search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காதல் விவகாரம்"

    • காதல் விவகாரம் என்னுடைய தாயாருக்கு தெரியவந்தது. எங்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • காதலன் வீட்டிற்கு வந்த தகவலை எனது தாயாருக்கு செல்போன் மூலமாக தெரிவித்தேன்.

    நாகர்கோவில்:

    குளச்சல் போலீஸ் நிலையத்திற்கு அதே பகுதியை சேர்ந்த சுனிதா என்ற பெண் சென்றார். அப்போது தனது மகள் அமர்சியாவை வீட்டுக்குள் புகுந்து ஒரு கும்பல் கடத்தி சென்றுவிட்டதாக கூறினார். இது தொடர்பாக சுனிதாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தனது மகளை அதே பகுதியை சேர்ந்த டேனியல் ஆகாஷ் என்பவர் கடத்தி சென்றுவிட்டதாக கூறினார்.

    இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். டேனியல் ஆகாஷ் வீட்டிற்கு சென்ற போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது அமர்சியா அங்கு இருந்தார். அப்போது அமர்சியாவிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அமர்சியா தன்னை யாரும் கடத்தவில்லை என்றும் தான் விருப்பப்பட்டு தான் டேனியல் ஆகாஷ் வீட்டிற்கு வந்ததாகவும் கூறினார்.

    இதையடுத்து அமர்சியா, டேனியல் ஆகாஷ் இருவரையும் குளச்சல் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். அங்கு சுனிதாவும் வந்திருந்தார். இருவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அமர்சியா பல திடுக்கிடும் தகவல்களை கூறினார். அப்போது அவர் கூறியதாவது:-

    டேனியல் ஆகாஷை நான் காதலித்து வருகிறேன். காதல் விவகாரம் என்னுடைய தாயாருக்கு தெரியவந்தது. எங்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எனது தாயார் என்னை தனி அறையில் அடைத்து வைத்திருந்தார். தரையில் கல் உப்பை போட்டு முட்டி போட்டு நடக்க வைத்து கொடுமைப்படுத்தினார். இதனால் அவரிடம் இருந்து தப்பித்து காதலன் வீட்டில் தஞ்சம் அடைந்தேன். நான் எனது காதலன் வீட்டிற்கு வந்த தகவலை எனது தாயாருக்கு செல்போன் மூலமாக தெரிவித்தேன்.

    அதன் பிறகு எனது தாயார் இங்கு வந்து எனது தலைமுடியை பிடித்து என்னை சரமாரியாக தாக்கினார் என்று கண்ணீர் மல்க கூறினார். இதை கேட்ட போலீசார் சுனிதாவிடம் விசாரணை மேற்கொண்டனர். அமர்சியாவிற்கு 19 வயது கடந்து விட்டதால் போலீசார் அவர் விருப்பப்படி தான் அனுப்ப முடியும் என்று கூறினார்கள்.

    அமர்சியா தனது காதலன் டேனியல் ஆகாசுடன் செல்வதாக கூறினார். போலீசார் அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ளுமாறு வாழ்த்தி அனுப்பி வைத்தனர். சுனிதா ஏமாற்றத்துடன் போலீஸ் நிலையத்தை விட்டு வெளியேறினார். இதனால் குளச்சல் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • மகி ஆர்யாவை, அடிக்கடி அங்கித் செக்ஸ் ரீதியாக தொந்தரவு செய்து வந்ததாகத் தெரிகிறது.
    • கொலை செய்த பிறகு தடயங்களை அழிப்பது எப்படி என்பதையும் யூடியூப் மூலம் பார்த்து உள்ளார்.

    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலம் நைனி டால் மாவட்டம் ஹல்த்வானியைச் சேர்ந்தவர் மகி ஆர்யா (28). இவரது காதலர் அங்கித் சவுகான். இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.

    இந்த நிலையில் மகி ஆர்யாவை, அடிக்கடி அங்கித் செக்ஸ் ரீதியாக தொந்தரவு செய்து வந்ததாகத் தெரிகிறது.

