search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காலி குடங்கள்"

    • திருப்பத்தூர் அருகே காலி குடங்களுடன் பெண்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
    • குடிநீர் அடிப்படை வசதிகளை நிைறவேற்றி தர வலியுறுத்தினர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள காட்டம்பூர் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசிந்து வருகின்றனர். இக்கிராமத்தில் கடந்த பல மாதங்களாக அடிப்படை கட்டமைப்பு வசதிகளான தெரு விளக்கு, சாலை வசதி, குடிநீர் வசதி ஆகியவற்றை ஏற்படுத்தி தரக்கூறி இப்பகுதி கிராம மக்கள் பலமுறை அதிகாரிகளி டமும், மக்கள் பிரதி நிதிகளிடமும் கோரிக்கை வைத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

    இதை கண்டித்தும், அடிப்படை வசதிகளை நிைற வேற்றி தர வலியுறுத்தி யும் காட்டம்பூர் கிராம பெண்கள் மதுரை - திருப் பத்தூர் தேசிய இணைப்பு நெடுஞ் சாலை யில் காலி குடங்களுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட னர். இது குறித்து தகவல் அறிந்த திருக்கோஷ்டியூர் போலீசார் சம்பவ இடத் திற்கு வந்து பேச்சு வார்த்ைத நடத்தினர். ஆனால் பலன் இல்லை.

    இதனை தொடர்ந்து திருப்பத்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன், மண்டல வட்டாட்சியர் செல்லமுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் அருள் பிரகாசம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என அதிகாரிகள் உறுதி கூறினர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து காட்டம்பூர் கிராம மக்கள் கூறுகையில், கடந்த 15 நாட்களுக்கு மேலாக எங்கள் பகுதிக்கு குடிநீர் வரவில்லை. பல மாதங்களாக தெரு விளக்கு வசதியும், சாலை வசதியும் இல்லாமல் உள்ளது. எங்கள் பகுதிக்கு அருகாமையில் உள்ள ஆடு- மாடு மேய்ச்சல் திடலில் தற்சமயம் போர் வெல் (ஆழ்குழாய் கிணறு) அமைக்கப் பட்டுள்ளது. அதனால் எங்களுக்கும் எங்கள் கிராமத்திற்கும் எந்த ஒரு பயன்பாடு இல்லை. இதுபோன்ற பல்வேறு பிரச்சினைகள் உள்ளது.

    பலமுறை ஊராட்சி மன்ற நிர்வாகியிடம் எடுத்துரைத்தும் அதற்கான எந்த ஒரு மேல் நடவடிக் கையும் எடுக்கப் படாத காரணத்தினால் எங்கள் அடிப்படை தேவைகளை அரசின் உயர்மட்ட அதிகாரி கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நாங்கள் மறியல் போ ராட்டத்தில் ஈடுபட்டோம் என தெரிவித்தனர்.

    • கிராமத்தில் உள்ள ஏரி அருகே 2 குடிநீர் கிணறுகள் உள்ளன.
    • கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் சரிவர வழங்கவில்லை.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள உலகியநல்லூர் கிராமத்தில் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள ஏரி அருகே 2 குடிநீர் கிணறுகள் உள்ளன. இதில் ஒரு கிணற்றில் ஊற்று தண்ணீர் இல்லை. மற்றொரு கிணற்றில் உள்ள குடிநீர் மூலம் மட்டுமே ஊர் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் குடிநீர் பற்றாகுறை ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் சரிவர வழங்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் இன்று ஈடுபட்டனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் வந்தனர். மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் தினமும் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்து தருகிறோம் என உறுதி அளித்தனர். அதன் பேரில் கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • மதுரை-மேலூர் நெடுஞ்சாலையில் குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
    • இதனால் போக்குவரத்து அரை மணி நேரம் பாதிக்கப்பட்டது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சூரகுண்டு கிராமத்தில் உள்ள 7-வது வார்டு பகுதியில் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஊராட்சி நிர்வாகம் ஏற்படுத்தித் தர மறுப்பதாக அப்பகுதி மக்கள் புகார் கூறினர்.

    இதனால் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி குடிநீருக்காக அலையும் சூழல் உருவாகி வருவதாகவும், மேலும் முறையான மின்சாரம் தங்கள் பகுதிக்கு வழங்கவில்லை, 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை முறையாக வழங்கவில்லை என்றும் புகார் தெரிவித்தனர்.

    குடிநீர் கேட்டு அந்த பகுதியை சேர்ந்த 100-க்கு மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் மதுரை - மேலூர் சாலையில் இன்று காலை திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து அரை மணி நேரம் பாதிக்கப்பட்டது.

    மேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசந்தர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய கஜேந்திரன், ஏட்டு தினேஷ் மற்றும் போலீசார்போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பின்னர் பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்று மேலூர் யூனியன் அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர். நீண்ட நேரம் சமரச பேச்சுவார்த்தைக்கு பின்னர் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    ×