search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிணற்றில் தவறி விழுந்த"

    • பூனை திடீரென தவறி கிணற்று க்குள் விழுந்து விட்டது.
    • தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கயிறு கட்டி கிணற்றில் இறங்கி பூனையை உயிருடன் மீட்டனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டடி பாளையத்தை சேர்ந்தவர் வெங்க டேஷ்ராஜ். இவரது தோட்டத்து கிணற்றில் சுமார் 40 அடிக்கு மேல் தண்ணீர் உள்ளது.

    இந்த நிலையில் அந்த கிணற்றின் அருகே ஒரு பூனை சுற்றி கொண்டு இருந்தது. அந்த பூனை திடீரென தவறி கிணற்று க்குள் விழுந்து விட்டது.

    இதை தொடர்ந்து கிணற்றின் மேலே வரமுடியாமல் சத்தம் போட்டு கொண்டே இருந்தது. சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்த பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தனர்.

    அந்த கிணற்றுக்குள் பூனை விழுந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கயிறு கட்டி கிணற்றில் இறங்கி பூனையை உயிருடன் மீட்டனர்.

    • சேகருக்கு சரிவர நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார்.
    • சுமார் அரை மணி நேரத்துக்கு பிறகு சேகர் பிணமாக மீட்கப்பட்டார்.

    அந்தியூர், 

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசத்தை அடுத்த குழியூரை சேர்ந்தவர் சேகர்.

    இவரும் இவரது மகன் ஹரிஹரனும் அட்டக்கல்லூ ரில் உள்ள மாச நாயக்கர் என்பவரது தோட்டத்து கிணற்றில் குளிப்பதற்காக சென்றனர்.

    கிணற்றின் அருகில் நின்று கொண்டிருந்த சேகர் எதிர்பாராத விதமாக கால் தவறி கிணற்றுக்குள் விழு ந்தார்.

    சேகருக்கு சரிவர நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார். இது சம்பந்தமாக அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அந்தியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தேடினர்.

    சுமார் அரை மணி நேரத்துக்கு பிறகு சேகர் பிணமாக மீட்கப்பட்டு அந்தியூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இதுகுறித்து அவரது மனைவி ஆனந்தி கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×