search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "JammuKashmir"

    • பொதுமக்கள் மத்தியில் வதந்தி பரவாமல் இருக்க பதேர்வா மற்றும் கித்வார் நகரங்களில் இணைய தள சேவை இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு உள்ளது.
    • முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மத மோதல் ஏற்படாமல் இருக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சமீபகாலமாக வெளிமாநிலத்தவர்கள் மற்றும் இந்து பண்டிட் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவம் அதிகரித்து வருகிறது.

    அவர்களை குறி வைத்து பயங்கரவாதிகள் தாக்கி வருகிறாரகள். இதில் பள் ளி ஆசிரியை, வங்கி மேலாளர் உள்பட பலர் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளனர்

    இந்த நிலையில் அங்குள்ள பதேர்வா நகரில் உள்ள ஒரு மசூதியில் இருந்து மோதலை தூண்டும் வகையில் வீடியோ வெளியானது. சமுக வலை தளங்களில் இது வேகமாக பரவியதால். பதேர்வா நகரில் பதட்டமான சூழ்நிலை உருவானது. இது தொடர்பாக போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்தனர்

    இதையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மத மோதல் ஏற்படாமல் இருக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    மேலும் தோடா,கித்வார் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டு உள்ளது. பொதுமக்கள் மத்தியில் வதந்தி பரவாமல் இருக்க பதேர்வா மற்றும் கித்வார் நகரங்களில் இணைய தள சேவை இணைப்புகள் அனைத்தும் துண்டிக்க்பட்டு உள்ளது. தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், அமைதி நிலவுவதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக மத்திய மந்திரி ஜிஜேந்திரசிங் கூறும் போது மூத்த மத தலை வர்கள் ஒன்று கூடி பேசி அமைதியை கடைபிடிக்க வேண்டும் என வேண்டு கோள் விடுத்துள்ளார்.

    சட்டம்-ஒழுங்கை சீர் குலைக்க யாராவது முயற்சி செய்தால் அவர்கள் மீ து கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    காஷ்மீர் மாநிலத்தில் பிரிவினைவாத இயக்கங்களின் தலைவர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் 100 கம்பெனி துணை ராணுவப்படை அங்கு விரைந்துள்ளது. #Centredeployforces #100companiesforces #JammuKashmir #pulwamaattack
    ஜம்மு:

    காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் பிரிவினைவாத இயக்கங்களின் தலைவர்களான யாசின் மாலிக், அப்துல் ஹமித் பயாஸ் உள்ளிட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். சிலர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்த அதிரடி கைது நடவடிக்கைக்கு அங்குள்ள மற்ற பிரிவினைவாத இயக்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுபோன்ற நடவடிக்கைகள் காஷ்மீரில் பதற்றத்தை இன்னும் அதிகரிக்க வைக்கும் என அந்த இயக்கங்களை சேர்ந்த பிரமுகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்த கருத்தை ஆமோதிக்கும் வகையில் இன்று பேட்டியளித்த காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி மெஹ்பூபா முப்தி மத்திய அரசின் இந்த நடவடிக்கை நிலைமையை மேலும் தீவிரமாக்கும் என குறிப்பிட்டுள்ளார்.



    இதற்கிடையில், அரசியலமைப்பு சட்டம்  35A-வின்கீழ் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் விரைவில் விசாரணை நடத்துகிறது.

    இந்நிலையில், காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்கவும் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும் கூடுதலாக துணை ராணுவப்படையினரை அனுப்பி வைக்குமாறு மாநில அரசின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

    இதைதொடர்ந்து, மத்திய ரிசர்வ் படையை சேர்ந்த 45 கம்பெனி வீரர்கள், எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த 35 கம்பெனி வீரர்கள், ஷாஸ்திர சீமா பல் படையை சேர்ந்த 10 கம்பெனி வீரர்கள், இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படையை சேர்ந்த 10 கம்பெனி வீரர்கள் என 100 கம்பெனி வீரர்கள் (ஒரு கம்பெனி வீரர்கள் என்பது சுமார் 50 வீரர்கள் கொண்ட குழுவாகும்) காஷ்மீர் மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த படையினர் பதற்றம் நிறைந்த பகுதிகளில் பணியமர்த்தப்பட்டு சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் கண்காணிப்பு மற்றும் வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். #Centredeployforces #100companiesforces  #JammuKashmir #pulwamaattack
    ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களில் ஏற்பட்ட சாலை விபத்துக்களில் பலியானோர் குடும்பத்துக்கு பிரதமர் மோடி ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். #JammukashmirAccident #PMModi
    புதுடெல்லி:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பனிஹால் என்ற இடத்தில் இருந்து ரம்பான் நகரை நோக்கி ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை வழியாக நேற்று ஒரு மினி பஸ் சென்று கொண்டிருந்தது.