    இதனால் கோபமடைந்த மகி ஆர்யா, காதலரைக் கொல்ல முடிவு செய்தார். இதற்காக தனது புதிய காதலர் தீப், வீட்டு வேலைக் காரி உஷாதேவி, அவரது கணவர் ராமா வதார் ஆகியோரையும் கூட்டு சேர்த்துள்ளார்.

    கொலை செய்வது எப்படி என்பதை 'கிரைம் பேட்ரோல்' என்ற தொலைக் காட்சி தொடரை பார்த்து தெரிந்து கொண்டார். அது மட்டுமல்லாமல் கொலை செய்த பிறகு தடயங்களை அழிப்பது எப்படி என்பதையும் யூடியூப் மூலம் பார்த்து உள்ளார்.

    தனது திட்டத்தின்படி 2 மாதங்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்த காதலரை, நல்ல பாம்பை விட்டு மகி கடிக்கச் செய்துள்ளார். இதில் அங்கித் இறந்து விட்டார். ஆனால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி மகி ஆர்யா உள்ளிட்ட 4 பேர்தான் கொலையாளிகள் என்பதை கண்டுபிடித்துவிட்டனர். 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    இதுகுறித்து நைனிடால் எஸ்.பி. பங்கஜ் பட் கூறுகையில், பாம்புப் பிடாரன் ஒரு வரை அழைத்து வந்து நல்ல பாம்பை மகி ஏவி விட்டு உள்ளார். மகி ஆர்யாவுக்கு தீப் கந்த்பால் என்ற வேறொரு காதலரும் உள்ளார். மகி ஆர்யா, தீப், வேலைக்கார பெண் உஷா தேவி, அவரது கணவர் ராமாவதார் ஆகியோர் சேர்ந்து கொலையை அரங்கேற்றியுள்ளனர்.

    அவர்கள் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் பரிசுத் தொகையும் அறிவித்துள்ளோம். விரைவில் அவர்களை கைது செய்வோம் என்றார்.

    • விருதுநகர் அருகே வெவ்வேறு சம்பவங்களில் காதல் விவகாரத்தில் 2 வாலிபர்கள் தாக்கப்பட்டனர்.
    • இதுகுறித்து விருதுநகர் மேற்கு, எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் நகராட்சி காலனியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் மகேந்திரன்(வயது23). இவரும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்தனர். இதற்கு பெண் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    சம்பவத்தன்று மகேந்திரன் வீட்டின் முன்பு நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த பெண்ணின் தந்தை உள்பட 3 பேர் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பினர். படுகாயமடைந்த மகேந்திரன் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் தொடர்பாக விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ரைட்டான்பட்டி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் கணேஷ்(28). இவர் பெருமாள்பட்டியை சேர்ந்த புழுகாண்டி என்பவரின் மகளுடன் பழகியதாக தெரிகிறது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த புழுகாண்டி, அவரது மகன் கதிர்வேல், உறவினர் நடராஜன் ஆகிய 3 பேர் சம்பவத்தன்று கணேசை சரமாரியாக தாக்கினர்.

    படுகாயமடைந்த அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருத்தங்கல் முத்துமாரி நகரை சேர்ந்த உதயகுமார்(26). தனியார் கிளப் பார் ஊழியரான இவரை மது கேட்டு வடபட்டி மேலூரை சேர்ந்த மாரிச்செல்வம், கபாலி, சதீஸ் ஆகியோர் தாக்கினர். இதுகுறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • காதலை கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • மகனின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்தது.

