search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவிழ்ந்து விபத்து"

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் எதிர்பாராத விதமாக ரோட்டின் இடது புறம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
    • காயமின்றி தப்பித்த பய ணிகள் 9 பேரையும் கோபி கிளைக்கு தகவல் தெரிவித்து வேறு பஸ்ஸில் அனுப்பி வைத்தனர்

    நம்பியூர்

    ஈரோடு மாவட்டம் கோபி கிளைக்கு உட்பட்ட அரசு பஸ் ஒன்று நேற்று இரவு கோயம்புத்தூரில் இருந்து 9 பயணிகளுடன் கோபி நோ க்கி வந்து கொண்டி ருந்தது. பஸ்சை செந்தில்குமார் என்பவர் ஓட்டினார்.

    பஸ் கெட்டி செவியூர் சுள்ளிக்கரடு பிரிவு பள்ளிக்கூடம் அருகில் வந்துகொ ண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் எதிர்பாராத விதமாக ரோட்டின் இடது புறம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த நடத்துனர் பரிஸ் பாட்ஷா என்பவருக்கு மட்டும் காயம் ஏற்பட்டது.

    பின்னர் இச்சம்பவம் அறிந்து வந்த அருகிலுள்ள திருப்பூர் மாவட்ட குன்ன த்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குறிச்சி வாகன சோதனை சாவடி யில் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து காயம் அடைந்த வரை கோபி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    பின்னர் இதுகுறித்து நம்பியூர் காவல் நிலையத்தி ற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த நம்பியூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பொன்னுசாமி சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்து காயமின்றி தப்பித்த பய ணிகள் 9 பேரையும் கோபி கிளைக்கு தகவல் தெரிவித்து வேறு பஸ்ஸில் அனுப்பி வைத்தனர்.

    • வளைவில் லாரி திரும்பும்போது எதிர்பாராத விதமாக லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
    • பொருள் அங்காடியில் இருந்த நபர்கள் என யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை.

    பவானி, 

    ஓசூர் அத்திப்பள்ளி பகுதியில் இருந்து கேரளா நோக்கி செல்லும் வகையில் 10 சக்கரங்கள் கொண்ட டாரஸ் லாரி இரும்பு பைப் ஏற்றிய லோடு உடன் வந்து கொண்டு இருந்தது.

    இந்த லாரியை மதுரை மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் வசிக்கும் வெடிமுத்து டிரைவர் ஆக ஒட்டி வந்துள்ளார். உடன் கிளீனர் பெருமாள் என இருவர் வந்துள்ளனர்.

    பவானி ஈரோடு செல்லும் மெயின் ரோட்டில் நேற்று மாலை கூடுதுறை கோவிலுக்கு செல்லும் வளைவில் லாரி திரும்பும்போது எதிர்பாராத விதமாக லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

    லாரி கவிழ்ந்த பகுதியில் பல பொருள் அங்காடி ஒன்று இருந்த நிலையில் அந்த கடையின் முன் இருந்த பைக் சேதம் அடைந்துள்ளது. அதேபோல் அதிர்ஷ்டவசமாக லாரியில் வந்த டிரைவர் மற்றும் கிளீனர் பல பொருள் அங்காடியில் இருந்த நபர்கள் என யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை.

    லேசான காயம் அடைந்த டிரைவர் மற்றும் கிளீனர் இருவரையும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த பவானி போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் இரு கிரைன் வரவழைத்து 2 மணி நேரம் போராடி கவிழ்ந்து கிடந்த டாராஸ் லாரியை சம்பவ இடத்திலிருந்து அப்புறப்படுத்தினர். 

    • எதிர்பாராத விதமாக லாரி சாலை ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • இதில் லாரி டிரைவர் காயமின்றி தப்பினார்.

    டி.என்.பாளையம்:

    தென்காசி சங்கரன் கோவில் கூடிய குளம் புதூர் பகுதியை சேர்ந்தவர் சக்தி கணேசன் (35).

    இவர் கோவை பீளமேடு பகுதியில் இருந்து டேங்கர் லாரியில் கழிவு ஆயில் (பர்னஸ் ஆயில்) ஏற்றிக்கொண்டு கர்நாடக மாநிலம் நஞ்சன் கூடு என்ற பகுதியில் உள்ள தனியார் கம்பெனிக்கு செல்ல அத்தாணி-சத்தியமங்கலம் சாலையில் டி.என்.பாளையம் அருகே உள்ள வாணிப்புத்தூர் மேடு என்ற பகுதிக்கு இரவு வந்தார்.

    அப்போது சாலையின் இடது புற ஓரத்தில் டேங்கர் லாரியை நிறுத்த மண் தரையில் இறக்கினார்.

    அப்போது எதிர்பாராத விதமாக லாரி சாலை ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் லாரி டிரைவர் காயமின்றி தப்பினார்.

    ×