search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காய்கறிகளின்"

    • கத்தரிக்காய் ரூ.50-க்கு விற்பனை
    • தக்காளியின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து காணபபட்டது.

    கன்னியாகுமரி:

    தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலை கணிசமான அளவு உயர்ந்திருந்தது. காய்கறி விலைகளை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நட வடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக தக்காளியின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து காணபபட்டது. குமரி மாவட்டத்திலும் காய்கறிகளின் விலை அதிகமாகவே இருந்தது. மார்க்கெட் டுக்கு உள்ளூர் பகுதியில் இருந்து வரக்கூடிய காய்கறிகள் குறைவான அளவில் இருந்தது.

    இதேபோல் ஓசூர், மேட்டுப்பாளையம், ஒட்டன்சத்திரம், பெங்களூர் பகுதியிலிருந்தும் காய்கறிகள் குறைவாக வந்ததால் காய்கறிகளின் விலை ஏறுமூகமாக இருந்தது. குறிப்பாக தக்காளி, இஞ்சி, மிளகாய், பூண்டு விலை அதிகமாக உயர்ந்தது. தற்போது காய்கறிகளின் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளதால் விலை குறைய தொடங்கியுள்ளது. தக்காளி கிலோ ரூ.135-ல் இருந்து ரூ. 120 ஆக குறைந்துள்ளது. மிளகாய் ரூ.120-ல் இருந்து ரூ.100 ஆக குறைந்துள்ளது.

    இதேபோல் கேரட், பீன்ஸ், புடலங்காய், கத்தரிக்காய், வழு தலங்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் குறைந்து வருகிறது. நாகர்கோவில் மார்க்கெட்டில் விற்பனையான காய்கறிகளின் விலை விவரம் வருமாறு:- தக்காளி ரூ.120, இஞ்சி ரூ.280, மிளகாய் ரூ.100, பூண்டு ரூ.180, கேரட் ரூ.70, பீன்ஸ் ரூ.90, புடலங்காய் ரூ.30, கத்தரிக்காய் ரூ.50, வழுதலங்காய் ரூ.50, வெள்ளரிக்காய் ரூ.35, வெண்க்காய் ரூ.60, முட்டைக்கோஸ் ரூ.30, பீட்ரூட் ரூ.50, காலிபிளவர் ரூ.50, சேனைக் கிழங்கு ரூ.70, தடியங்காய் ரூ.30, உருளைக் கிழங்கு ரூ.25, பல்லாரி ரூ.25-க்கு விற்பனையானது.

    இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், தற்பொழுது காய்கறிகள் வரத்து சற்று அதிகரித்துள்ளது. மேலும் ஆடி மாதம் என்பதால் காய்கறிகள் குறைவான அளவில் விற்பனை ஆகி வருகின்றன. இதனால் காய்கறிகளின் விலை குறைந்துள்ளது என்றார்.

    ×