search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால அட்டவணை"

    • ரெயில் சேவை வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும்
    • தண்டவாள பணிகள் முடிக்க பட்டதால் வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும்.

    திருப்பூர்:

    கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் பாலக்காடு- திருச்சி ெரயில் சேவை வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும் என,ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து, பாலக்காடு ெரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:-

    திருச்சி ரெயில் நிலையம் - திருச்சி கோட்டை ெரயில் நிலையம் இடையே, தண்டவாள பணிகள் நடப்பதால், பாலக்காடு - திருச்சி (16844), திருச்சி - பாலக்காடு (16843) உள்ளிட்ட 2 ெரயில்களின் சேவை, ஜூலை 20-ந் தேதி முதல் 25ம் தேதி வரை மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    தற்போது பணிகள் நிறைவடைந்த நிலையில், வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    • விஜய் வசந்த் எம்.பி. ரெயில்வே பொது மேலாளரிடம் வலியுறுத்தல்
    • சென்னை-நெல்லை வந்தே பாரத் ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டித்து இயக்க வேண்டும்.

    நாகர்கோவில் :

    விஜய் வசந்த் எம்.பி. தென்னக ரெயில்வே பொது மேலாளரை சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    வேளாங்கண்ணிக்கு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள பண்டிகை கால சிறப்பு ரெயில் நாகர்கோவிலில் இருந்து சனிக்கிழமை மதியம் புறப்பட்டு அன்று நள்ளிரவு வேளாங்கண்ணி சென்றடைகிறது. அதே ரெயில் ஞாயிற்றுக்கிழமை காலை வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு இரவு நாகர்கோவில் வந்தடைகிறது. ஆகையால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நேர அட்டவணையை மாற்றி சனிக்கிழமை மாலை நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை வேளாங்கண்ணி சென்றடையும் வகையிலும், ஞாயிற்றுக்கிழமை மாலை வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமை காலை நாகர்கோவில் வந்தடையும் வகையிலும் நேர அட்டவணையை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

    அதுபோல கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா காலத்திற்கு முன்பிருந்தது போல் மதுரை-புனலூர் ரெயில் ஆரல்வாய்மொழி, பள்ளியாடி, குழித்துறை மேற்கு போன்ற நிலையங்களில் நிறுத்தம் வேண்டும். நாகர்கோவில்-கோட்டயம் ரெயில் நாகர்கோவில் டவுண், பள்ளியாடி, குழித்துறை மேற்கு ஆகிய இடங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவு நேர ஏரநாடு விரைவு ரெயில் குழித்துறை ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிதாக அறிமுகமாக உள்ள சென்னை-நெல்லை வந்தே பாரத் ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டித்து இயக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

    ×