search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செல்போனில் கேம் விளையாடியதை தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை முயற்சி
    X

    செல்போனில் 'கேம்' விளையாடியதை தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை முயற்சி

    • கவுதம் நேற்று இரவு வீட்டில் செல்போனில் ‘கேம்’ விளையாடிக் கொண்டிருந்தார்.
    • தாய் ‘பாடம் படிக்காமல் என்ன விளையாட்டு’ என்று கேட்டு கண்டித்ததாக கூறப்படுகிறது.

    போரூர்:

    விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி, இவரது மகன் கவுதம் (வயது18) பாலிடெக்னிக் மாணவர்.

    கவுதம் நேற்று இரவு வீட்டில் செல்போனில் 'கேம்' விளையாடிக் கொண்டிருந்தார். இதை கண்ட அவரது தாய் 'பாடம் படிக்காமல் என்ன விளையாட்டு' என்று கேட்டு கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த கவுதம் வீட்டில் இருந்த ஏராளமான வலி நிவாரணி மாத்திரைகளை சாப்பிட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு கவுதமுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×