search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காளிகாம்பாள்"

    • யாது மாகி நின்றாய் - காளீ! எங்கும் நீநி றைந்தாய்
    • சக்தி சக்தி என்றால் இன்பம் தானே சேரும் சக்தி சக்தி என்றால் செல்வம் தானே ஊறும்

    பாரதியார் சென்னை, பிராட்வேயில் பணிபுரிந்தபோது அருகிலுள்ள ஸ்ரீ காளிகாம்பாள் கமடேஸ்வரர் திருக்கோவிலுக்கு வருகை தருவது வழக்கமாக இருந்தது

    அப்போது காளிகாம்பாள் முன் மெய்மறந்து நின்று பல பாடல்களைப் பாடியுள்ளார். அவற்றுள், `யாதுமாகி நின்றாய் காளீ' என்னும் இப்பாடல் குறிப்பிடத்தக்கது.

    காளி ஸ்தோத்திரம்

    யாது மாகி நின்றாய் - காளீ!

    எங்கும் நீநி றைந்தாய்

    தீது நன்மை யெல்லாம் - நின்றவன்

    செயல்க ளன்றி யில்லை

    போதும் இங்கு மாந்தர் - வாழும்

    பொய்மை வாழ்க்கை யெல்லாம்

    ஆதி சக்தி, தாயே! - என்மீ

    தருள் புரிந்து காப்பாய்!

    எந்த நாளும் நின்மேல் - தாயே!

    இசைகள் பாடி வாழ்வேன்;

    கந்தனைப் பயந்தாய் - தாயே

    கருணை வெள்ள மானாய்!

    மந்தமாரு தத்தில் - வானில்

    மலையி னுச்சி மீதில்

    சிந்தை யெங்கு செல்லும் - அங்குன்

    செம்மை தோன்று மன்றோ!

    கர்ம யோக மொன்றே - உலகில்

    காக்கு மென்னும் வேதம்

    தர்மநீதி சிறிதும் - அங்கே

    தவற லென்ப தின்றி

    மர்ம மான பொருளாம் - நின்றன்

    மலரடிக் கண் நெஞ்சம்

    செம்மையுற்று நாளும் - சேர்ந்தே

    தேசு கூட வேண்டும்.

    என்ற னுள்ள வெளியில் - ஞானத்

    திரவி யேற வேண்டும்;

    குன்ற மொத்த தோளும் - மேருக்

    கோல மொத்த வடிவும்

    நன்றை நாடு முனமு - நீயெந்

    நாளு மீதல் வேண்டும்;

    ஒன்றைவிட்டு மற்றோர் - துயரில்

    உழலும் நெஞ்சம் வேண்டா

    வான கத்தி னொளியைக் - கண்டே

    மன மகிழ்ச்சி பொங்கி

    யானெ தற்கும் அஞ்சேன் - ஆகி

    எந்த நாளும் வாழ்வேன்;

    ஞான மொத்த தம்மா! - உவமை

    நானு ரைக்கொ னாதாம்!

    வான கத்தி னொளியின் - அழகை

    வாழ்த்து மாறி யாதோ?

    ஞாயி றென்ற கோளம் - தருமோர்

    நல்ல பெரொ ளிக்கே

    தேய மீதோர் உவமை - எவரே

    தேடியோத வல்லார்?

    வாயி னிக்கும் அம்மா - அழகாம்

    மதியின் இன்ப ஒளியை

    நேயமோ டுரைத்தால் - ஆங்கே

    நெஞ்சி ளக்க மெய்தும்

    காளி மீது நெஞ்சம் - என்றும்

    கலந்து நிற்க வேண்டும்;

    வேளை யத்த விறலும் - பாரில்

    வேந்த ரேத்து புகழும்

    யாளி யத்த வலியும் - என்றும்

    இன்பம் நிற்கும் மனமும்

    வாழி யீதல் வேண்டும் - அன்னாய்!

    வாழ்க நின்றன் அருளே.

    சக்தி சக்தி என்றால் துன்பம் தானே தீரும்

    சக்தி சக்தி என்றால் இன்பம் தானே சேரும்

    சக்தி சக்தி என்றால் செல்வம் தானே ஊறும்

    சக்தி சக்தி என்றால் கல்வி தானே தேறும்

    என்ற பாரதியார் வாக்கிற்கிணங்க சக்தி சக்தி என்று சொல்லி சகல சவுபாக்கியங்களையும் பெறலாம்.