    அவனியாபுரம்

    அவனியாபுரம் பராசக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி மலையம்மாள், இவர்களது மகன் அருண்பாண்டி (வயது 24). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    மகனின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள் கண்டித்துள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாக விரக்தியுடன் காணப்பட்ட அருண்பாண்டி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த அவனியாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அருண்பாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து போலீசார் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலுக்காக வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • காதல் விவகாரத்தில் 2 வாலிபர்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    காரியாபட்டி அருகே உள்ள கீழஉப்பிலிக்குண்டு வைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகன் சதுரகிரி (20). இவர் மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அவரை திருமணம் செய்து கொள்வதற்கான விருப்பத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அவர்கள் சிறிது காலம் ஆகட்டும் என கூறியுள்ளனர். இதனால் விரக்தியடைந்த சதுரகிரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    ஸ்ரீவில்லிபுத்தூர் இடையபொட்டல் தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். அதே பகுதியில் இட்லி கடை நடத்தி வருகிறார். இவரது மகன் சிவராமன் (27). இவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். திருமணத்திற்கு சம்மதம் கேட்டபோது, பெற்றோர்கள் கடன்களை அடைத்துவிட்டு திருமணம் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளனர். இதனால் விரக்தியடைந்த சிவராமன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாரிமுத்து மாயமானது தொடர்பாக அவரது தந்தை துரைப்பாண்டி கும்மிடிப்பூண்டி போலீசில் புகார் செய்தார்.
    • போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் மாயமான மாரிமுத்துவுக்கும், வில்வ துரைக்கும் முன்பகை இருந்தது தெரியவந்தது.

    ராஜபாளையம்:

    மதுரை சி.எம்.ஆர். சாலையைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 27). இவர் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பேஸ்புக் மூலம் ஒரு பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி பேஸ்புக்கில் பேசிக்கொண்டனர். அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

    மாரிமுத்துவின் காதலியை ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வில்வதுரை என்பவரும் பேஸ்புக் மூலம் பழகி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. வில்வதுரை நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு போலீஸ் பட்டாலியனில் 2-ம் நிலை போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.

    ஒரே பெண்ணை 2 பேர் காதலித்து வந்ததால் மாரிமுத்துவுக்கும், வில்வதுரைக்கும் பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. அடிக்கடி இவர்களுக்குள் செல்போனில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மாரிமுத்து உயிரோடு இருந்தால் காதலியை திருமணம் செய்து கொள்ள முடியாது என எண்ணிய வில்வதுரை அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

    இந்த நிலையில் கடந்த மாதம் 28-ந் தேதி கும்மிடிப்பூண்டியில் வேலையை முடித்துவிட்டு வந்து கொண்டிருந்த மாரி முத்துவை, வில்வதுரை மற்றும் அவரது நண்பர்கள் இசக்கிராஜா, ரவிக்குமார் ஆகியோர் சந்தித்து பேசி யுள்ளனர். பின்பு அவரிடம் வில்வதுரை நைசாக பேசி காரில் வெளியே அழைத்துச் சென்றுள்ளார்.

    அப்போது காதலியுடன் பழக்கத்தை கைவிடுமாறு மாரி முத்துவிடம் வில்வதுரை கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் உள்ள ஒரு கண்மாய்க்கு அழைத்து வந்த வில்வதுரை மற்றும் அவரது நண்பர்கள், மாரிமுத்துவை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர்.

    இதில் படுகாயமடைந்த மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதனால் அதிர்ச்சியடைந்த வில்வதுரை மற்றும் அவரது நண்பர்கள் மாரிமுத்துவின் உடலை ஒரு சாக்கு மூட்டை யில் கட்டி காரில் வைத்து செய்வதறியாது ஊர் சுற்றி வந்துள்ளனர்.

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் இரட்டை கண்மாய் பகுதியில் வந்தபோது ஆள் நடமாட்டம் இல்லாததை தெரிந்து சாக்குமூட்டையை கண்மாயில் போட்டுவிட்டு கொலை கும்பல் அங்கிருந்து தப்பியது.

