search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காஷ்மீர் மாநிலம்"

    காஷ்மீர் மாநிலத்தில் ஜம்மு பகுதியை ஸ்ரீநகருடன் இணைக்கும் நெடுஞ்சாலையில் வாரத்தில் இரு நாட்கள் பொது வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. #MehboobaMufti #civilianrestriction #JammuSrinagarHighway
    ஜம்மு:

    சட்டசபை முடக்கப்பட்ட காஷ்மீர் மாநிலத்தில் தற்போது கவர்னர் சத்யபால் சிங் தலைமையில் ஜனாதிபதி ஆட்சிமுறை அமலில் உள்ளது. புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகன வரிசையின்மீது கடந்த 14-2-2019 அன்று நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலுக்கு பின்னர் மாநிலத்தின் பல பகுதிகளில் பயங்கரவாதிகளை தேடிப்பிடிக்கும் அல்லது சுட்டுகொல்லும் தேடுதல் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.

    விரைவில் அங்கு பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிர்வாகம் தொடர்பாக சமீபத்தில் ஆய்வு நடத்திய கவர்னர் சில முக்கிய முடிவுகளை அறிவித்தார்.

    தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக வெளி இடங்களில் இருந்து காஷ்மீர் மாநிலத்தின் பல பகுதிகளுக்கு பாதுகாப்பு படையினரை அனுப்பி வைக்க வேண்டியுள்ளது. இந்நிலையில், முன்னர் புல்வாமாவில் நிகழ்ந்ததுபோல் பாதுகாப்பு படையினர் செல்லும் வாகனங்கள் மீது தாக்குதல் நடைபெறாமல் இருக்க ஜம்மு பகுதியை ஸ்ரீநகருடன் இணைக்கும் 370 கிலோமீட்டர் நீளமுள்ள நெடுஞ்சாலையில் வாரத்தில் இரு நாட்கள் பொது வாகனங்களுக்கு  தடை விதிக்கப்பட்டது.


    இதனால், கடந்த 2 நாட்களாக இந்த நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு லாரிகள் மற்றும் தனியார் வாகனங்கள் இன்று அனுப்பி வைக்கப்பட்டன.

    இதற்கிடையே, ரம்பான் மாவட்டத்தில் உள்ள அனோக்கி நீர்வீழ்ச்சி அருகே ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டதால் இப்பகுதியிலும் போக்குவரத்து முடங்கியது.

    இந்த நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட சாலை சீரமைக்கப்பட்டு, ஜம்முவை நோக்கி இன்று அதிகாலை சுமார் 2 ஆயிரம் வாகனங்கள் புறப்பட்டு சென்றன.

    இந்நிலையில், பாதுகாப்பு என்ற பெயரில் ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சலையில் பொது வாகனங்கள் செல்ல விதிக்கப்பட்ட தடைக்கு அம்மாநில முன்னாள் முதல் மந்திரிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா, இந்த தடையால் வர்த்தகர்கள் பெருமளவிலான பாதிப்பு அடைந்துள்ளனர். சர்வாதிகாரத்துக்கு இணையான இந்த தடையால், சரக்கு லாரிகள் சரியாக சென்றுவர முடியாத நிலையில் உணவுப் பொருள் பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வு ஏற்படும் ஆபத்து உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

    பாதுகாப்பு படையினரை ரெயில்கள் மூலமாக அனுப்பி வைக்கலாம். அல்லது, இரவு நேரங்களில் மட்டும் பொது வாகனங்களுக்கு தடை விதித்து இந்த நெடுஞ்சாலை வழியாக அனுப்பி வைக்கலாம். எனவே, கவர்னர் இந்த தடையை திரும்பப்பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

    இதே கருத்தை முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தியும் பிரதிபலித்துள்ளார். இது எங்கள் மாநிலம், எங்கள் மாநிலத்துக்குட்பட்ட சாலைகளை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தும் உரிமை இங்குள்ள மக்களுக்கு உள்ளது என அவர் தெரிவித்தார்.

