search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ளக்குறிச்சி கலவரம்"

    • கனியாமூர் பள்ளியில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்கலாம் என ஐகோர்ட் அனுமதி
    • பள்ளி நிர்வாகம் தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில் ஆய்வுக்குழு திருப்தியடைந்துள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக நடந்த போராட்டத்தின்போது கலவரம் வெடித்தது. போராட்டக்காரர்கள் போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தியதுடன் மற்றும் பள்ளிப் பொருட்களை சேதப்படுத்தினர். கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி, தொடர்ந்து கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கள்ளக்குறிச்சியில் தாக்கப்பட்ட பள்ளி சீரமைக்கப்பட்டு விட்டதால், திறக்க அனுமதிக்க கோரி கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை நிர்வகிக்கும் லதா கல்வி அறக்கட்டளை சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணிகளை அரசுத் துறைகளின் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது மாணவர்களுக்கான இருக்கைகள் சரியாக உள்ளனவா? சேதப்படுத்தப்பட்ட சிசிடிவி கேமரா மற்றும் பேருந்துகள் சரிசெய்யப்பட்டனவா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினர். பள்ளி நிர்வாகம் தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில் ஆய்வுக்குழு திருப்தியடைந்துள்ளது. மாணவர்கள் இடை நிற்றல் அதிகமாகி வருவதால், பள்ளியை விரைவாக திறக்க அனுமதிக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.

    அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் சிலம்பண்ணன், ஆய்வு நடத்திய குழுவின் அறிக்கை ஓரிரு நாட்களில் கிடைக்கப்பெறும். அறிக்கை கிடைத்த பின்னர் பள்ளி திறப்பு குறித்து முடிவு செய்யப்படும். மேலும், அடுத்த விசாரணையின்போது இதுகுறித்த அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றார்.

    இரு தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஆய்வுக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அரசு எடுக்கும் முடிவை தாக்கல் செய்ய வேண்டும். தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கள்ளக்குறிச்சி, கனியாமூர் பள்ளியில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்கலாம் என பள்ளி நிர்வாகத்திற்கு அனுமதி அளித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    மேலும், ஒரு மாதத்திற்கு பின்னர் மற்ற வகுப்புகளையும் தொடங்குவது குறித்து முடிவெடுக்கலாம் என தெரிவித்துள்ளது.

    • பள்ளி நிர்வாகம் தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில் ஆய்வுக்குழு திருப்தியடைந்துள்ளதாக வழக்கறிஞர் தகவல்
    • ஆய்வு நடத்திய குழுவின் அறிக்கை ஓரிரு நாட்களில் கிடைக்கப்பெறும் என அரசு தரப்பு வக்கீல் தெரிவித்தார்

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக நடந்த போராட்டத்தின்போது கலவரம் வெடித்தது. போராட்டக்காரர்கள் போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தியதுடன் மற்றும் பள்ளி பொருட்களை சேதப்படுத்தினர். இது கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி, தொடர்ந்து கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் தாக்கப்பட்ட பள்ளி சீரமைக்கப்பட்டு விட்டதால், திறக்க அனுமதிக்க கோரி கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை நிர்வகிக்கும் லதா கல்வி அறக்கட்டளை சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், "பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணிகளை அரசுத் துறைகளின் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது மாணவர்களுக்கான இருக்கைகள் சரியாக உள்ளனவா? சேதப்படுத்தப்பட்ட சிசிடிவி கேமரா மற்றும் பேருந்துகள் சரிசெய்யப்பட்டனவா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினர். பள்ளி நிர்வாகம் தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில் ஆய்வுக்குழு திருப்தியடைந்துள்ளது. மாணவர்கள் இடை நிற்றல் அதிகமாகி வருவதால், பள்ளியை விரைவாக திறக்க அனுமதிக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.

    அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் சிலம்பண்ணன், "ஆய்வு நடத்திய குழுவின் அறிக்கை ஓரிரு நாட்களில் கிடைக்கப்பெறும். அறிக்கை கிடைத்த பின்னர் பள்ளி திறப்பு குறித்து முடிவு செய்யப்படும். மேலும், அடுத்த விசாரணையின்போது இதுகுறித்த அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்" என்றார்.

    இரு தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஆய்வுக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அரசு எடுக்கும் முடிவை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நவம்பர் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    • கடந்த ஒரு வாரமாக நடந்த தடயவியல் குழுவினரின் ஆய்வு பணிகள் தற்போது நிறைவடைந்து உள்ளது.
    • இவர்கள் சேகரித்த தடயங்களின் கோப்புகளை, சிறப்பு புலனாய்வு குழுவுக்கும், சி.பி.சி.ஐ.டி.,க்கும் சமர்ப்பிக்க உள்ளனர்.

