search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Krithika Puja"

    • ரூ.40 ஆயிரம், மளிகை பொருட்களை அள்ளி சென்றனர்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ஆற்காடு வீட்டு வசதி வாரிய பகுதி 2-ல் வசித்து வருபவர் நாகராஜன் (வயது 62). இவரது மனைவி வாணிஸ்ரீ. இவர்கள் மளிகை கடை நடத்தி வரு கின்றனர்.

    நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்ததும் நாகராஜன் மற்றும் வாணிஸ்ரீ ஆகியோர் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். மீண்டும் நேற்று காலை கடையை திறக்க வந் துள்ளனர்.

    அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது கடை யில் வைத்திருந்த ரூ.40 ஆயிரம் மற்றும் மளிகை பொருட் கள் திருட்டு போயிருந்தது.

    இதுகுறித்து நாகராஜன் ஆற்காடுடவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவிலை சுற்றி சாமி வீதி உலா
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    போளூர்:

    போளூர் நற்குன்றம் ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் இன்று ஐப்பசி மாத கிருத்திகை நடைபெற்றது. காலையில் முருகனுக்கு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 7 மணி அளவில் முருகர் (உற்சவர்) வள்ளி, தெய்வானை உடன் கோவிலை சுற்றி வளம் வரும் நிகழ்ச்சி நடைபெறு கிறது.

    விழாவிற்கு தர்மகர்த்தா செல்வம் தலைவர் ராமச்சந்திரன், துணைத் தலைவர் கருப்பன், செயலாளர் சுப்பிரமணியன், மண்ணு, சண்முகம் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    ×