    மேலும், காஷ்மீர் மக்களின் அடிப்படை சுதந்திரத்தை பறிக்கும் இந்த தடை உத்தரவால் மாணவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தடைக்கு யாரும் அடிபணிய கூடாது. மக்கள் தங்களது விருப்பம்போல் சென்று வரவேண்டும். அவசியம் ஏற்பட்டால் இந்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்று மெஹபூபா முப்தி எச்சரித்துள்ளார். #MehboobaMufti  #civilianrestriction #JammuSrinagarHighway 
    காஷ்மீர் மாநிலத்தில் பிரிவினைவாத இயக்கங்களின் தலைவர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் 100 கம்பெனி துணை ராணுவப்படை அங்கு விரைந்துள்ளது. #Centredeployforces #100companiesforces #JammuKashmir #pulwamaattack
    ஜம்மு:

    காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் பிரிவினைவாத இயக்கங்களின் தலைவர்களான யாசின் மாலிக், அப்துல் ஹமித் பயாஸ் உள்ளிட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். சிலர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்த அதிரடி கைது நடவடிக்கைக்கு அங்குள்ள மற்ற பிரிவினைவாத இயக்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுபோன்ற நடவடிக்கைகள் காஷ்மீரில் பதற்றத்தை இன்னும் அதிகரிக்க வைக்கும் என அந்த இயக்கங்களை சேர்ந்த பிரமுகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்த கருத்தை ஆமோதிக்கும் வகையில் இன்று பேட்டியளித்த காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி மெஹ்பூபா முப்தி மத்திய அரசின் இந்த நடவடிக்கை நிலைமையை மேலும் தீவிரமாக்கும் என குறிப்பிட்டுள்ளார்.



    இதற்கிடையில், அரசியலமைப்பு சட்டம்  35A-வின்கீழ் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் விரைவில் விசாரணை நடத்துகிறது.

    இந்நிலையில், காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்கவும் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும் கூடுதலாக துணை ராணுவப்படையினரை அனுப்பி வைக்குமாறு மாநில அரசின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

    இதைதொடர்ந்து, மத்திய ரிசர்வ் படையை சேர்ந்த 45 கம்பெனி வீரர்கள், எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த 35 கம்பெனி வீரர்கள், ஷாஸ்திர சீமா பல் படையை சேர்ந்த 10 கம்பெனி வீரர்கள், இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படையை சேர்ந்த 10 கம்பெனி வீரர்கள் என 100 கம்பெனி வீரர்கள் (ஒரு கம்பெனி வீரர்கள் என்பது சுமார் 50 வீரர்கள் கொண்ட குழுவாகும்) காஷ்மீர் மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த படையினர் பதற்றம் நிறைந்த பகுதிகளில் பணியமர்த்தப்பட்டு சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் கண்காணிப்பு மற்றும் வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். #Centredeployforces #100companiesforces  #JammuKashmir #pulwamaattack
    ஜம்மி-காஷ்மீர் மாநிலத்தில் இன்று நடைபெற்ற மூன்றாவதுகட்ட பஞ்சாயத்து தேர்தலில் 75.2 சதவீதம் வாக்குகள் பதிவாகின. #Kashmirpanchayatelection
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தற்போது தேர்தல் நடைபெற்று வருகிறது. முதலில் நகராட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 8,10,13,16 தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

    இதேபோல், பஞ்சாயத்து தேர்தல்கள்  கடந்த 17-ம் தேதி தொடங்கி 9 கட்டங்களாக  நடைபெறுகிறது. நவம்பர் 17, 20, 24, 27,29 மற்றும் டிசம்பர் 1,4,8,11 ஆகிய தேதிகளில் இந்த ஒன்பதுகட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து தனிநாடாக அறிவிக்க வேண்டும் என அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பிரிவினைவாத இயக்கத் தலைவர்கள் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களை புறக்கணிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர். எனினும், கடந்த மாதம் நடைபெற்ற நகராட்சி தேர்தல்களில் மக்கள் பெருமளவில் வாக்களித்திருந்தனர்.



    இந்நிலையில், முதல்கட்ட பஞ்சாயத்து தேர்தல் கடந்த 17-ம் தேதி நடந்து முடிந்தது. ஜம்மு பிராந்தியத்தில் 7 மாவட்டங்கள், காஷ்மீர் பிராந்தியத்தில் 7 மாவட்டங்கள் என மொத்தம் 14 மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மூன்றாவதுகட்ட தேர்தலில் வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி, பிற்பகல் 2 மணிக்கு நிறைவடைந்தது.