    கேலா மோத் பகுதியில் ஒரு குறுகிய வளைவில் திரும்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோரத்தில் உள்ள பெரிய பள்ளத்தில் விழுந்து, கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 10 பேர் படுகாயமடைந்தனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

    இதேபோல், உத்தரகாண்டில் உள்ள உத்தர காசியில் நடைபெற்ற சாலை விபத்தில் 9 யாத்ரீகர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.



    இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களில் ஏற்பட்ட சாலை விபத்துக்களில் பலியானோர் குடும்பத்துக்கு பிரதமர் மோடி ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் தனது டுவிட்டரில் கூறுகையில், ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களில் ஏற்பட்ட சாலை விபத்துக்களில் பலியானோர் குடும்பத்துக்கு பிரதமர் மோடி ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என பதிவிட்டுள்ளது. #JammuKashmirAccident #PMModi
    ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா எல்லப்பகுதியில் பயங்கராவாத இயக்கத்தில் இணைந்த 4 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையிடம் இன்று சரணடைந்தனர். #JammuKashmir #MilitantsSurrender
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து பயங்கரவாதிகள் தங்கள் இயக்கத்துக்காக இளைஞர்களை மூளைச்சலவை செய்து, பயிற்சி அளித்து பயங்கரவாத இயக்கத்துடன் இணைத்துக் கொள்கின்றனர். இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாவட்டம் குப்வாரா மாவட்டத்தில் இருந்து 4 பேரை அல்-பத்ர் இயக்கத்தில் இணைத்து, அவர்களை 3 பயங்கரவாதிகள் அழைத்து செல்வதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது, காட்டுப்பகுதி வழியாக வந்த பயங்கரவாதிகள், புதிதாக இணைந்த 4 பேரை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடினர். மேலும், பலத்த துப்பாக்கிச் சண்டைக்கு பிறகு பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த 4 பேர் பாதுகாப்பு படையிடம் சரணடைந்தனர்.

    மேலும், தப்பியோடிய பயங்கரவாதிகள் தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். #JammuKashmir #MilitantsSurrender 
    காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் ராணுவ அதிகாரி மற்றும் 3 வீரர்கள் பலியானார்கள். #Jammukashmir #militantgunneddown

    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலம் பாண்டி போரா மாவட்டத்தில் குரேஷ் செக்டார் உள்ளது.

    இங்குள்ள கோவிந்த் நல்லா என்ற பகுதியின் எல்லையில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர்.

    பயங்கரவாதிகளின் முயற்சியை முறியடிக்கும் விதமாக அங்கிருந்த ராணுவ ரோந்து வீரர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். பயங்கரவாதிகளும் துப்பாக்கியால் சுட்டவாறு முன்னேறினர். இருதரப்பினர் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது.

    பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ மேஜர் மற்றும் 3 வீரர்கள் குண்டு பாய்ந்து பலியானார்கள். பலியான ராணுவ மேஜரின் பெயர் கே.பி.ரானே என்பது தெரியவந்தது. ஜாமிசிங், விக்ரம்ஜித், மன்தீப் ஆகிய வீரர்கள் வீர மரணம் அடைந்தது தெரிய வந்தது.

    பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    ராணுவ வீரர்களின் அதிரடியான தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் ஓடியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அந்த பகுதியில் மேலும் பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

    ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். #JammuKashmir #MilitantstAttack #SecutiryForceEncounter
    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்துக்குட்பட்ட ஹயுனா டிரால் என்ற பகுதியில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து, அந்த பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அவர்கள்மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் எதிர் தாக்குதல் நடத்தினர். சிலமணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக முதல் கட்ட தகவல் வெளியானது. 

    இந்நிலையில், அதே பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் மூன்றாவது பயங்கரவாதி உடல் சிக்கியது. இதையடுத்து, பாதுகாப்பு படையினருடனான என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் எண்ணிக்கை 3 ஆனது. இத்துடன் அங்கு துப்பாக்கி சண்டை முடிவடைந்தது. விசாரணையில் அவர்கள் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது.

