search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பஸ் கவிழ்ந்து விபத்து
    X

    அரசு பஸ் கவிழ்ந்து விபத்து

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் எதிர்பாராத விதமாக ரோட்டின் இடது புறம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
    • காயமின்றி தப்பித்த பய ணிகள் 9 பேரையும் கோபி கிளைக்கு தகவல் தெரிவித்து வேறு பஸ்ஸில் அனுப்பி வைத்தனர்

    நம்பியூர்

    ஈரோடு மாவட்டம் கோபி கிளைக்கு உட்பட்ட அரசு பஸ் ஒன்று நேற்று இரவு கோயம்புத்தூரில் இருந்து 9 பயணிகளுடன் கோபி நோ க்கி வந்து கொண்டி ருந்தது. பஸ்சை செந்தில்குமார் என்பவர் ஓட்டினார்.

    பஸ் கெட்டி செவியூர் சுள்ளிக்கரடு பிரிவு பள்ளிக்கூடம் அருகில் வந்துகொ ண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் எதிர்பாராத விதமாக ரோட்டின் இடது புறம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த நடத்துனர் பரிஸ் பாட்ஷா என்பவருக்கு மட்டும் காயம் ஏற்பட்டது.

    பின்னர் இச்சம்பவம் அறிந்து வந்த அருகிலுள்ள திருப்பூர் மாவட்ட குன்ன த்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குறிச்சி வாகன சோதனை சாவடி யில் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து காயம் அடைந்த வரை கோபி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    பின்னர் இதுகுறித்து நம்பியூர் காவல் நிலையத்தி ற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த நம்பியூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பொன்னுசாமி சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்து காயமின்றி தப்பித்த பய ணிகள் 9 பேரையும் கோபி கிளைக்கு தகவல் தெரிவித்து வேறு பஸ்ஸில் அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×