search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லூரி மாணவர் தற்கொலை முயற்சி"

    • கவுதம் நேற்று இரவு வீட்டில் செல்போனில் ‘கேம்’ விளையாடிக் கொண்டிருந்தார்.
    • தாய் ‘பாடம் படிக்காமல் என்ன விளையாட்டு’ என்று கேட்டு கண்டித்ததாக கூறப்படுகிறது.

    போரூர்:

    விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி, இவரது மகன் கவுதம் (வயது18) பாலிடெக்னிக் மாணவர்.

    கவுதம் நேற்று இரவு வீட்டில் செல்போனில் 'கேம்' விளையாடிக் கொண்டிருந்தார். இதை கண்ட அவரது தாய் 'பாடம் படிக்காமல் என்ன விளையாட்டு' என்று கேட்டு கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த கவுதம் வீட்டில் இருந்த ஏராளமான வலி நிவாரணி மாத்திரைகளை சாப்பிட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு கவுதமுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆன்லைன் ரம்மி விளையாடிக் கொண்டிருந்தபோது, கல்லூரி மாணவர் 75 ஆயிரம் ரூபாயை இழந்ததாக தெரிகிறது.
    • பணத்தை இழந்த கல்லூரி மாணவர் மனவேதனை அடைந்து விஷம் குடித்து தற்கொலை முயற்சி ஈடுபட்டுள்ளார்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள சதாசிவபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சீனிவாசன். இவரது மகன் சூரியபிரகாஷ் (வயது 20). இவர், தேவியாக்குறிச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இவர் ஆன்லைன் ரம்மி விளையாடிக் கொண்டிருந்தபோது, 75 ஆயிரம் ரூபாயை இழந்ததாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த மாணவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி ஈடுபட்டுள்ளார். அதை அறிந்த அவரது பெற்றோர், மாணவரை ஆபத்தான நிலையில் ஆத்தூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

    இதுபற்றி ஆத்தூர் ஊரக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×