search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்"

    • அந்தியூர் பேரூராட்சியில் மாமன்ற கூட்டம் நடைபெற்றது.
    • 4-வது தீர்மானம் வாசிக்கும்போது வார்டு உறுப்பினர்களால் சலசலப்பு ஏற்பட்டது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. 18 வார்டுகளில் 2 அ.தி.மு.க.வும், ஒரு கம்யூனிஸ்டு கட்சியும், 15 தி.மு.க. உறுப்பினர்களும் உள்ளனர்.

    இந்த நிலையில் அந்தியூர் பேரூராட்சியில் மாதம்தோறும் மாமன்ற கூட்டம் நடைபெறும். அந்த வகையில் இந்த மாதம் மாமன்ற கூட்டம் கடந்த 11-ந் தேதி (வெள்ளிக் கிழமை) நடைபெறுவதாக கவுன்சிலர்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்திருந்தது.

    பேரூராட்சி வார்டு உறுப்பினர்களால் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வகையில் பேரூராட்சியில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.

    இதனைத்தொடர்ந்து கவுன்சிலர்கள் பண்டிகை நடைபெறுவதால் உறவினர்கள் வீட்டிற்கு வந்திருக்கும் காரணத்தை முன்வைத்து மாமன்ற கூட்டத்தை ஒத்தி வைக்குமாறு மனு வழங்கியதாக தெரிவித்தனர்.

    ஆனால் அறிவித்த தேதியில் மாமன்ற கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்ததை தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது. இதில் 35 தீர்மானங்கள் வாசிக்கும் நிலையில் 4-வது தீர்மானம் வாசிக்கும்போது வார்டு உறுப்பினர்களால் சலசலப்பு ஏற்பட்டது.

    இதனையடுத்து மன்ற கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாக பேரூராட்சி மன்ற தலைவரால் அறிவித்து விட்டு அங்கிருந்து தலைவர், துணைத்தலைவர், செயல் அலுவலர், நியமன குழு உறுப்பினர் சென்றனர்.

    இருப்பினும் 10 கவுன்சிலர்கள் மாலை 6 மணி வரை மாமன்ற கூட்டத்தொடர் அறை யிலேயே அமர்ந்திருந்து உள்ளிருப்பு போராட்டம் செய்தனர்.

    மேலும் இங்கு வேறு ஏதேனும் கைகலப்பு ஏற்படும் என்று பேரூராட்சி அலுவலகம் முன் போலீசார் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டிருந்தனர்.

    • தி.மு.க கவுன்சிலர்கள் போராட வேண்டியதாக இருக்கிறது என்றார்.
    • அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனா்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், ஜெகதளா பேரூராட்சியின் மாதாந்திர கூட்டம் பேரூராட்சித் தலைவா் பங்கஜம் தலைமையில் நடைபெற்றது.

    இதில் மொத்தமுள்ள 15 உறுப்பினா்களில் தி.மு.க.வைச் சோ்ந்த 9 கவுன்சிலா்கள், காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 2 கவுன்சிலா்கள், அ.தி.மு.க.வை சோ்ந்த 4 கவுன்சிலா்கள் கலந்து கொண்டனா்.

    இதில் தி.மு.க.வைச் சோ்ந்த 5-வது வாா்டு உறுப்பினா் திலீப், 7-வது வாா்டு உறுப்பினா் யசோதா, 11-வது வாா்டு உறுப்பினா் பிரமிளா வெங்கடேஷ் ஆகியோா் பேரூராட்சியில் ஊழல் முறைகேடு அதிகரித்துள்ளதாக கூறி கண்களில் கருப்புத் துணி கட்டி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

    அப்போது, மாதாந்திர வரவு செலவு கணக்குகளை தெளிவாக சமா்ப்பதில்லை, வாா்டுகளில் எவ்வித அடிப்படை வசதிகளையும் செய்து தருவதில்லை எனவும் குற்றம்சாட்டினா். இதனைத் தொடா்ந்து, மன்ற கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனா்.

    இந்த சம்பவம் குறித்து மாவட்ட கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு செல்ல உள்ளதாக பேரூராட்சி செயல் அலுவலா் சதாசிவம் தெரிவித்தாா்.

    இதுகுறித்து 5-வது வார்டு உறுப்பினர் திலீப் கூறுகையில், ஜெகதளா பேரூராட்சியின் மாதாந்திர கூட்டத்தில் மன்ற தீர்மானங்களை தலைவர் எந்த கவுன்சிலரிடமும் காண்பிப்பது இல்லை. மாதாந்திர வரவு செலவு கணக்குகளும் தெளிவாக காட்டப்படுவதில்லை.

    தலைவரிடம் பிளம்பர் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் ஒரு வார்டில் ஒரு மாதத்திற்கு எத்தனை புகார்கள் அட்டென்ட் செய்கிறார்கள் என்று கேட்டால் பதில் கூறுவதில்லை. மக்களின் அன்றாட பொது ப்ரிச்சனைகளை சரி செய்ய தி.மு.க கவுன்சிலர்கள் போராட வேண்டியதாக இருக்கிறது என்றார்.

    இதுகுறித்து பேரூராட்சி தலைவர் தரப்பினர் கூறும் போது, பேரூராட்சியில் அனைத்து பணிகளும் சரியாக நடைபெறுகிறது. 

    ×