search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காதல் ஜோடி"

    • இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
    • வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு

    நாகர்கோவில்:

    சுசீந்திரம் அருகே மருங்கூர் இசக்கியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லம்பிள்ளை. இவரது மனைவி அமுதா (வயது 48). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இளைய மகள் உமாகவுரி (20). செல்லம்பிள்ளை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

    இதையடுத்து அமுதா தனது 2 மகள்களுடன் நாகர்கோவில் சிதம்பரம் நகரில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். அமுதா நாகர்கோவிலில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றிலும், மகள்கள் இருவரும் சூப்பர் மார்க்கெட் ஒன்றிலும் வேலை பார்த்து வந்தனர்.

    நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்ற உமாகவுரி தனது சகோதரியிடம் முன் கூட்டியே வீட்டிற்கு செல்வ தாக கூறிவிட்டு வந்தார். சிறிது நேரத்துக்கு பிறகு உமா கவுரியின் சகோதரி வீட்டிற்கு வந்தபோது உமா கவுரியும் மருங்கூர் இசக்கி யம்மன் கோவில் தெருவை சேர்ந்த வேணுமோகன் (20) என்பவரும் ஒரே சேலை யில் தூக்கில் பிணமாக தொங்கினார்கள்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் தாயாருக்கும் கோட்டார் போலீசுக்கும் தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். டி.எஸ்.பி. நவீன்குமார் இன்ஸ்பெக்டர் திருமுருகன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் உமா கவுரி, வேணுமோகன் இரு வரும் கடந்த 8 ஆண்டு களாக காதலித்து வந்தது தெரிய வந்துள்ளது. இருவ ரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் தான் உமாகவுரி குடும்பத்தோடு நாகர்கோவிலுக்கு வந்துள் ளார். நாகர்கோவிலுக்கு வந்த பிறகும் வேணுமோகன் உமாகவுரியுடன் செல் போனில் அடிக்கடி பேசி தனது காதலை வளர்த்து வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று வேணுமோகன் தனது காதலி உமாகவுரியிடம் நேரில் சந்தித்து பேசவேண்டும் என்று கூறியுள்ளார்.

    இதையடுத்து வேணு மோகன் நாகர்கோவிலில் உள்ள உமாகவுரி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினையில் தற்கொலை செய்து இருப்பது தெரியவந்துள்ளது.

    காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் வேணுமோகனின் நண்பர் கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.அது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. தற்கொலை செய்து கொண்ட வேணுமோகன், உமாகவுரியின் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    வேணுமோகன் உமாகவுரியின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதை யடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்தனர்.

    தற்கொலை செய்து கொண்ட வேணு மோகன், நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • காதல் ஜோடி திருமணம் செய்த முடிவு செய்தபோது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • இதனால் வீட்டைவிட்டு வெளியேறி பாதுகாப்பு கேட்டு எரியோடு போலீசில் தஞ்சமடைந்தனர்.

    வடமதுரை:

    புதுக்கோட்டை மாவட்டம் காரப்பாடு பகுதியை சேர்ந்தவர் வீரக்குமார் மகள் மோனிஷா. இவருக்கும் மாத்தூர் பகுதியை சேர்ந்த பாலகுமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் காதலாக மாறியது. காதல்ஜோடி திருமணம் செய்ய முடிவு செய்தனர். இருவரும் வெவ்வேறு பிரிவை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி திருமணம் செய்தனர்.

    பின்னர் பாதுகாப்பு கேட்டு எரியோடு போலீசில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் அவர்கள் ெபற்றோரை தொடர்பு கொள்ள முயன்றனர். ேமானிஷாவின் பெற்றோர் வர விருப்பம் இல்லை என தெரிவித்ததால் மாப்பிள்ளை வீட்டாருடன் அவரை அனுப்பி வைத்தனர்.

    ×