    இந்த தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து, அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. #Kashmir #Kashmirencounter #Pulwamaencounter #Terrorists killed
    ஜம்முவில் பேருந்து நிறுத்தம் அருகில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் மூன்று போலீசார் படுகாயம் அடைந்தனர். #Jammu #GrenadeAttack
    ஸ்ரீநகர்:

    ஜம்மு பேருந்து நிலையம் அருகில் நேற்று நள்ளிரவு போலீசார் வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் போலீசார் வாகனத்தின் மீது கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் போலீசார் வாகனம் சேதமடைந்தது. அதில் பயணித்த 3 போலீசார் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்த பாதுகாப்பு படையினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Jammu #GrenadeAttack
    பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு நாளை நடைபெற இருந்த காஷ்மீர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகின்றன என பல்கலை. நிர்வாகம் அறிவித்துள்ளது. #NarendraModi #KashmirUniversityExams
    ஸ்ரீநகர்:
        
    ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். பிரதமரின் வருகைக்கு காஷ்மீரில் செயல்பட்டு வரும் பல்வேறு பிரிவினைவாத தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

    காஷ்மீரின் பல்வேறு பிரிவினைவாத இயக்க தலைவர்கள், பிரதமர் மோடிக்கு எதிர்ப்பை காட்டும் விதமாக மக்களை திரட்டி லால் சவுக் சதுக்கத்தை நோக்கி கண்டன பேரணி நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர். இதையடுத்து, காஷ்மீரில் செயல்பட்டு வரும் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கை போலீசார் நேற்று கைது செய்தனர்.

    இந்நிலையில், பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு காஷ்மீர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகின்றன என பல்கலை. நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக பல்கலை. நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாளை நடக்கவுள்ள பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. தேர்வுகள் நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். ஏற்கனவே நடந்து வரும் செமஸ்டருக்கான தேர்வுகள் நாளைக்கு பதில் நாளை மறுதினம் நடைபெறும் என தெரிவித்துள்ளது. #NarendraModi #KashmirUniversityExams
    பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு, காஷ்மீரில் செயல்பட்டு வரும் பிரிவினைவாத இயக்க தலைவர் யாசின் மாலிக்கை போலீசார் இன்று கைது செய்தனர். #NarendraModi #Kashmirprotest
    ஸ்ரீநகர்:
        
    ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் வரும் 19-ம் தேதி நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். பிரதமரின் வருகைக்கு காஷ்மீரில் செயல்பட்டு வரும் பல்வேறு பிரிவினைவாத தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

    இதற்கிடையே, ஜே.ஆர்.எல் எனும் கூட்டு இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் பிரிவினைவாத இயக்க தலைவர்களான சயித் அலி ஷா கிலானி, மிர்வாஸ் உமர் பரூக் மற்றும் ஜே.கே.ஆர்.எல். அமைப்பின் தலைவர் முகமது யாசின் மாலிக் ஆகியோர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் காஷ்மீர் வரும் மோடிக்கு எதிர்ப்பை காட்டும் விதமாக, மக்களை திரட்டி லால் சவுக் சதுக்கத்தை நோக்கி கண்டன பேரணி நடத்தப்படும் என தெரிவித்தனர்.



    இந்நிலையில், பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு, காஷ்மீரில் செயல்பட்டு வரும் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கை போலீசார் இன்று கைது செய்தனர்.

    இதுதொடர்பாக ஜே.கே.ஆர்.எல். அமைப்பின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், யாசின் மாலிக் ஜே.ஆர்.எல் எனும் கூட்டு இயக்க தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டம் முடிந்து வீடு திரும்பிய அவரை போலீசார் கைது செய்துள்ளனர். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டே அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவித்தார். #NarendraModi #Kashmirprotest
    ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லையோரம் அமைந்துள்ள சோதனை சாவடிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் பி.எஸ்.எப் வீரர் ஒருவர் காயம் அடைந்தார். #PakistanArmyViolates
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சம்பா மற்றும் கதுவா மாவட்டங்கள் சர்வதேச எல்லையோரம் அமைந்துள்ளன. இந்த மாவட்டங்களில் உள்ள சோதனை சாவடிகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று நள்ளிரவில் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். அவர்கள் கையெறி குண்டுகளையும் வீசினர்.

    இந்த தாக்குதலுக்கு இந்திய படையினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர். ஆனாலும், இந்த தாக்குதலில் பி.எஸ்.எப். வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார். சக வீரர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    கடந்த சில தினங்களுக்கு முன் சம்பா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் பி எஸ் எப் வீரர் ஒருவர் பலியானது குறிப்பிடத்தக்கது. #PakistanArmyViolates
    ×