search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிருத்திகை வழிபாடு"

    வைத்தீஸ்வரன்கோவிலில் கிருத்திகை வழிபாடு நிகழ்ச்சியில் பஞ்சமூர்த்திகள் புஷ்பபல்லக்கு வீதியுலா நடந்தது.
    சீர்காழி:

    மயிலாடுதுறைற மாவட்டம், வைத்தீஸ்வரன் கோயிலில் புகழ்பெற்றற தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. இங்கு வைகாசி மாதம் நடைபெறும் கிருத்திகை வழிபாடு மண்டலாபிஷேக கிருத்திகை என்று அழைக்கப்படுகிறது. இதை முன்னிட்டு வள்ளி, தெய்வானை உடனாகிய செல்வமுத்து க்குமாரசாமிக்கு கார்த்திகை மண்டபத்தில் அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு மகா அபிஷேகமும், தொடர்ந்து சண்முகார்ச்சனை மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    இதில், தருமபுர ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று வழிபட்டார். தொடர்ந்து, கற்பக விநாயகர், சுவாமி -அம்பாள், செல்வமுத்துக்குமாரசாமி, சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்தி சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் தனித்தனியே புஷ்பப் பல்லக்கில் எழுந்தருளினர். தொடர்ந்து நான்கு வீதிகளில் வீதியுலா நடைபெற்றது.
    ×