    சின்னசேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 2 பயின்ற மாணவி ஸ்ரீமதி மர்மமாக இறந்தது குறித்து கடந்த 17-ந்தேதி கலவரம் வெடித்தது.

    கலவரம் தொடர்பான குற்றவாளிகளை கண்டறிய சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. மாணவி ஸ்ரீமதி இறந்த வழக்கின் விசாரணை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உதவிடும் வகையில், விழுப்புரம் மண்டல தடயவியல்துறை துணை இயக்குனர் சண்முகம் தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. கலவரத்தில் போராட்ட குழுவினர் எந்த வகையான ஆயுதங்களை பயன்படுத்தினர்.

    பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரி பொருட்களை ஏதேனும் பயன்படுத்தியுள்ளனரா? வெளிநபர்கள் வந்து செல்வதற்கான தடயங்களை விட்டுள்ளனரா? சி.சி.டி.வி., வீடியோ ஆதாரங்கள், கடிதங்கள் உள்ளதா? என தடயங்களை தடயவியல் குழுவினர் சேகரித்தனர்.

    கடந்த ஒரு வாரமாக நடந்த தடயவியல் குழுவினரின் ஆய்வு பணிகள் தற்போது நிறைவடைந்து உள்ளது. இவர்கள் சேகரித்த தடயங்களின் கோப்புகளை, சிறப்பு புலனாய்வு குழுவுக்கும், சி.பி.சி.ஐ.டி.,க்கும் சமர்ப்பிக்க உள்ளனர்.

    அதேபோல், கைரேகை பிரிவு அலுவலர்களின் ஆய்வு பணிகளும் நிறைவடைந்தது. ஆனால் தொடர்ந்து வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு அலுவலர்கள் பள்ளி வளாகத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி ரவிக்குமார், முதல்வர் சிவசங்கரன் ஆசிரியைகள் உள்ளிட்ட 5 பேரை, கடந்த 17-ந் தேதி போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
    • கைதான 5 பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க, நீதிபதி உத்தரவிட்டதையொட்டி, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    சின்னசேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 பயின்ற மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ந் தேதி மர்மமான முறையில் இறந்தார்.

    இதையடுத்து நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. அதன்பின்னர் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி ரவிக்குமார், முதல்வர் சிவசங்கரன் ஆசிரியைகள் உள்ளிட்ட 5 பேரை, கடந்த 17-ந் தேதி போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    கைதான 5 பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க, நீதிபதி உத்தரவிட்டதையொட்டி, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மாணவி ஸ்ரீமதி இறந்த வழக்குவிசாரணை சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டது.

    தொடர்ந்து, சிறப்பு புலனாய்வு குழுவினரும், சி.பி.சி.ஐ.டி.,போலீசாரும் பள்ளியில் தினமும் ஆய்வு மற்றும் சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில் சிறையில் உள்ள பள்ளி நிர்வாகத்தினரை காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள சி.பி.சி.ஐ.டி., போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தச்சூர் ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினர் யோசனையின் பேரில், ஊராட்சி தலைவர் உத்தரவுபடி, ஊராட்சி செயலாளர் தண்டோரா போடுவதற்கான ஏற்பாடு செய்தார்.
    • முயற்சிக்கு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் வரவேற்பு கிடைத்துள்ளது.

    சின்னசேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் கடந்த 17-ந்தேதி நடந்த கலவரத்தின்போது மர்ம கும்பல் பள்ளிக்குள் புகுந்து சூறையாடியது. அதோடு பள்ளியில் இருந்த பொருட்களை எடுத்து சென்று உள்ளனர்.

    இதுகுறித்து தச்சூர் கிராமத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் தண்டோரா போடப்பட்டது. அதில், கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் கலவரம் நடந்த போது அங்கிருந்த பொருட்களை தூக்கி வந்து விட்டார்கள். அதை யாரேனும் எடுத்திருந்தால் ஊராட்சி பள்ளியில் வைத்து விடவும். இல்லையெனில் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள்.

    இவ்வாறு அறிவிக்கப்பட்டு உள்ளது.

    தச்சூர் ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினர் பழனிவேல் யோசனையின் பேரில், ஊராட்சி தலைவர் மல்லிகா அண்ணாதுரை உத்தரவுபடி, ஊராட்சி செயலாளர் சிவசூரியன் தண்டோரா போடுவதற்கான ஏற்பாடு செய்தார். இந்த முயற்சிக்கு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் வரவேற்பு கிடைத்துள்ளது. தச்சூரை தொடர்ந்து அருகில் உள்ள ஊராட்சிகளிலும் இதேபோல தண்டோரா போட முடிவுசெய்துள்ளனர்.

