என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிருத்திகை பூஜை"

    • கிருத்திகை நட்சத்திரம் முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது.
    • மறுநாள் ரோகிணி நட்சத்திரத்தில் நீராடி, உணவு அருந்தி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

    கிருத்திகை விரதம் என்பது முருகப்பெருமானை வழிபடுவதற்காக அனுசரிக்கப்படும் ஒரு விரதமாகும். இது முருகனுக்கு உகந்த நாளாக கருதப்படும் கிருத்திகை நட்சத்திரத்தன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த விரதத்தை மேற்கொள் வதன் மூலம் பாவங்கள் நீங்கும், திருமணத்தடைகள் நீங்கும் மற்றும் முருகனின் அருள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    முருகப் பெருமானுக்கு உகந்த நாள்: கிருத்திகை நட்சத்திரம் முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது.

    பாவங்கள் நீங்கும்: இந்த விரதத்தை கடைபிடிப்பதால், பாவங்கள் நீங்கி, புண்ணியங்கள் பெருகும் என்பது நம்பிக்கை.

    திருமணத்தடை நீங்கும்: திருமணத்திற்காக காத்திருப்பவர்கள், கிருத்திகை விரதம் இருந்தால், திருமணத்தடை நீங்கும் என்பது ஐதீகம். முருகனின் அருள் கிடைக்கும. இந்த விரதத்தை முறையாக கடைபிடிப்பதால், முருகனின் அருளும், ஆசியும் பரிபூரணமாக கிடைக்கும்.

    கிருத்திகை விரதம் கடை பிடிக்கும் முறை: அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, முருகனின் படம் அல்லது சிலையை வைத்து, தீபம் ஏற்றி வழிபட வேண்டும். முருகனுக்கு பிடித்தமான மலர்கள் மற்றும் நைவேத்தியங்களை படைத்து வழிபடலாம். விரதம் இருப்பவர்கள், பால், பழம் அல்லது எளிமையான உணவுகளை உட்கொள்ளலாம். முருகனுக்குரிய மந்திரங்கள், பாடல்களை பாராயணம் செய்யலாம். யாருக்காவது அன்னதானம் செய்வது மிகவும் சிறந்தது. மறுநாள் ரோகிணி நட்சத்திரத்தில் நீராடி, உணவு அருந்தி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

    சிலர் கிருத்திகை விரதத்தை பரணி நட்சத்திரத்திலிருந்தே தொடங்குகிறார்கள். அன்று பகல் உணவை நிறுத்தி விட்டு, கிருத்திகை அன்று முருகனை வழிபடுகிறார்கள்.

    ஆடி கிருத்திகை, தை கிருத்திகை போன்ற நாட்களும் முருகனுக்கு மிகவும் முக்கியமான நாட்களாகும். இந்த விரதத்தை கடைபிடிப்பதால், குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும் என்பது நம்பிக்கை.

    • கோவிலை சுற்றி சாமி வீதி உலா
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    போளூர்:

    போளூர் நற்குன்றம் ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் இன்று ஐப்பசி மாத கிருத்திகை நடைபெற்றது. காலையில் முருகனுக்கு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 7 மணி அளவில் முருகர் (உற்சவர்) வள்ளி, தெய்வானை உடன் கோவிலை சுற்றி வளம் வரும் நிகழ்ச்சி நடைபெறு கிறது.

    விழாவிற்கு தர்மகர்த்தா செல்வம் தலைவர் ராமச்சந்திரன், துணைத் தலைவர் கருப்பன், செயலாளர் சுப்பிரமணியன், மண்ணு, சண்முகம் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • 16 வகை வாசனை திரவியங்களால் அபிஷேக அலங்காரம் நடைபெற்றது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் தண்டாயுதபாணி கோவில், பொன் காளியம்மன் கோவில், பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவில், பனப்பாளையம் மாரியம்மன் கோவில், மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவில் உள்ளிட்ட முருகன் கோவில்களில் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் முருகப்பெருமானுக்கு சந்தனம்,பால்,தயிர்,தேன், உள்ளிட்ட 16 வகை வாசனை திரவியங்களால் அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    ×