search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிருத்திகை பூஜை"

    • 16 வகை வாசனை திரவியங்களால் அபிஷேக அலங்காரம் நடைபெற்றது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் தண்டாயுதபாணி கோவில், பொன் காளியம்மன் கோவில், பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவில், பனப்பாளையம் மாரியம்மன் கோவில், மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவில் உள்ளிட்ட முருகன் கோவில்களில் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் முருகப்பெருமானுக்கு சந்தனம்,பால்,தயிர்,தேன், உள்ளிட்ட 16 வகை வாசனை திரவியங்களால் அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • கோவிலை சுற்றி சாமி வீதி உலா
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    போளூர்:

    போளூர் நற்குன்றம் ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் இன்று ஐப்பசி மாத கிருத்திகை நடைபெற்றது. காலையில் முருகனுக்கு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 7 மணி அளவில் முருகர் (உற்சவர்) வள்ளி, தெய்வானை உடன் கோவிலை சுற்றி வளம் வரும் நிகழ்ச்சி நடைபெறு கிறது.

    விழாவிற்கு தர்மகர்த்தா செல்வம் தலைவர் ராமச்சந்திரன், துணைத் தலைவர் கருப்பன், செயலாளர் சுப்பிரமணியன், மண்ணு, சண்முகம் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    ×