    இன்றைய மூன்றாம்கட்ட தேர்தலில் 96 கிராம தலைவர் பதவி மற்றும் 1,437 கவுன்சிலர் பதவிக்கான நபர்கள் போட்டியின்றி ஏற்கனவே தேர்வாகி விட்டனர்.

    மீதமுள்ள 358 கிராம தலைவர் பதவி மற்றும் 1,652 கவுன்சிலர் பதவிக்கு மொத்தம் 5,239 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் தகுதியானவர்களை தேர்தெடுக்க சுமார் 3.20 லட்சம் வாக்களர்கள் தங்களது ஜனநாயக கடமையை இன்று நிறைவேற்றினர்.

    இன்றைய தேர்தலில் ஜம்மு பகுதியில்  அதிகபட்சமாக 83 சதவீதமும், காஷ்மீர் பகுதியில் 55.7 சதவீதமும், ஒட்டுமொத்தமாக 75.2 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளது.

    கடந்த 17-ம் தேதி நடந்த முதல்கட்ட தேர்தலில் 74.1 சதவீதம் வாக்குகளும், 20-ம் தேதி நடந்த இரண்டாம்கட்ட தேர்தலில் 71.1 சதவீதம் வாக்குகளும் பதிவாகி இருந்தது நினைவிருக்கலாம். இன்று பதிவான வாக்குகள் ஒன்பதுகட்ட தேர்தலும் முடிந்த பின்னர் எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. #Kashmirpanchayatelection
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று நடந்து முடிந்த இரண்டாவதுகட்ட பஞ்சாயத்து தேர்தலில் 71.1 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. #Kashmirpanchayatelection
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தற்போது தேர்தல் நடைபெற்று வருகிறது. முதலில் நகராட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 8,10,13,16 தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

    இதேபோல், பஞ்சாயத்து தேர்தல்கள் இன்று (17-ம் தேதி) தொடங்கி 9 கட்டங்களாக நடைபெறவுள்ளது. நவம்பர் 17, 20, 24, 27,29 மற்றும் டிசம்பர் 1,4,8,11 ஆகிய தேதிகளில் இந்த ஒன்பதுகட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து தனிநாடாக அறிவிக்க வேண்டும் என அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பிரிவினைவாத இயக்கத் தலைவர்கள் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களை புறக்கணிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர். எனினும், கடந்த மாதம் நடைபெற்ற நகராட்சி தேர்தல்களில் மக்கள் பெருமளவில் வாக்களித்திருந்தனர்.

    இந்நிலையில், முதல்கட்ட பஞ்சாயத்து தேர்தல் கடந்த 17-ம் தேதி நடந்து முடிந்தது. ஜம்மு பிராந்தியத்தில் 7 மாவட்டங்கள், காஷ்மீர் பிராந்தியத்தில் 7 மாவட்டங்கள் என மொத்தம் 14 மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று இரண்டாவதுகட்ட தேர்தலில் வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி, பிற்பகல் 2 மணிக்கு நிறைவடைந்தது.

    இந்த இரண்டாம்கட்ட தேர்தலில் 90 கிராம தலைவர் பதவி மற்றும் 1,069 கவுன்சிலர் பதவிக்கான நபர்கள் போட்டியின்றி ஏற்கனவே தேர்வாகி விட்டனர். மீதமுள்ள 281 கிராம தலைவர் பதவி மற்றும் 1,286 கவுன்சிலர் பதவிக்கு மொத்தம் 4014 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் தகுதியானவர்களை தேர்தெடுக்க மொத்தம் 2,179 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.



    இன்றைய தேர்தலில் ஒட்டுமொத்தமாக 71.1 சதவீதம் வாக்குகள் பதிவாகின, அதிகபட்சமாக ஜம்மு பகுதியில் 80.4 சதவீதமும், காஷ்மீர் பகுதியில் 52.2 சதவீதமும் பதிவாகியுள்ளது. ஜம்முவில் உள்ள உதம்பூர் மாவட்டத்தில் மிக அதிகபட்சமாக 83.9 சதவிதம் வாக்குகள் பதிவானது.

    இன்றைய தேர்தலில் மிக மோசமாக அனந்த்பூர் மாவட்டத்தில் வெறும் ஒரு சதவீதம் வாக்குகளே பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இன்று பதிவான வாக்குகள் ஒன்பதுகட்ட தேர்தலும் முடிந்த பின்னர் எண்ணப்படும். #Kashmirpanchayatelection
    ×