search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலை திறனில்"

    • விண்ணப்பிக்க கலெக்டர் வேண்டுகோள்
    • ஏற்கனவே மாவட்ட கலை மன்றத்தின் விருதுகளை பெற்ற கலைஞர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பம் செய்யக்கூடாது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் கலைப்புலமைகளை மேம்படுத்தவும், பாதுகாக்கும் நோக்கிலும், கலைஞர்களின் கலைத் திறனை சிறப்பிக்கும் வகையிலும் கலை பண்பாட்டுத்துறையின் கீழ் மாவட்ட கலெக்டர் தலைமையில் செயல்படும் மாவட்ட கலை மன்றங்களின் வாயிலாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆண்டுதோறும் வயது மற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் சிறந்த 5 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் 2021- 2022 முதல் சிறந்த 15 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கிட அரசு ஆணையிட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் இதுவரையில் 105 கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

    கலை விருதுகள், கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் குமரி மாவட்ட கலை மன்றத்தின் வாயிலாக குமரி மாவட் டத்தில் இயல், இசை, நாடகம் முதலிய கலைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலைகளில் சிறந்து விளங்கும் 15 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க கலெக்டர் தலைமையில் தேர்வாளர் குழு அமைக்கப்பட உள்ளது.

    ஆகவே குமரி மாவட் டத்தை சேர்ந்த பாட்டு, பரத நாட்டியம், கும்மி, கோலாட் டம், மயிலாட்டம், தேவ ராட்டம், தோல்பா வைக் கூத்து, பொம்மலாட்டம், நையாண்டி மேளம், கரகாட்டம், காவடி, பொய்க் கால் குதிரையாட்டம், மரக்கால் ஆட்டம், கோல்கால் ஆட்டம், கழியல் ஆட்டம், கணியான் கூத்து, ஓவியம் சிற்பம், அரசன் அரசியாட்டம், புலியாட்டம், காளை யாட்டம், மானாட் டம், பாம்பாட்டம், குறவன் குறத்தியாட்டம், ஆழி யாட்டம், கைச்சிலம்பாட்டம், சிலம்பாட்டம் (வீரக்கலை) மற்றும் வில்லிசை முதலிய செவ்வியல் கலைகள், நாட்டுப்புற கலைகள் என அனைத்து வகை முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங் கும் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    18 வயதும் அதற்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை இளமணி விருது, 19 முதல் 35 வயதிற்குட்பட்ட கலை ஞர்களுக்கு கலை வளர்மணி விருது, 36 முதல் 50 வய திற்குட்பட்ட கலைஞர்க ளுக்கு கலை சுடர்மணி விருது, 51 முதல் 65 வயதிற்குட்பட்ட கலை ஞர்களுக்கு கலை நன்மணி விருது, 66 வயதிற்கு மேற்பட்ட கலைஞர்களுக்கு கலை முதுமணி விருது என்ற நிலைகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

    வயது மற்றும் கலைப்புல மையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் 15 சிறந்த கலைஞர்களுக்கு பொற்கிழி, பட்டயம் மற்றும் பொன்னாடை வழங்கப் படும். குமரி மாவட்டத்தில் தேசிய விருதுகள், மாநில விருதுகள், மாநில விருதுகள் (கலைமாமணி) மற்றும் ஏற்கனவே மாவட்ட கலை மன்றத்தின் விருதுகளை பெற்ற கலைஞர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பம் செய்யக்கூடாது.

    மேலும் கடந்த ஆண்டு களில் ஏற்கனவே விருதுக்கு விண்ணப்பம் செய்த கலை ஞர்கள் தற்போது புதியதாக கண்டிப்பாக விண்ணப்பம் அனுப்ப வேண்டும். இந்நிலை யில், குமரி மாவட்டத்தை சேர்ந்த தகுதி வாய்ந்த கலைஞர்கள் விருதுகள் பெறுவதற்கான விண்ணப்பத்து டன் வயதுச்சான்று, முகவரிச் சான்று மற்றும் கலை அனுபவச் சான்றுகளின் நகல்களுடன் (தொலைபேசி எண்ணுடன்) உதவி இயக்குநர், மண்டல கலை பண்பாட்டு மையம், 870/21, அரசு அலுவலர் 'ஆ' குடியிருப்பு, (தொழிலாளர் வைப்பு நிதி அலுவலகம் அருகில்) திருநெல்வேலி-7 என்ற முகவரிக்கு 20 நாட்களுக்குள் விண்ணப் பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×