search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காந்தி மார்க்கெட்"

    • காந்தி மார்க்கெட்டில் கமிஷனர் ரவிச்சந்திரன் இன்று மார்க்கெட்டிற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
    • குப்பைகள் அகற்ற வேண்டும் மற்றும் குடிநீர், மின்விளக்கு, டூவீலர் பார்க்கிங் ஆகியவை கேட்டு வியாபாரிகள் வலியுறுத்தினர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மலைக்கோ ட்டை அருகே 280 கடைகளுடன் காந்தி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விளைவிக்கப்படும் காய்கறி கள், இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கிலாந்து, பெங்களூர் உள்பட பல்வேறு நாடுகள் மற்றும் மாவட்டங்களுக்கு அனுப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 100டன் காய்கறி கள் வருகிறது. மேலும் ரூ. 5 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

    புதிதாக பதவியேற்ற கமிஷனர் ரவிச்சந்திரன் இன்று மார்க்கெட்டிற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது வியாபாரிகள் தங்களது குறைகளை முறையிட்டனர். குப்பைகள் அகற்றப்ப டவில்லை, குடிநீர், மின்விளக்கு, டூவீலர் பார்க்கிங் ஆகியவை கேட்டு வலியுறுத்தினர்.

    இது குறித்து கமிஷனர் ரவிச்சந்திரன் கூறுகையில், போக்குவரத்து நெரிசலை குறைக்க இருபுறமும் விரிவுபடுத்தவும், துர்நாற்றம் இல்லாத அளவிற்கு குப்பைகள் உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க ப்படும். பொதுக்கழிப்பிட வசதி, பார்க்கிங் வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    இந்த ஆய்வில் மாநகர் நல அலுவலர் செபாஸ்டின், உதவி செயற்பொறியாளர் சரவணகுமார், உதவி கமிஷனர் வில்லியம் சகாயராஜ், உதவி நகரமைப்பு அலுவலர் வள்ளி ராஜம் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி, தங்கவேல், கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காந்தி தினசரி மார்க்கெட் கடைகளை அருகில் உள்ள சுடுகாடு பகுதிக்கு மாற்றம் செய்யப்படும் என நகராட்சி நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
    • மார்க்கெட் கடைகளை சுடுகாட்டுப் பகுதிக்கு மாற்றம் செய்யப்படுவதால் சுப நிகழ்ச்சிக்கு காய்கறிகள் வாங்க வருபவர்கள் வர மாட்டார்கள். இதனால் வியாபாரம் பாதிக்கும் என்று வைகுண்டராஜன் கூறினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் காந்தி தினசரி மார்க்கெட் பஸ் நிலையம் அருகில் செயல்பட்டு வருகிறது. தற்போது அந்த இடத்தில் அரசு அலுவலகங்கள் அமைய உள்ளது.

    மார்க்கெட் இடமாற்றம்

    எனவே அங்குள்ள கடைகளை அருகில் உள்ள சுடுகாடு பகுதிக்கு மாற்றம் செய்யப்படும் என நகராட்சி நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

    தகனமேடை உள்ளதால் அந்த இடத்தில் வியாபாரம் செய்வதற்கு இடையூறாக இருக்கும். போதுமான அளவுக்கு வியாபாரம் நடைபெறாது என கூறி அந்த இடத்திற்கு செல்ல மறுத்து வருகின்றனர்.

    மேலும் அதற்கு பதிலாக தகுந்த உரிய இடம் தேர்வு செய்து புதிய இடம் கட்டி தரும் வரை பழைய இடத்திலிருந்து வியாபாரம் செய்வோம் என்று கூறி வருகின்றனர்.

    தகுந்த இடம்

    இந்நிலையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் வைகுண்டராஜன் திருச்செந்தூர் காய்கறி மார்க்கெட்டில் ஆய்வு செய்து நிருபர்களிடம் கூறியதாவது:-

    மார்க்கெட் கடைகளை சுடுகாட்டுப் பகுதிக்கு மாற்றம் செய்யப்படுவதால் வியாபாரம் செய்வற்கு இடையூறாக இருக்கும்.சுப நிகழ்ச்சிக்கு காய்கறிகள் வாங்க வருபவர்கள் வர மாட்டார்கள். இதனால் வியாபாரம் பாதிக்கும்.

    தற்போது மார்க்கெட்டில் 216 கடைகளுக்கு ரசீது போட்டு வியாபாரம் செய்து வருகிறார்கள். ஆனால் நகராட்சி சார்பில் 140 கடைகள் மட்டும் கட்டுவதாக தெரிகிறது.

    எனவே அனைத்து வியாபாரிகளுக்கும் தகுந்த பாதுகாப்பான இடத்தில் கடைகள் கட்டி தந்தால் மட்டுமே இங்கு இருக்கும் வியாபாரிகள் அந்த இடத்திற்கு செல்வார்கள்.அதுவரை இதே இடத்தில் தொடர்ந்து வியாபாரம் செய்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் காமராசு நாடார், திருச்செந்தூர் காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத் தலைவர் திருப்பதி, தமிழ்நாடு வணிக சங்கங்கள் பேரமைப்பு தூத்துக்குடி மாவட்ட இளைஞரணி செயலாளர் கவாஸ்கர் நாடார், நிர்வாகி சோடா ரவி உள்பட பலர் உடனிருந்தனர்.

    ×