search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எரியோடு போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்த காதல் ஜோடி
    X

    தஞ்சமடைந்த காதல் ஜோடி

    எரியோடு போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்த காதல் ஜோடி

    • காதல் ஜோடி திருமணம் செய்த முடிவு செய்தபோது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • இதனால் வீட்டைவிட்டு வெளியேறி பாதுகாப்பு கேட்டு எரியோடு போலீசில் தஞ்சமடைந்தனர்.

    வடமதுரை:

    புதுக்கோட்டை மாவட்டம் காரப்பாடு பகுதியை சேர்ந்தவர் வீரக்குமார் மகள் மோனிஷா. இவருக்கும் மாத்தூர் பகுதியை சேர்ந்த பாலகுமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் காதலாக மாறியது. காதல்ஜோடி திருமணம் செய்ய முடிவு செய்தனர். இருவரும் வெவ்வேறு பிரிவை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி திருமணம் செய்தனர்.

    பின்னர் பாதுகாப்பு கேட்டு எரியோடு போலீசில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் அவர்கள் ெபற்றோரை தொடர்பு கொள்ள முயன்றனர். ேமானிஷாவின் பெற்றோர் வர விருப்பம் இல்லை என தெரிவித்ததால் மாப்பிள்ளை வீட்டாருடன் அவரை அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×