search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்குவாரி உரிமையாளர்கள்"

    • கல்குவாரி கிரசர் மணல் மற்றும் குவாரி உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
    • தமிழகம் முழுவதும் இன்று 4-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது

    பெருந்துறை,

    தமிழ்நாடு கல்குவாரி கிரசர் மணல் மற்றும் குவாரி உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

    கூட்டத்தில் 2016-ம் ஆண்டு நடை முறையில் உள்ள சிறு கனிம விதிகளை பெரும் கனிம விதிகளுடன் சேர்த்தது. கல் குவாரியில் அனைத்து அதிகாரிகளும் ஆய்வு செய்த பின்பு அனுமதி வழங்கப்பட்ட குவாரிக்கு தனிநபர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் குவாரியை இயங்க விடாமல் அதிகாரிகள் அனுமதி மறுப்பது, சுற்றுச்சூழல் ஆர்வலர் என்ற பெயரில் பணம் பறிக்கும் நோக்கத்தில் தொழிலை நடத்த விடாமல் செய்பவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட 15 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி தீர்மானம் நிறை வேற்ற ப்பட்டது.

    தமிழக அரசும் இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் தமிழ்நாடு கல்குவாரி கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் தமிழக முழுவதும் வேலைநிறுத்த போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி தமிழகம் முழுவதும் இன்று 4-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் முழு வதும் உள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட கல் குவாரி கள் மற்றும் கிரசர் மணல் குவாரிகள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள சரளை பகுதியில் கிரஷர் லாரி உரிமையாளர்கள் 100-க்கும் மேற்பட்ட லாரிகளை ஒரே இடத்தில் நிறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக ஈரோடு மாவட்டம் முழுவதும் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் கட்டுமான பணிகள் சார்ந்த தொழிலாளர்களுக்கும் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    • நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 50 கல்குவாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
    • சேலம் மாவட்டத்திலும் 100-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் மூடப்பட்டுள்ளன.

    நாமக்கல்:

    கடந்த 26 ஆண்டுக்கு முன்னதாக உரிமம் பெற்று இயங்கி வந்த கல்குவாரிகளுக்கு, உரிமம் புதுப்பித்தலின் போது கேட்கப்படும் ஆழ நிர்ணய அளவு குறித்த விதியை நீக்க வேண்டும், கல்குவாரிக்கு அனுமதி அளிக்கப்பட்ட ஒரு கிலோமீட்டர் சுற்றளவை சுரங்க பகுதி என அறிவித்து வேறு எந்த வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளக்கூடாது என்ற உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

    கனிமவள அலுவலகத்தில் உரிமம் கொடுக்கும் முறையை எளிமைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வற்புறுத்தி தமிழக முழுவதும் உள்ள கல்குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர் சங்கத்தினர் நேற்று முதல் மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

    நாமக்கல் மாவட்டத்தில் சேந்தமங்கலம், எலச்சிபாளையம், பரமத்தி, ராசிபுரம், நாமகிரிப்பேட்டை பகுதியில் உள்ள 50 கல்குவாரிகளில் வேலைநிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது. இன்று 2-வது நாளாக இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து நாமக்கல் கனிமவள உதவி இயக்குனர் பூரணவேல் கூறுகையில், நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 50 கல்குவாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. குவாரிகளில் இருந்து உரிமம் கேட்டு நேற்று யாரும் வரவில்லை என்றார்.

    சேலம் மாவட்டத்திலும் 100-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் அதில் பணிபுரிந்த தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மேலும் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி கல்குவாரிகள் மீண்டும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென குவாரி உரிமையாளர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

    ×