search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால்வாய் உடைப்பு"

    • கால்வாயை முறையாக பராமரிக்காததால் அதில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.
    • மழை வெள்ளத்தில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருக்கிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

    வடசென்னை பகுதிகளிலும் திருவள்ளூர் மாவட்டத்துக்குட்பட்ட புறநகர் பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருக்கி றது. புழல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.

    இந்நிலையில் புழல் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட விளாங்காடுப்பாக்கம் ஊராட்சி மற்றும் சென்ட்ரம் பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. செங்குன்றம் பகுதியில் இருந்து அப்பகுதியில் உள்ள கால்வாயில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரே இந்த பகுதியில் வெள்ளப்பெருக்குக்கு முக்கிய காரணமாக அமைந்து உள்ளது.

    செங்குன்றத்தில் இருந்து தொடங்கும் இந்த கால்வாய் புள்ளிலைன், தீர்த்தங்கரைப்பட்டு, அழிஞ்சிவாக்கம் வழியாக விளாங்காடுப்பாக்கம் ஊரை ஒட்டி செல்கிறது.

    மேற்கண்ட பகுதிகளில் இருந்து கால்வாயில் இரு புறமும் அடித்து வரப்படும் வெள்ளம் விளாங்காடுப்பாக்கம் ஆர்.சி.குடியிருப்பு அருகே ஒன்றாக சேர்ந்து அங்கிருந்து கொசப்பூர் கால்வாயை சென்றடைய வேண்டும்.

    இந்த கால்வாயை முறையாக பராமரிக்காததால் அதில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.

    இந்த கால்வாயால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளால் அந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்து உள்ளது. எனவே இதற்கு நிரந்தர தீர்வு காண ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இந்த கால்வாய் பொதுப்பணி துறைக்கு சொந்தமான கால்வாய் என்றும், அதனை தூர்வாரி கரையை பலப்படுத்த வேண்டியது பொதுப்பணித்துறை அதிகாரிகளே என்று ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இருப்பினும், பொது மக்களின் நலன் கருதி முன்கூட்டியே வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை ஊராட்சி நிர்வாகம் மேற்கொண்டிருந்ல் இதுபோன்ற பாதிப்புகளை தடுத்திருக்கலாம் என்றே அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இதுதொடர்பாக அவர்கள் மேலும் கூறும் போது, "மாதவரம் சட்ட மன்றத் தொகுதிக்குட்பட்ட விளாங்காடுப்பாக்கம் ஊராட்சி பகுதிகள் திருவள்ளூர் மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளாகும். எனவே மாதவரம் எம்.எல்.ஏ. சுதர்சனம், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுராஜ் ஆகியோரும் மழை வெள்ளத்தில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

    விளாங்காடுப்பாக்கம் ஆர்.சி.குடியிருப்புக்கு அருகில் கால்வாய் கரையில் ஏற்பட்ட உடைப்பை விளாங்காடுப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பாரதி சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அரசு அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

    இருப்பினும் இந்த கால்வாயில் பல இடங்களில் கரைகள் பலமின்றி உடைந்து உள்ளது. அதனை சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அவரிடம் கோரிக்கை விடுத்தனர். இதற்கு வரும் காலங்களில் உரிய நடவடிக்கை எடுப்பது பற்றி ஆய்வு செய்யப்படும் என்று பாரதி சரவணன் தெரிவித்தார்.

    தற்போது தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாமல் நிரந்தர தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர் பார்ப்பாக உள்ளது.

    • விவசாயிகள் வலியுறுத்தல்
    • அதிகமான தண்ணீர் வரத்தால் மணல் மூட்டைகள் அடித்து செல்லப்பட்டது

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டு அதன் கிளை ஏரிகளான பாசனம் பெறும் ஆலப்பாக்கம், கன்னிகாபுரம், மாகாணிப்பட்டு, துரை பெரும்பாக்கம், உத்திரம் பட்டு, புதுப்பட்டு, கருணாவூர் போன்ற கிராமத்தில் உள்ள மக்கள் காவேரிப்பாக்கம் ஏரி நம்பியே விவசாயம் செய்து வருகின்றனர்.

    காவேரிப்பாக்கம் ஏரியில் இருந்து துறை பெரும்பாக்கம், ஆலப்பாக்கம், மகானிப்பட்டு செல்லும் கால்வாயில் காங்கிரீட் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் அதனை பொதுப்பணித்துறையினர் மணல் மூட்டைகள் அடுக்கி தடுத்தனர்.

    ஆனாலும் அதிகமான தண்ணீர் வரத்து இருப்பதால் மணல் மூட்டையில் அடித்து செல்லப்பட்டு ஏரிக்கு செல்லும் கால்வாயில் தண்ணீர் செல்லாமல் பணப்பாக்கம் காவேரிப்பாக்கம் வழியாக செல்லும் மதகில் தண்ணீர் செல்வதால் ஏரிக்கு தண்ணீர் செல்லாமல் மதகு வழியாக தண்ணீர் வீணாகிறது.

    எனவே காவேரிப்பாக்கம் ஏரிநிரம்பியும் அதன் கிளை ஏறிகளில் தண்ணீர் செல்லாமல் இருப்பது விவசாயிகளிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

    எனவே உடனடியாக உடைப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் தடுப்புகள் கட்டி அந்த கால்வாயில் தண்ணீர் வீணாகாமல் அதனை சரி செய்யக் கோரி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×