    • மாணவியின் வழக்கு குறித்து இன்று உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரஉள்ளது.
    • வழக்கு முடிவை பார்த்து உடலை வாங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என உறவினர் ஒருவர் தெரிவித்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். அவரது மகள் ஸ்ரீமதி (வயது 17). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்திமெட்ரிக் மேல்நிலை பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்த இவர் மர்மமானமுறையில் இறந்தார். மாணவியின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்தது.

    ஐகோர்ட்டு உத்தரவுபடி மருத்துவகுழுவினர் மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்தனர். பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. இறுதிவரை மாணவியின் பெற்றோர் வரவில்லை. மாணவியின் உடல் பரிசோதனை நடந்தது பற்றியும், உடலை பெற்றுக்கொள்ளுமாறும் மாவட்ட வருவாய்துறை மூலம் பெரியநெசலூரில் உள்ள அவரது வீட்டில் வருவாய்துறையினர் நோட்டீஸ் ஒட்டினர். ஆனால் மாணவியின் உடலை பெற்றோர் வாங்க மறுத்துவிட்டனர். அவர்கள் எங்கு உள்ளார்கள் என்ற விபரம் தெரியவில்லை.

    இன்றும் 3-வது நாளாக மாணவியின் உடலை வாங்க பெற்றோர் வரவில்லை. மாணவியின் வழக்கு குறித்து இன்று உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரஉள்ளது. அந்த முடிவை பார்த்து உடலை வாங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என உறவினர் ஒருவர் தெரிவித்தார்.

    இதனைத்தொடர்ந்து மாணவியின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

    • கடலூர் தேவனாம்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் ரோந்துபணியில் ஈடுபட்டனர்.
    • தேவனாம்பட்டினம் கடற்கரையில் 5 பேர் நின்றுகொண்டு சின்னசேலம் கலவரம் பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.

    கடலூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்துவந்த மாணவி ஸ்ரீமதி மரண விவகாரம் தமிழகம் முழுவதும் எதிரொலித்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    யார் யார் வாட்ஸ்அப் மூலம் கலவரத்தை தூண்டும் நோக்கில் செயல்படுகிறார்கள் என்பதை போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    அதன்படி கடலூர் தேவனாம்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் ரோந்துபணியில் ஈடுபட்டனர். அப்போது தேவனாம்பட்டினம் கடற்கரையில் 5 பேர் நின்றுகொண்டு சின்னசேலம் கலவரம் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். கடலூரிலும் இதேபோன்று செய்து மாணவியின் மரணத்துக்கு தீர்வுகாணவேண்டும் என அவர்கள் பேசியதாக போலீசார் காதுக்கு எட்டியது.

    உடனே போலீசார் அவர்களை பிடிக்க முயன்றபோது 4 பேர் தப்பி ஓடிவிட்டனர். அவர்களில் ஒருவர் பிடிபட்டார். அவரது பெயர் விஜய். இவர் கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். இவரது செல்போனை சோதித்தபோது வாட்ஸ்-அப் குழுக்கள் இருந்தது.

    இதனை பரிசோதிக்கும் போது கள்ளக்குறிச்சி கலவரத்தை தூண்ட முயன்றது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் கல்லூரி மாணவர் விஜய்யை கைது செய்தனர். இந்த வாட்ஸ்-அப் குழுவில் இருப்பவர்கள் யார்? அவர்கள் எங்கெல்லாம் உள்ளனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் கள்ளக்குறிச்சி கலவரத்தில் கடலூர் அருகே உள்ள வெள்ளக்கரையை சேர்ந்த கார்த்திக், தினேஷ் ஆகியோர் கலந்து கொண்டது தெரியவந்தது. இவர்களை போலீசார் கைது செய்தனர்.

    இதனைத்தொடர்ந்து கடலூர் போலீஸ் டி.எஸ்.பி. கரிக்கால்பாரிசங்கர் தலைமையில் கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு செல்ல மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

    • கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் அதிகாரிகளுடன் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆலோசனை நடத்தினார்.
    • பள்ளி மீது எடுத்த நடவடிக்கை, எடுக்கவேண்டிய நடவடிக்கைகள், கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கைது நடவடிக்கை எடுப்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார்.

    இந்த இறப்பிற்கு நீதிகேட்டு உறவினர்கள் சொந்த ஊரான பெரிய நெசலூர் கிராமத்தில் கடந்த 5 நாட்களாக போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் எதிரொலித்தது. நேற்று திடீரென ஒன்று திரண்ட போராட்டக்காரர்கள் பள்ளிக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர்.