    இதற்கிடையே மாரிமுத்து மாயமானது தொடர்பாக அவரது தந்தை துரைப்பாண்டி கும்மிடிப்பூண்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் மாயமான மாரிமுத்துவுக்கும், வில்வ துரைக்கும் முன்பகை இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீஸ்காரர் வில்வதுரையை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாரிமுத்துவை நண்பர்கள் உதவியுடன் காரில் கடத்திக்கொண்டு சென்று அடித்துக்கொலை செய்து உடலை கண்மாயில் வீசியது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து வில்வதுரை, அவரது நண்பர்கள் இசக்கிராஜா, ரவிக்குமார் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கூறிய தகவலின் அடிப்படையில், மாரிமுத்துவின் உடலை வீசியதாக கூறப்பட்ட ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் இரட்டை கண்மாய்க்கு அழைத்து சென்றனர்.

    அவர்கள் கூறிய இடத்தில் தேடிப்பார்த்தபோது சாக்குமூட்டை கிடந்தது. அதில் மாரிமுத்துவின் உடல் எலும்புக்கூடான நிலையில் கிடந்தது. அதனை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    காதல் விவகாரத்தில் போலீஸ்காரர் தனது நண்பர்களுடன் சேர்ந்து வாலிபரை கடத்திக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை அமைந்தகரை பெண் கொலை வழக்கில் 15 வயது உறவுக்கார சிறுவனை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
    பூந்தமல்லி:

    சென்னை அமைந்தகரை வெள்ளாளர் தெருவைச்சேர்ந்தவர் சங்கரசுப்பு (வயது44). இவர் வீட்டின் அருகில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி தமிழ்செல்வி (35), இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 2-ம் தேதி மதியம் தமிழ்செல்வி வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

    கழுத்து நெறிக்கப்பட்டும், கை மணிக்கட்டு நரம்பு அறுக்கப்பட்டு அவர் கொல்லப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் விசாரித்து வந்தனர். கேமரா பதிவின் படி விசாரணை நடத்தி தமிழ்செல்வியின் உறவுக்கார 15 சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

    அத்தை தமிழ்ச்செல்வியை துடிக்க துடிக்க கொலை செய்தது எப்படி? என்பது பற்றி மாணவன் அளித்த திடுக்கிடும் வாக்குமூலம் வருமாறு:-

    எனது மாமா குடும்பத்தினர் வசித்து வந்த அதே தெருவில்தான் எங்கள் வீடும் உள்ளது. சிறு வயதில் இருந்தே நானும், எனது தம்பியும் மாமா வீட்டுக்கு சென்று விளையாடுவோம். அப்போது மாமா மகளுடன் நான் பழகினேன். அவள் பெரிய வளானதும் பழகக் கூடாது என்று அத்தை தமிழ்ச்செல்வி கண்டித்தார்.

    கடந்த 27-ந்தேதி தம்பிக்கு பிறந்த நாள். கண்டிப்பாக வீட்டுக்கு வரவேண்டும் என்று மாமன் மகளை அழைத்திருந்தேன். அவள் வரவில்லை.

    இதுபற்றி நான் அவளிடம் கேட்டதை அத்தை பார்த்து விட்டார். என்னை தனியாக அழைத்து கண்டித்ததுடன் கையால் அடித்தார். இது எனக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    எப்படியாவது அத்தையை தீர்த்துக்கட்டிவிட வேண்டும் என்று திட்டமிட்டேன். இதற்காக வீட்டுக்கு சென்றேன். தூங்கிக் கொண்டிருந்த அத்தையின் கழுத்தை நெரித்தேன் அவர் திமிறினார்.

    இதனால் அருகில் இருந்த ‘டெடிபேர்’ பொம்மையால் முகத்தை அழுத்தினேன். மூச்சுத்திணறி மயங்கினார். உயிர் பிழைத்து விடக்கூடாது என்பதால் கைமணிக்கட்டை துண்டித்தேன். தமது உடம்பில் எதெல்லாம் உயிர்நாடி என்று பள்ளியில் சொல்லிக் கொடுத்துள்ளனர். அதனை வைத்தே அப்படி செய்தேன்.

    இவ்வாறு மாணவன் அதிரவைக்கும் வகையில் வாக்குமூலம் அளித்துள்ளான்.
    ×