search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராம மக்கள் பயணம்"

    • இன்றைய நாகரீக காலத்தில் படித்தவர்கள் இதுபோன்ற வண்டிகளில் ஏறுவதற்கு தயக்கம் காட்டுவதுண்டு.
    • குடும்பத்தை சேர்ந்தவர்கள் மாசி திருவிழாவில் எந்தவித தயக்கமும் இன்றி ஒற்றுமையுடன் மாட்டு வண்டிகளில் செல்கிறோம்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை கிழக்கு தெருவை சேர்ந்த பொதுமக்கள் மாசி மாத சிவராத்திரியை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் தங்களது குலதெய்வ கோவிலில் சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம்.

    இதற்காக நிலக்கோட்டையில் இருந்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா திடியன் மலை அடிவாரத்தில் உள்ள வாலகுருநாதன் கோவிலுக்கு பாரம்பரியமாக இரட்டை மாட்டு டயர் வண்டியில் பங்காளிகள் அனைவரும் ஒன்றாக இணைந்து புறப்பட்டனர்.

    நிலக்கோட்டையில் வாண வேடிக்கையுடன் மேளதாளம் முழங்க ஊர்வலமாக சாமிபெட்டி அழைப்புடன் நிலக்கோட்டை, மெயின் பஜார், அணைப்பட்டி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஊர்வலமாக வந்து கருப்புசாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர்.

    பின்னர் ஊர்வலம் தொடங்கி மாட்டு வண்டியில் கிளம்பிச் சென்றனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

    எங்கள் முன்னோர் காலத்தில் இருந்து 7 வருடத்திற்கு ஒருமுறை மாட்டு டயர் வண்டி மூலமாக குடும்பம் குடும்பமாக அனைவரும் மாசிமகா சிவராத்திரி விழாவுக்கு செல்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் நாங்கள் சலங்கை கட்டிய மாட்டுடன் பாரம்பரிய முறையில் செல்கிறோம்.

    இன்றைய நாகரீக காலத்தில் படித்தவர்கள் இதுபோன்ற வண்டிகளில் ஏறுவதற்கு தயக்கம் காட்டுவதுண்டு. ஆனால் எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மாசி திருவிழாவில் எந்தவித தயக்கமும் இன்றி ஒற்றுமையுடன் மாட்டு வண்டிகளில் செல்கிறோம். சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான இந்த பயணம் வருங்கால சந்ததியினருக்கும் வழிகாட்ட வேண்டும் என்றனர். இதனை வழிநெடுகிலும் பொதுமக்கள் மிகுந்த ஆச்சரித்துடன் கண்டு ரசித்தனர்.

    ×