்பட்டு வருகிறது.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மி.கனஅடி ஆகும். இதில் தற்போது 1,383 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. எனினும் பூண்டி ஏரியில் கூடுதல் தண்ணீரை சேமிக்க அதிகாரிகள் விரும்பவில்லை. மேலும் ஏரியில் உள்ள நீர் திறப்பு மதகுகளை சீரமைத்து தண்ணீர் சேமிப்பை அதிகரிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். இதேபோல் கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியிலும் போதுமான தண்ணீர் உள்ளது. இதையடுத்து கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் திறப்பை வருகிற 1-ந்தேதி முதல் நிறுத்த தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர். அடுத்த கட்டமாக செப்டம்பர் மாதத்தில் தண்ணீரை திறந்து விடும்படி கூறி உள்ளதாக தெரிகிறது.

    இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறும்போது, சென்னை குடிநீர் ஏரிகளில் போது மான தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால் கிருஷ்ணா தண்ணீர் திறப்பை ஜூலை 1-ந்தேதி முதல் நிறுத்தும்படி ஆந்திர அரசிடம் கேட்டுக்கொண்டு உள்ளோம். தற்போது ஏரியில் உள்ள தண்ணீரை வைத்து சென்னையில் 8 மாதங்களுக்கு தட்டுப்பாடு இன்றி குடிநீர் வினியோகம் செய்ய முடியும் என்றனர்.

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம, சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஆகிய 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி(11.7டி.எம்.சி) தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரிகளில் 8368 மி.கனஅடி(8.3டி.எம்.சி.) தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஆந்திர அரசு கடந்த மாதம் 5ஆம் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்தது.
    • பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 588 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திரா மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம். கோடை வெயில் காரணமாக பூண்டி ஏரி நீர்மட்டம் குறைந்து வந்தது.

    இதனை கருத்தில் கொண்டு கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடும்படி தமிழக அரசு ஆந்திரா அரசுக்கு கடிதம் எழுதியது. கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திரா அரசு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும்.

    ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீர் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும். தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஆந்திர அரசு கடந்த மாதம் 5ஆம் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்தது.

    ஆரம்பத்தில் வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அதன் பின்னர் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. தற்போது வினாடிக்கு ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்தத் தண்ணீர் கடந்த மாதம் 8-ந் தேதி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டுக்கு வந்தடைந்தது. அன்றிரவே பூண்டி ஏரிக்கு சென்றடைந்தது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம்.

    இன்று காலை காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 25.71அடி ஆக பதிவாகியது. 947 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. கிருஷ்ணா நீர் தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டுக்கு வினாடிக்கு 588 கன அடியாகவும், பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 550 கன அடி வீதம் சென்று கொண்டிருந்தது.

    மழைநீர் வினாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 588 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 13 கனஅடி வீதம் தண்ணீர் அனுப்பப்படுகிறது.

    கடந்த மாதம் 8ஆம் தேதி முதல் இன்று காலை வரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 41 நாட்களில் 2.105 டி.எம்.சி. தண்ணீர் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    ×