    ஸ்ரீ காளிகாம்பாள் துதி -பொன்மணி வைரமுத்து

    ஓம்காளி ஓம் காளி ஓம் காளி ஓம்

    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

    (ஓம் காளி ஓம்காளி)

    உலகையாளும் ஓங்காரி ஓம் காளி ஓம்

    உனதுபாதம் வேண்டும் வேண்டும் ஓம் சக்தி ஓம்

    திசைகளெங்கும் நடனமாடும் ஓம் காளி ஓம்

    தீயசக்தி மாயவேண்டும் ஓம் சக்தி ஓம்

    (ஓம் காளி ஓம் காளி)

    கரியமேனி கொண்டதாயே ஓம் காளி ஓம்

    கண்திறந்து பார்க்கவேண்டும் ஓம் சக்தி ஓம்

    அரியகாட்சி உந்தன்காட்சி ஓம் காளி ஓம்

    அண்டமெங்கும் உந்தன் ஆட்சி ஓம் சக்தி ஓம்

    (ஓம் காளி ஓம் காளி)

    ஜதிகளிட்டு ஆடுகின்ற ஓம் காளி ஓம்

    ஜயமளித்து பயமொழிக்கும் ஓம் சக்தி ஓம்

    தகதகத்து ஆடுகின்ற ஓம் காளி ஓம்

    பகைமுடித்து வரமளிக்கும் ஓம் சக்தி ஓம்

    (ஓம் காளி ஓம் காளி)

    பத்ரகாளி ருத்ரகாளி ஓம் காளி ஓம்

    பக்தருக்கு சாந்தகாளி ஓம் சக்தி ஓம்

    சத்யகாளி நித்யகாளி ஓம் காளி ஓம்

    சக்தியூட்டி முக்திகாட்டு ஓம் சக்திஓம்

    (ஓம் காளி ஓம் காளி)

    வேண்டுதலை சொல்லுங்கள் -கவிக்குயில் விசாலி மனோகர்

    விளக்கேற்றி வைக்கையிலே வீடுதேடி வந்தவளே

    வீடுவந்து சௌந்தர்யம் கோடி கோடி தந்தவளே

    உனக்கென்ற ஈடுஇணை உலகினிலே இல்லையடி

    ஒருகோடி பிறப்பெனிலும் உனக்கே நான் பிள்ளையடி

    யார்தடுத்த போதிலும்உன் சக்தியது குறைவதில்லை

    போர்மூளும் போதிலும் நின் பக்கபலம் மறைவதில்லை

    ஆதிசக்தி அன்னையிடம் அருள்கூர்ந்து வேண்டியபின்

    பாதிமனம் தேவையில்லை பார்த்தருளுவாள் காளிகாம்பாள்

    என்னவரம் வேண்டுமென்று இப்பொழுதே கேட்டுவிட்டாள்

    முழுமனதாய் வழங்குதற்கு முன்வருவாள் காளிகாம்பாள்

    சென்னபுரி வாழுகின்ற காளியிடம் வேண்டுதலை

    ஓரிருநாள் சொல்லுங்கள், ஒருகோடி வெல்லுங்கள்.

    • கடற்கரைப்பட்டினங்களாகிய மும்பையும், கொல்கத்தாவும், சென்னையும் ஸ்ரீதேவியின் பெயரால் உண்டாயின.
    • சென்னம்மன் குப்பத்தின் காளியே இன்று சென்னை காளிகாம்பாளாக காண்கிறோம்.

    கடற்கரைப்பட்டினங்களாகிய மும்பையும், கல்கத்தாவும், சென்னையும் ஸ்ரீதேவியின் பெயரால் உண்டாயின. மும்பாதேவியின் பெயரால் மும்பையும், காளியின் பெயரால் கல்கத்தாவும், சென்னம்மன் பெயரால் சென்னப்பட்டினமும் விளங்குகின்றன.

    கி.பி. 17-ம் நூற்றாண்டில் வழங்கிய `மராட்டா டவுன்' என்பதே இன்றுள்ள முத்தியால்பேட்டையும், பவழக் காரத் தெருவுமாகும். சென்னம்மன் குப்பத்தின் காளியே இன்று சென்னை காளிகாம்பாளாகத் காண்கிறோம்.

    கி.பி. 1639-ல் ஆங்கிலேயர் விலைக்கு வாங்கிய சென்னக் குப்பம், வடவாறு குப்பம், மதராஸ் குப்பம். இவைகளையடுத்த நெய்தல் நிலங்கள் யாவும் யாருமற்ற காடுகளாக இருந்தன. இக்காட்டினுள் சிறு புதர்களை அழித்துக் குறும்பர்கள் பூந்தமல்லி வரையில் களிமண் கோட்டைகள் கட்டி வசித்தனர்.

    இந்நிலப்பகுதியை நோ மேன்ஸ் லேண்ட் என ஆங்கிலேயர் தம் குறிப்பில் கூறியுள்ளனர்.

