search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக அவதூறான தவறான தகவல்களை பரப்பியவர்கள் மீதும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
    • யூடியூப் சேனல்கள் மீதும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். வாட்ஸ்அப், பேஸ்புக்கில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி, அந்த பள்ளியின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கலவர வீடியோவை ஆதாரமாக வைத்து சம்பந்தப்பட்ட நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

    மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக அவதூறான தவறான தகவல்களை பரப்பியவர்கள் மீதும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக யூடியூப் சேனல்கள் மீதும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். வாட்ஸ்அப், பேஸ்புக்கில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி, டி.ஜி.பி. ஆபீசில் இன்று புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், 'எனது மகளின் மரணம் தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றில் தொடர்ந்து அவதூறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன" என்று குற்றம்சாட்டி உள்ளார்.

    ஸ்ரீமதி பற்றியும் தனது குடும்பத்தினர் பற்றியும் தனிப்பட்ட முறையில் அவதூறு கருத்துக்களை யூடியூப் சேனல் தெரிவித்து வருவதாகவும், எனவே உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஸ்ரீமதியின் தாய் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக விசாரணை நடத்தி அந்த யூடியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவை ஏற்று அமைச்சர்கள் 3 பேரும் தனியார் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்வதற்காக இன்று சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றனர்.
    • 3 பேரும் இன்று பிற்பகலில் பள்ளிக்கு சென்று பார்வையிடுகிறார்கள்.

    சென்னை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி மரணத்தை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் பள்ளிக்கூடம் தீவைத்து எரித்து சூறையாடப்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி.கணேசன் மற்றும் எம்.எல்.ஏ. உதயசூரியன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

    இதனை ஏற்று அமைச்சர்கள் 3 பேரும் தனியார் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்வதற்காக இன்று சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றனர். 3 பேரும் இன்று பிற்பகலில் பள்ளிக்கு சென்று பார்வையிடுகிறார்கள்.

    பின்னர் கலவரம் தொடர்பாக அங்கு முகாமிட்டுள்ள போலீஸ் அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிகிறார்கள்.

    இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தலைமை செயலகத்தில் ஜனாதிபதி தேர்தலில் ஓட்டு போட்டபிறகு நிருபர்களிடம் கூறியதாவது:-

    கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக நேரில் சென்று பார்வையிட முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் அங்கு செல்கிறோம். இந்த விவகாரத்தில் கோர்ட்டு உத்தரவுக்கு ஏற்ப செயல்படுவோம்.

    முதல்-அமைச்சரின் உத்தரவின்பேரில் பள்ளி விவகாரத்தில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×