    அங்குள்ள பஸ்களை சூறையாடி தீ வைத்தனர். இதனால் சின்னசேலம் நகரம் போராட்டக்களமானது. கலவரத்தை தடுக்க போலீசார் துப்பாக்கிசூடு நடத்தினர். ஆனாலும் போராட்டம் ஓயவில்லை.

    இதனைத்தொடர்ந்து போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேரடியாக விரைந்து சென்று அதிரடி நடவடிக்கை எடுத்தார். அதன் விளைவாக கலவரம் கட்டுப்படுத்தப்பட்டது. மேலும் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது.

    கலவரத்தில் ஈடுபட்டதாக 329 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இன்று காலை கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் அதிகாரிகளுடன் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆலோசனை நடத்தினார். அப்போது பள்ளி மீது எடுத்த நடவடிக்கை, எடுக்கவேண்டிய நடவடிக்கைகள், கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கைது நடவடிக்கை எடுப்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவை ஏற்று அமைச்சர்கள் 3 பேரும் தனியார் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்வதற்காக இன்று சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றனர்.
    • 3 பேரும் இன்று பிற்பகலில் பள்ளிக்கு சென்று பார்வையிடுகிறார்கள்.

    சென்னை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி மரணத்தை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் பள்ளிக்கூடம் தீவைத்து எரித்து சூறையாடப்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி.கணேசன் மற்றும் எம்.எல்.ஏ. உதயசூரியன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

    இதனை ஏற்று அமைச்சர்கள் 3 பேரும் தனியார் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்வதற்காக இன்று சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றனர். 3 பேரும் இன்று பிற்பகலில் பள்ளிக்கு சென்று பார்வையிடுகிறார்கள்.

    பின்னர் கலவரம் தொடர்பாக அங்கு முகாமிட்டுள்ள போலீஸ் அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிகிறார்கள்.

    இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தலைமை செயலகத்தில் ஜனாதிபதி தேர்தலில் ஓட்டு போட்டபிறகு நிருபர்களிடம் கூறியதாவது:-

    கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக நேரில் சென்று பார்வையிட முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் அங்கு செல்கிறோம். இந்த விவகாரத்தில் கோர்ட்டு உத்தரவுக்கு ஏற்ப செயல்படுவோம்.

    முதல்-அமைச்சரின் உத்தரவின்பேரில் பள்ளி விவகாரத்தில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாணவியின் பெற்றோர்கள் நீதி கேட்டு மூன்று நாட்கள் போராட்டம் நடத்தி வந்தார்கள்.
    • மாணவி இறப்பு விவகாரத்தில் உளவுத்துறை, காவல்துறை, அரசு செயல் இழந்துள்ளது.

    அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, தெரிவித்ததாவது:

    கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகில் தனியார் பள்ளியில் தங்கி படித்து வந்த மாணவி ஸ்ரீமதி, மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்ததாக ஊடகங்களில் பத்திரிக்கைகளில் செய்திகள் வெளி வந்தன.

    ஆனால் மாணவியின் தாயார் தனது மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். மாணவியின் மரணம் குறித்து நீதி கேட்டு பெற்றோர்கள் மூன்று நாட்கள் போராட்டம் நடத்தி வந்தார்கள். பள்ளி மாணவி மரண விவகாரத்தில் அரசாங்கம், உளவுத்துறை, காவல்துறை செயலிழந்து விட்டது.

    உளவுத்துறை தகவல் மூலம் நடவடிக்கை எடுத்திருக்கலாம். பாதிக்கப்பட்டிருக்கின்ற பெற்றோரை சந்தித்து இந்த அரசு ஆறுதல் சொல்லியிருக்க வேண்டும். மூன்று நாட்கள் காலம் கடத்தியது. மாணவி மரணத்திற்கு நீதி கிடைக்காத நிலையில், உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்கள் கொதித்து எழுந்து போராட்டம் நடத்தினர்.

    திமுக அரசு உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காததே இன்றைய அசாதாரண சூழலுக்கு காரணம். பள்ளி தாக்குதல் சம்பவத்திற்கு அரசு முழு பொறுப்பேற்க வேண்டும். இதேபோல் முன்னாள் மாணவன் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

    தமிழகத்தில் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை நடந்து வருகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து உள்ளது. தமிழகத்தில் மாணவிகள்,பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.திமுக எப்போதும் சொன்னதை செய்தது கிடையாது.

    தேர்தலில் வெற்றி பெற்றவுடன் வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டது. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்துச் செய்யப்படும் என்று சொல்லி விட்டு இதுவரை திமுக அரசு எதுவும் செய்யவில்லை. உயிர்கள் பலியானதுதான் மிச்சம். நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுவதால் ஒபிஎஸ் விவகாரம் குறித்து பேசுவது சரியானது அல்ல. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×