    கடற்கரைக் குப்பங்களில் பட்டினவர் வசித்து வந்தனர். அவர்களுக்கு வேண்டிய- கட்டு மரங்களையும், துடுப்புகளையும், படகுகளையும், பாய்மரங்களையும், நங்கூரங்களையும் செய்து தர 5 தொழிலாளர்கள் சென்னம்மன் கோவில் மாட வீதிகளில் வாழ்ந்தனர்.

    5 தொழிலாளர்களை `பஞ்ச புத்திரர்' என்றும் `விசுவகருமர்' என்றும் கூறினர். சுமார் 500 ஆண்டுகளுக்கும் மேலாக தம் குல தெய்வமாக விசுவ கருமர்கள் தாமே பூசித்துப் போற்றிப் பாதுகாத்து வருகிறார்கள்.

    `சென்ன' - என்னும் சொல்லிற்கு - முருகு, அழகு, இளமை, வலிமை, கம்பீரம் எனப் பல பொருள் உண்டு.

    கடவுள் பெயரையே குழந்தைகளுக்கு இடும் வழக்கம் அன்றும் இன்றும் என்றும் உள்ளது. சென்னப்ப நாய்க் கனுக்கும் அவனது தங்கை சென்னம்மாவுக்கும் பெயரிடக் காரணமாயிருந்தவள் சென்னைக் குப்பத்தின் காளியம்மனே.

    இக்காளியம்மனுக்கு பட்டின வரும், விசுவகர்மர்களும் செந்தூரம் பூசி வழிபட்டதால் அத்தேவி `சென்னம்மன்' ஆயினாள்.

    புராணங்களில் சென்னம்மன் குப்பத்தில் இருந்து காளிகாம்பாளை `நெய்தல் நிலக்காமாட்சி' என்று கூறப்பட்டுள்ளது.

    கேட்ட வரங்கொடுக்கும் தேவியாக விளங்கியதால்- நெய்தல் நிலக் காமாட்சியைச் செல்வரும், வறியவரும், கல்லாரும் கற்றாரும `சென்னம்மனை' வணங்கிச் சென்றார்கள்.

    இக்குப்பத்தின் தேவியருளால் பிறந்த ஒரு செல்விக்கு `சென்னம்மா' என்று பெயர் அச்சென்னம்மா கீழ்த்திருப்பதியில் கோவில் திருப்பணி செய்ததாக கல்வெட்டு கூறுகின்றது.

    சென்ன பட்டினம் காவிரிப்புகும் பட்டினம் போன்று சங்க காலப் பட்டினமாகும். பழைய கற்கால ஆயுதங்களும் பொருட்களும் சென்னை கிண்டியருகே அரசினரால் கண்டெடுக்கப்பட்டது.

    சென்னம்மனுக்குச் சார்த்தும் சிவப்பு புடவை திருவிழா காலங்களில் ஊர்வலத்துக்காகக் காளிக்கு கட்டும் ஒரு வகை ஆடையைக் குறிப்பதே சென்னை எனும் சொல்.

    `சென்னை' `கூறை நாடு' வாங்கி வந்தேன் எனில் இடவாகு பெயராக அவ்விடங்களில் குறும்பரால் நெய்த துணி களையே குறிக்கும்.

    `சென்னை' ஆடைகளையும்- புடவைகளையும் நெய்து விற்கவே காஞ்சியில் இருந்தும் வாலாஜாவில் இருந்தும் நெசவாளர்களைச் சிந்தாதிரிப்பேட்டையில் குடியேற்றினர் ஆங்கிலேயர். இன்றும் அன்று வந்த பட்டு நூற்காரர் எனும் இனத்தவரை சிந்தாதிரிப்பேட்டையில் காணலாம்.

    பேரிச் செட்டி மார் தம் சரக்குகளை விற்க பேரிகை (சென்னை) கொட்டி மக்களை அழைப்பர். வேலூரில் பேரிகாளிகாம்பாள் கோவில் பேரிப்பேட்டை விசுவ கருமர் நிர்வாகத்தில் இருந்து வருகிறது.

    காளி கோவில் விழா வினையும், கோவில் மூர்த்தியின் புறப்பாட்டினையும் அறிவிக்கும் டமாரத்தைச் சென்னை என்றே கூறினார்கள் பக்தர்.

    சென்னம்மன் குப்பத்தில் இருந்து காளிகோவிலை ஆங்கிலேயர்

    1. கல்யாண டெம்பிள்

    2. கவுளியான பகோடா

    3. காரணேஸ்வரி டெம்பிள்

    4. காமீஸ்வரி பகோடா என்றும் அழைத்தனர்.

    சென்னம்மாள்- அழகான அம்மை

    சென்ன புரி- அழகான கோட்டை

    இத்தகைய எடுத்துக் காட்டுகள் மூலம் சென்னை மாநருக்கு பெயர் கொடுத்தது காளிகாம்பாள் என்பது உறுதியாகிறது.

    ×