என் மலர்
உள்ளூர் செய்திகள்

போளூர் நற்குன்றம் ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் கிருத்திகை பூஜை
- கோவிலை சுற்றி சாமி வீதி உலா
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
போளூர்:
போளூர் நற்குன்றம் ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் இன்று ஐப்பசி மாத கிருத்திகை நடைபெற்றது. காலையில் முருகனுக்கு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 7 மணி அளவில் முருகர் (உற்சவர்) வள்ளி, தெய்வானை உடன் கோவிலை சுற்றி வளம் வரும் நிகழ்ச்சி நடைபெறு கிறது.
விழாவிற்கு தர்மகர்த்தா செல்வம் தலைவர் ராமச்சந்திரன், துணைத் தலைவர் கருப்பன், செயலாளர் சுப்பிரமணியன், மண்ணு, சண்முகம் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
Next Story






