search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    மாகாளியை பாடிய மகாகவி
    X

    மாகாளியை பாடிய மகாகவி

    • யாது மாகி நின்றாய் - காளீ! எங்கும் நீநி றைந்தாய்
    • சக்தி சக்தி என்றால் இன்பம் தானே சேரும் சக்தி சக்தி என்றால் செல்வம் தானே ஊறும்

    பாரதியார் சென்னை, பிராட்வேயில் பணிபுரிந்தபோது அருகிலுள்ள ஸ்ரீ காளிகாம்பாள் கமடேஸ்வரர் திருக்கோவிலுக்கு வருகை தருவது வழக்கமாக இருந்தது

    அப்போது காளிகாம்பாள் முன் மெய்மறந்து நின்று பல பாடல்களைப் பாடியுள்ளார். அவற்றுள், `யாதுமாகி நின்றாய் காளீ' என்னும் இப்பாடல் குறிப்பிடத்தக்கது.

    காளி ஸ்தோத்திரம்

    யாது மாகி நின்றாய் - காளீ!

    எங்கும் நீநி றைந்தாய்

    தீது நன்மை யெல்லாம் - நின்றவன்

    செயல்க ளன்றி யில்லை

    போதும் இங்கு மாந்தர் - வாழும்

    பொய்மை வாழ்க்கை யெல்லாம்

    ஆதி சக்தி, தாயே! - என்மீ

    தருள் புரிந்து காப்பாய்!

    எந்த நாளும் நின்மேல் - தாயே!

    இசைகள் பாடி வாழ்வேன்;

    கந்தனைப் பயந்தாய் - தாயே

    கருணை வெள்ள மானாய்!

    மந்தமாரு தத்தில் - வானில்

    மலையி னுச்சி மீதில்

    சிந்தை யெங்கு செல்லும் - அங்குன்

    செம்மை தோன்று மன்றோ!

    கர்ம யோக மொன்றே - உலகில்

    காக்கு மென்னும் வேதம்

    தர்மநீதி சிறிதும் - அங்கே

    தவற லென்ப தின்றி

    மர்ம மான பொருளாம் - நின்றன்

    மலரடிக் கண் நெஞ்சம்

    செம்மையுற்று நாளும் - சேர்ந்தே

    தேசு கூட வேண்டும்.

    என்ற னுள்ள வெளியில் - ஞானத்

    திரவி யேற வேண்டும்;

    குன்ற மொத்த தோளும் - மேருக்

    கோல மொத்த வடிவும்

    நன்றை நாடு முனமு - நீயெந்

    நாளு மீதல் வேண்டும்;

    ஒன்றைவிட்டு மற்றோர் - துயரில்

    உழலும் நெஞ்சம் வேண்டா

    வான கத்தி னொளியைக் - கண்டே

    மன மகிழ்ச்சி பொங்கி

    யானெ தற்கும் அஞ்சேன் - ஆகி

    எந்த நாளும் வாழ்வேன்;

    ஞான மொத்த தம்மா! - உவமை

    நானு ரைக்கொ னாதாம்!

    வான கத்தி னொளியின் - அழகை

    வாழ்த்து மாறி யாதோ?

    ஞாயி றென்ற கோளம் - தருமோர்

    நல்ல பெரொ ளிக்கே

    தேய மீதோர் உவமை - எவரே

    தேடியோத வல்லார்?

    வாயி னிக்கும் அம்மா - அழகாம்

    மதியின் இன்ப ஒளியை

    நேயமோ டுரைத்தால் - ஆங்கே

    நெஞ்சி ளக்க மெய்தும்

    காளி மீது நெஞ்சம் - என்றும்

    கலந்து நிற்க வேண்டும்;

    வேளை யத்த விறலும் - பாரில்

    வேந்த ரேத்து புகழும்

    யாளி யத்த வலியும் - என்றும்

    இன்பம் நிற்கும் மனமும்

    வாழி யீதல் வேண்டும் - அன்னாய்!

    வாழ்க நின்றன் அருளே.

    சக்தி சக்தி என்றால் துன்பம் தானே தீரும்

    சக்தி சக்தி என்றால் இன்பம் தானே சேரும்

    சக்தி சக்தி என்றால் செல்வம் தானே ஊறும்

    சக்தி சக்தி என்றால் கல்வி தானே தேறும்

    என்ற பாரதியார் வாக்கிற்கிணங்க சக்தி சக்தி என்று சொல்லி சகல சவுபாக்கியங்களையும் பெறலாம்.

    ஸ்ரீ காளிகாம்பாள் துதி -பொன்மணி வைரமுத்து

    ஓம்காளி ஓம் காளி ஓம் காளி ஓம்

    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

    (ஓம் காளி ஓம்காளி)

    உலகையாளும் ஓங்காரி ஓம் காளி ஓம்

    உனதுபாதம் வேண்டும் வேண்டும் ஓம் சக்தி ஓம்

    திசைகளெங்கும் நடனமாடும் ஓம் காளி ஓம்

    தீயசக்தி மாயவேண்டும் ஓம் சக்தி ஓம்

    (ஓம் காளி ஓம் காளி)

    கரியமேனி கொண்டதாயே ஓம் காளி ஓம்

    கண்திறந்து பார்க்கவேண்டும் ஓம் சக்தி ஓம்

    அரியகாட்சி உந்தன்காட்சி ஓம் காளி ஓம்

    அண்டமெங்கும் உந்தன் ஆட்சி ஓம் சக்தி ஓம்

    (ஓம் காளி ஓம் காளி)

    ஜதிகளிட்டு ஆடுகின்ற ஓம் காளி ஓம்

    ஜயமளித்து பயமொழிக்கும் ஓம் சக்தி ஓம்

    தகதகத்து ஆடுகின்ற ஓம் காளி ஓம்

    பகைமுடித்து வரமளிக்கும் ஓம் சக்தி ஓம்

    (ஓம் காளி ஓம் காளி)

    பத்ரகாளி ருத்ரகாளி ஓம் காளி ஓம்

    பக்தருக்கு சாந்தகாளி ஓம் சக்தி ஓம்

    சத்யகாளி நித்யகாளி ஓம் காளி ஓம்

    சக்தியூட்டி முக்திகாட்டு ஓம் சக்திஓம்

    (ஓம் காளி ஓம் காளி)

    வேண்டுதலை சொல்லுங்கள் -கவிக்குயில் விசாலி மனோகர்

    விளக்கேற்றி வைக்கையிலே வீடுதேடி வந்தவளே

    வீடுவந்து சௌந்தர்யம் கோடி கோடி தந்தவளே

    உனக்கென்ற ஈடுஇணை உலகினிலே இல்லையடி

    ஒருகோடி பிறப்பெனிலும் உனக்கே நான் பிள்ளையடி

    யார்தடுத்த போதிலும்உன் சக்தியது குறைவதில்லை

    போர்மூளும் போதிலும் நின் பக்கபலம் மறைவதில்லை

    ஆதிசக்தி அன்னையிடம் அருள்கூர்ந்து வேண்டியபின்

    பாதிமனம் தேவையில்லை பார்த்தருளுவாள் காளிகாம்பாள்

    என்னவரம் வேண்டுமென்று இப்பொழுதே கேட்டுவிட்டாள்

    முழுமனதாய் வழங்குதற்கு முன்வருவாள் காளிகாம்பாள்

    சென்னபுரி வாழுகின்ற காளியிடம் வேண்டுதலை

    ஓரிருநாள் சொல்லுங்கள், ஒருகோடி வெல்லுங்கள்.

    Next Story
    ×